செய்திகள் :

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த நாங்கள் தயாராக இருக்கிறோம்: ஹர்மன்பிரீத் கௌர்

post image

ஆஸ்திரேலியா உள்பட எந்த ஒரு வலிமையான அணியையும் தங்களால் வீழ்த்த முடியும் என இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த மாத இறுதியில் தொடங்குகிறது. போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகின்றன. வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இலங்கையை எதிர்த்து விளையாடுகிறது.

ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை (செப்டம்பர் 14) சண்டீகரில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியா உள்பட எந்த ஒரு வலிமையான அணியையும் தங்களால் வீழ்த்த முடியும் என இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது: கடந்த ஓராண்டாக இந்திய அணி மிகவும் கடினமாக உழைத்து வருகிறது. இந்திய அணியின் கடின உழைப்புக்கான பலன் ஒவ்வொரு நாளும் தெரிகிறது. ஆஸ்திரேலிய அணி சிறப்பாக உள்ளது. நீண்ட காலமாக ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்த பந்தயத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் தற்போது இந்திய அணியும் இணைந்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்திய அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அணியில் உள்ள அனைவரும் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த முடியும் என நினைக்கிறார்கள். கடந்த காலங்களில் கடினமாக உழைத்ததன் பயனை எங்களால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. குறிப்பாக, ஃபீல்டிங் மற்றும் ஃபிட்னஸில் இந்திய அணி சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளது. போட்டியின் முடிவுகளும் எங்களுக்கு சாதகமாக வரத் தொடங்கிவிட்டது.

ஆஸ்திரேலிய அணி போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. உலகின் பல்வேறு நாடுகளிலும் அவர்கள் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஆனால், இந்திய அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணி உள்பட எந்த ஒரு வலுவான அணியையும் எந்த ஒரு போட்டியிலும் எங்களால் வீழ்த்த முடியும் என நம்புகிறேன். இந்திய அணியில் உள்ள வீராங்கனைகள் பலரும் கடந்த சில ஆண்டுகளாக ஒன்றாக இணைந்து விளையாடி வருகிறார்கள். எங்களால் அணிக்காக என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்குத் தெரியும் என்றார்.

Indian team captain Harmanpreet Kaur has said that they can defeat any strong team, including Australia.

இதையும் படிக்க: இலங்கை அணி ஆசிய கோப்பை நடப்பு சாம்பியனா? என்ன சொல்கிறார் சரித் அசலங்கா?

ஆசிய கோப்பை: இலங்கைக்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் 5 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நடைபெற்று வரும் இன்றை... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் நாளை மோதல்; கௌதம் கம்பீர் கொடுத்த முக்கிய அறிவுரை!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வீரர்களுக்கு முக்கிய அறிவுரையை வழங்கியுள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் த... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை: வங்கதேசத்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் இலங்கை... மேலும் பார்க்க

இலங்கை அணி ஆசிய கோப்பை நடப்பு சாம்பியனா? என்ன சொல்கிறார் சரித் அசலங்கா?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சாம்பியன் இலங்கை அணி என அந்த அணியின் கேப்டன் சரித் அசலங்கா கூறியுள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் இன்று (செப்டம்பர் 13) நடைபெறும் போட்டியில் இலங... மேலும் பார்க்க

விராட் கோலி ஓய்வு பெற்றிருக்கக் கூடாது: தலிபான் தலைவர்

இந்திய வீரர் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்கக் கூடாதென தலிபான் தலைவர் பேசியது கவனம் ஈர்த்து வருகிறது. விராட் கோலி 50 வயதுவரை விளையாட வேண்டுமென்றும் அவர் பேசியது ரசிகர்கள் மத்த... மேலும் பார்க்க

ஆசிய கோப்பையை வெல்வதே முக்கிய இலக்கு, இந்தியாவை வெல்வது மட்டுமல்ல: பாக். வீரர்

இந்தியாவை வெல்வது மட்டும் தங்களது இலக்கு அல்ல எனவும், ஆசிய கோப்பையை வெல்வதுதான் தங்களது முக்கிய இலக்கு எனவும் பாகிஸ்தான் வீரர் தெரிவித்துள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான... மேலும் பார்க்க