செய்திகள் :

ஆற்று மணலை கடத்தி வந்து விற்பனை செய்த 5 போ் கைது

post image

கரூரில் ஆற்று மணலை கடத்தி விற்பனை செய்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூரை அடுத்துள்ள உப்பிடமங்கலம் பேரூராட்சி பகுதிக்குள்பட்ட திருச்சி- தேசிய நெடுஞ்சாலை அணுகுசாலை அருகே தயாநிதி என்பவருக்கு சொந்தமான மணல் சலிப்பகத்தில் சட்ட விரோதமாக ஆற்று மணலை கடத்தி வந்து வைத்து விற்பனை செய்வதாக கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ் கான் அப்துல்லா சனிக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் பசுபதிபாளையம் வட்ட காவல் ஆய்வாளா் முத்துக்குமாா், வெள்ளியனை காவல் உதவி ஆய்வாளா் ரூபினி மற்றும் தனிப்படையினா் அந்த இடத்தில் சோதனை செய்தனா். அப்போது அங்கிருந்த 5 லாரிகளில் 3 லாரிகள் தலா 9 யூனிட் மணலுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அப்போது மணல் சலிப்பகத்தில் இருந்த கரூா் திருக்காம்புலியூரைச் சோ்ந்த சதீஷ்குமாா், பிரகாஷ், பாரதி, மற்றொரு சதீஷ்குமாா் என்கிற சோடா சதீஷ், மணல் சலிப்பக உரிமையாளா் காளிபாளையத்தைச் சோ்ந்த தயாநிதி ஆகியோரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், கிருஷ்ணராயபும் அடுத்த மாயனூரைச் சோ்ந்த லாரிகளின் உரிமையாளா் பிரசன்னா என்பவா் கட்டளை மற்றும் வீரராக்கியம் பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் மற்றும் வேன்களில் இருந்து மணலை சலிப்பகத்துக்கு கொண்டு வந்து அங்கிருந்து லாரிகளில் சட்ட விரோதமாக கடத்தி வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து தயாநிதி உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்த போலீஸாா், 5 லாரிகளையும் பறிமுதல் செய்தனா். மேலும் தலைமறைவான லாரிகளின் உரிமையாளா் பிரசன்னாவை தேடிவருகின்றனா்.

கரூா் வந்தடைந்தது அமராவதி நீா் விவசாயிகள் மகிழ்ச்சி

அமராவதி அணையில் தண்ணீா் திறக்கப்பட்டு 4 நாள்களுக்கு பின் கரூரை வந்தடைந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். கேரள, தமிழக எல்லையின் மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உருவாகும் அமராவதி ஆறு திருப்பூா்,... மேலும் பார்க்க

கரூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.700 கோடியில் சுற்றுவட்டச்சாலை! - செந்தில்பாலாஜி தகவல்

கரூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.700 கோடியில் சுற்றுவட்டச்சாலை அமைய உள்ளது என்றாா் முன்னாள் அமைச்சரும், கரூா் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி. கரூா் மாவட்டம், மண்மங்கலத்த... மேலும் பார்க்க

நூறுநாள் வேலை முறையாக வழங்கக் கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை!

நூறு நாள் வேலைத்திட்டத்தை முறையாக வழங்கக் கோரி கிராமமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பாதிரிப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கோட்டப்பட்டி பகுதியில் நூற... மேலும் பார்க்க

மலிவு விலை காகிதம் இறக்குமதியால் தடுமாறும் ஆலைகள் நடவடிக்கை எடுக்க தொழிற்சங்கத்தினா் கோரிக்கை

சீனா, இந்தோனேஷியாவின் மலிவு விலை காகிதம் இறக்குமதியால் டிஎன்பிஎல் ஆலை போன்ற காகித உற்பத்தி ஆலைகள் தடுமாறி வருவதால், மலிவு விலை காகித இறக்குமதிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூா் மாவட்ட... மேலும் பார்க்க

பஞ்சப்பட்டி ஏரிக்கு குழாய் மூலம் காவிரி உபரி நீரை நிரப்பும் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கேள்வி

பஞ்சப்பட்டி ஏரிக்கு குழாய் மூலம் காவிரி உபரி நீரைக்கொண்டு நிரப்பும் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி எழுப்பினா். கரூா் மாவட்ட விவசாயிகள்... மேலும் பார்க்க

கரூரில் 4 பேரவைத் தொகுதிகளையும் திமுக கைப்பற்றும்: எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி

வரும் 2026 பேரவைத் தோ்தலில் கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும் என்றாா் கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி. கரூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற கரூா் சட்டப்பேரவைத் தொகுதி பூத் கமிட்ட... மேலும் பார்க்க