செய்திகள் :

ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்? புறக்கணித்த கேரள அரசு!

post image

கேரள ஆளுநர் மாளிகையில் பயன்படுத்தப்பட்ட பாரத மாதவின் படம் குறித்த விவகாரத்தில், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியை அம்மாநில அரசு புறக்கணித்துள்ளது.

கேரளத்தின் ஆளுநர் மாளிகையில், உலகச் சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு இன்று (ஜூன் 5), மாநில அரசு மற்றும் ஆளுநர் சார்பில் விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிகழ்ச்சி மேடையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயன்படுத்தப்படும் பாரதமாதாவின் உருவப் படத்தை காட்சிப்படுத்த ஆளுநர் மாளிகை வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த நிகழ்ச்சிகளை கேரள மாநில அரசு புறக்கணித்துள்ளது.

இதுகுறித்து, கேரள வேளாண்துறை அமைச்சர் பி பிரசாத் கூறுகையில், மாநில அரசு பாரத மாதாவை மதிக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பயன்படுத்தும் பாரத மாதாவின் உருவத்தை, ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அலுவலக நிகழ்ச்சியில் பயன்படுத்தியிருப்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது:

“இந்த விழாவின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆளுநர் மாளிகை அதிகாரிகள் மட்டுமே தொகுத்தனர். நாங்கள் அதனை ஏற்றோம். ஆனால், நேற்று (ஜூன் 4) அவர்கள் திடீரென புதியதாக ஒரு நிகழ்ச்சியை இணைத்தனர். அதில், பாரதமாதாவின் படத்துக்கு மலர் மரியாதைச் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது அரசியலமைப்புக்கு எதிரானது; ஏனெனில், அந்தப் படம் பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால் பயன்படுத்தப்படுகிறது. இதனால், நாங்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை தலைமைச் செயலகத்திலுள்ள தர்பார் ஹாலுக்கு மாற்றினோம்.” எனப் பேசியுள்ளார்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியானது மாநில அரசின் சார்பில் தலைமைச் செயலக வளாகத்தில் இன்று (ஜூன் 5) காலை 11 மணியளவில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், இந்த நிகழ்ச்சி குறித்து கேரள ஆளுநர் மாளிகையின் தரப்பில், ஆளுநர் ராஜேந்தர விஷ்வநாத் அர்லேக்கரின் உரையுடன் கூடிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், உலகச் சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சிகளை ஆளுநர் மாளிகையில் நடத்தவேண்டுமென முதலில் கேரள வேளாண்துறை அமைச்சர்தான் கேட்டுக்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:

“ஆளுநர் மகிழ்ச்சியுடன் அனுமதி அளித்தார். ஆனால், மேடையில் இடம்பெற்ற பாரத மாதாவின் உருவப்படத்தை அகற்ற வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தியதால், அந்தக் கோரிக்கையை ஆளுநர் நிராகரிக்க வேண்டியதாயிற்று. இதைத் தொடர்ந்து, அமைச்சர் இந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்துள்ளார்.” எனக் கூறப்பட்டுள்ளது.

இத்துடன், காலை மற்றும் மாலை என இருவேளை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் கலந்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அதை முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:சிக்கிம் நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட 63 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க