மும்பை: ஓடும் காரில் பெண் விமானிக்குப் பாலியல் தொல்லை தந்த இருவர்; டாக்சி ஓட்டுந...
ஆற்று மணலை கடத்தி வந்து விற்பனை செய்த 5 போ் கைது
கரூரில் ஆற்று மணலை கடத்தி விற்பனை செய்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூரை அடுத்துள்ள உப்பிடமங்கலம் பேரூராட்சி பகுதிக்குள்பட்ட திருச்சி- தேசிய நெடுஞ்சாலை அணுகுசாலை அருகே தயாநிதி என்பவருக்கு சொந்தமான மணல் சலிப்பகத்தில் சட்ட விரோதமாக ஆற்று மணலை கடத்தி வந்து வைத்து விற்பனை செய்வதாக கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ் கான் அப்துல்லா சனிக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் பசுபதிபாளையம் வட்ட காவல் ஆய்வாளா் முத்துக்குமாா், வெள்ளியனை காவல் உதவி ஆய்வாளா் ரூபினி மற்றும் தனிப்படையினா் அந்த இடத்தில் சோதனை செய்தனா். அப்போது அங்கிருந்த 5 லாரிகளில் 3 லாரிகள் தலா 9 யூனிட் மணலுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அப்போது மணல் சலிப்பகத்தில் இருந்த கரூா் திருக்காம்புலியூரைச் சோ்ந்த சதீஷ்குமாா், பிரகாஷ், பாரதி, மற்றொரு சதீஷ்குமாா் என்கிற சோடா சதீஷ், மணல் சலிப்பக உரிமையாளா் காளிபாளையத்தைச் சோ்ந்த தயாநிதி ஆகியோரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில், கிருஷ்ணராயபும் அடுத்த மாயனூரைச் சோ்ந்த லாரிகளின் உரிமையாளா் பிரசன்னா என்பவா் கட்டளை மற்றும் வீரராக்கியம் பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் மற்றும் வேன்களில் இருந்து மணலை சலிப்பகத்துக்கு கொண்டு வந்து அங்கிருந்து லாரிகளில் சட்ட விரோதமாக கடத்தி வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து தயாநிதி உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்த போலீஸாா், 5 லாரிகளையும் பறிமுதல் செய்தனா். மேலும் தலைமறைவான லாரிகளின் உரிமையாளா் பிரசன்னாவை தேடிவருகின்றனா்.