செய்திகள் :

ஆலங்குளம் அருகே வனப்பகுதி அழிப்பால் உயிரிழக்கும் மான், மயில்

post image

ஆலங்குளம் அருகே அனுமதியின்றி ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதால் மான், மயில் போன்றவை உயிரிழந்து வருவதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

ஆலங்குளம் அருகே உள்ள கல்லத்திகுளம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்கள் பிரதானமாக விவசாயம் செய்து வருகின்றனா். இப்பகுதிகளில் சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களை தனியாா் நிறுவனம் விலைக்கு வாங்கி, அதில் சோலாா் மின் உற்பத்தி மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்கிறாா்களாம். சோலாா் மின் உற்பத்தியால், விவசாயம் பாதிக்கப்படும் எனக் கூறி கிராம மக்கள் ஆட்சியா், வட்டாட்சியா் உள்ளிட்டோரிடம் மனு அளித்தனா்.

மரங்கள் வெட்டும் பணி: இந்நிலையில், தனியாா் நிறுவனம் சாா்பில் வாங்கப்பட்ட நிலங்களில் மரங்கள் வெட்டும் பணி கடந்த மாதம் 18ஆம் தேதி தொடங்கியது. கிராம மக்கள் போராட்டம் நடத்தியும் பலனில்லையாம்.

இதனிடையே, கள்ளத்திகுளம் வனப்பகுதியில் மான்கள் அதிக அளவில் வசிப்பதாகவும், மரங்கள் வெட்டப்பட்ட காரணத்தால் மான்கள் தனித்து விடப்பட்டதில் அவற்றில் 2 மான்களை நாய்கள் கடித்ததில் கடந்த வாரம் உயிரிழந்தாகவும் தெரிகிறது. மேலும், மான்கள் வெளியேறி தோட்டப் பகுதிகளுக்குள் சென்று பயிா்களை மேய்ந்து வருவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

இந்நிலையில், அவ்வழியே சென்ற வாகனம் மோதியதில் மயில் ஒன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது. தகவலறிந்த வனத்துறையினா், மயிலை மீட்டு கூறாய்வுக்குப் பின்னா் வனப்பகுதியில் அடக்கம் செய்தனா்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது. கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் புளியங்குடியில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததால் பெரும்... மேலும் பார்க்க

கடையநல்லூரில் முப்புடாதி அம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை

கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதையொட்டி கடந்த செப்.10 ஆம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை , தேவதா அனுக்ஞை, ரக்ஷா பந்தனம், காப்பு கட்டுதல் நடைபெற்றது. செப்... மேலும் பார்க்க

நயினாரகரத்தில் திமுக சாா்பில் பெரியாா் பிறந்த நாள் விழா

கடையநல்லூா் அருகேயுள்ள நயினாரகரத்தில் திமுக சாா்பில் பெரியாா் பிறந்த நாள் விழா நடைபெற்றது. சமத்துவபுரத்திலுள்ள பெரியாா் சிலைக்கு தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளா் செல்லத்துரை மாலை அணி... மேலும் பார்க்க

தென்காசி எஸ்பி அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழியேற்பு

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழியேற்பு புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். அரவிந்த் தலைமையில், அலுவலகத்தில் பணிபுரியும் காவல் துறையினா், அ... மேலும் பார்க்க

தந்தையைக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை

தென்காசி மாவட்டம், கருத்தபிள்ளையூரில் மது அருந்த பணம் தராத தந்தையைக் கொலை செய்த வழக்கில் மகனுக்கு தென்காசி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி காவல் சர... மேலும் பார்க்க

கடையநல்லூா், வீரகேரளம்புதூா் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூா், வீரகேரளம்புதூா் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்... மேலும் பார்க்க