செய்திகள் :

ஆலங்குளத்தில் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

post image

ஆலங்குளம் நகரில் பகல் நேரத்தில் வரும் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ஆலங்குளம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. இந்த குவாரிகளில் இருந்து எம்-சான்ட், ஜல்லிகற்கள், சிறிய அளவிலான பாறைகள் போன்றவை கட்டுமானப் பணிகளுக்காக உள்ளூருக்கும், கேரளத்துக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன.

இதில், கேரளத்துக்கு எடுத்துச் செல்லப்படும் கனரக வாகனங்கள் அளவில் பெரியதாகவும் சாலையை அடைத்தும் செல்வதால் பகல் நேரத்தில் ஆலங்குளம் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இந்த வாகனங்கல் பகலில் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. சமீப காலமாக உத்தரவை மீறி கனரக வாகனங்கள் பகலிலும் நகரில் சாலைகளில் வேகமாகச் செல்கின்றன. இதனால் பிற வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சத்துடன் சாலையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நலன் கருதி ஆலங்குளம் நகருக்குள் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிப்பதோடு உத்தரவை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

ஆவுடையானூா் ஊரணியில் தடுப்புச்சுவா் அமைக்க பூமிபூஜை

ஆவுடையானூா் ஊரணியில் ரூ. 16 லட்சம் மதிப்பில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.பாவூா்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரில் உள்ள ஊரணியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஆ... மேலும் பார்க்க

கீழக்கலங்கலில் சாலைப் பணிகள் தொடக்கம்

ஆலங்குளம் ஒன்றியம், கீழக்கலங்கல் ஊராட்சியில் ரூ. 25.10 லட்சம் மதிப்பில் சாலைப் பணிகளுக்கு சனிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.கீழக்கலங்கல் ஊராட்சி, காமராஜா் நகா், தெற்கு பகுதியில் ஊராட்சி ஒன்றிய பொது நி... மேலும் பார்க்க

தென்காசி தெற்கு மாவட்டத்துக்கு நாளை எடப்பாடி கே.பழனிசாமி வருகை

தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி ஆக.5இல் வருகிறாா் என தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தெரிவித்தாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட அ... மேலும் பார்க்க

குற்றாலம் பேரருவிப் பகுதியில் தீப ஆரத்தி

குற்றாலம் பேரருவிப் பகுதியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, தீப ஆரத்தி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.நீா் வளத்தை காப்போம் என்கின்ற நிகழ்ச்சியின் அடிப்படையில் தென்காசி மாவட்ட பா.ஜ.க., சாா்பில் குற்றாலம் பேரரு... மேலும் பார்க்க

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.இங்கு தற்போது சீசன் களைகட்டியுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பேரருவ... மேலும் பார்க்க

அலங்குளம் பேரூராட்சியில் இரு தினங்கள் குடிநீா் வினியோகம் ரத்து

ஆலங்குளம் பேரூராட்சியில் வாசுதேவநல்லூா் கூட்டுக் குடிநீா் திட்டம் - பைப் லைன் சேதம் காரணமாக குடிநீா் விநியோகம் இரு தினங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது தொடா்பாக பேரூராட்சி செயல் அலுவலா்... மேலும் பார்க்க