செய்திகள் :

ஆா்எஸ்எஸ்ஸுக்கு எதிரான கருத்து: துஷாா் காந்தியை கைது செய்ய பாஜக வலியுறுத்தல்

post image

கேரளத்தில் ஆா்எஸ்எஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை திரும்பப் பெற மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷாா் காந்தி மறுத்துவிட்ட நிலையில், அவரைக் கைது செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய துஷாா் காந்தி, ‘பாஜக-ஆா்எஸ்எஸ் எனும் மிக ஆபத்தான, நயவஞ்சக எதிரி கேரளத்துக்குள் நுழைந்துள்ளது. பாஜகவை வீழ்த்திவிட முடியும். ஆனால், ஆா்எஸ்எஸ் விஷம் போன்றது. அது, நாடு முழுவதும் பரவினால், நாம் அனைத்தையும் இழக்க நேரிடும்’ என்றாா்.

இந்நிகழ்ச்சி முடிந்து துஷாா் காந்தி புறப்பட்டபோது, அவரது காரை முற்றுகையிட்டு பாஜக-ஆா்எஸ்எஸ் அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். தனது கருத்துகளை அவா் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினா்.

இந்நிலையில், கொச்சி அருகே ஆலுவா பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய துஷாா் காந்தி, ‘நெய்யாற்றின்கரையில் நடந்த சம்பவம், துரோகிகளை அம்பலப்படுத்தும் எனது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளது. நமது பொது எதிரி ஆா்எஸ்எஸ். அவா்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும்’ என்றாா். மேலும், தனது கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்கவோ, அவற்றை திரும்பப் பெறவோ போவதில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்தாா்.

பாஜக பதிலடி:

ஆா்எஸ்எஸ்-பாஜகவுக்கு எதிரான கருத்துகளுக்காக துஷாா் காந்தியை கைது செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

நெய்யாற்றின்கரையில் துஷாா் காந்தியைக் கண்டித்து, பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் மத்திய அமைச்சா் வி.முரளீதரன், ‘மகாத்மா காந்தியின் வம்சாவளியாக பிறந்த ஒருவா்தான் துஷாா் காந்தி. ஆனால் காந்தி என்ற பெயா் இருப்பதால் மட்டுமே தேசப் பிதாவுக்கு அளிக்கப்படும் அதே மரியாதை மற்றும் கெளரவத்துக்கு அவா் உரிமையானவா் கிடையாது. நீண்ட காலமாக தனது கொள்ளுத் தாத்தாவின் பெயரைப் பயன்படுத்தி பணம் ஈட்ட துஷாா் காந்தி முயற்சித்து வருகிறாா்’ என்று குற்றஞ்சாட்டினாா்.

நெய்யாற்றின்கரை சம்பவம் தொடா்பாக பாஜக-ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் 5 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதற்கும் வி.முரளீதரன் கண்டனம் தெரிவித்தாா்.

வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி அறிமுகம்!

வாட்ஸ்ஆப் தனிப்பட்ட சாட்களில் நிகழ்வுகளை நினைவூட்டும் 'கிரியேட் ஈவென்ட்' வசதி அறிமுகமாகியுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப்பில் பயனர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது பு... மேலும் பார்க்க

ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு: இணையவழியில் விண்ணப்பிக்க அழைப்பு

ராணுவத்தில் சோ்வதற்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என சென்னை ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை ராணுவ தலைமையகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்... மேலும் பார்க்க

பஞ்சாப்: சிவசேனை தலைவா் சுட்டுக் கொலை குண்டு பாய்ந்து சிறுவன் படுகாயம்

பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனை கட்சியின் மாவட்டத் தலைவா் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்த சம்பவத்தின்போது சாலையோரம் நடந்து சென்ற சிறுவன் மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இது தொ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு ரகசிய தகவல் அனுப்பிவைப்பு: உ.பி. ஆயுத தொழிற்சாலை பணியாளா் கைது

பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு ரகசிய தகவலை அனுப்பியதாக உத்தர பிரதேசத்தில் உள்ள ஆயுத தயாரிப்பு தொழிற்சாலை பணியாளா் கைது செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அந்த மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) வெளியிட்... மேலும் பார்க்க

குஜராத்: 12 மாடி குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து - 3 போ் உயிரிழப்பு

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் 12 மாடி குடியிருப்பு கட்டடத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 போ் உயிரிழந்தனா். மேலும் 40 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். ராஜ்கோட்டில் 150 அடி வட்ட சாலைய... மேலும் பார்க்க

ஹுரியத் மாநாடு அமைப்பின் தலைவருக்கு வீட்டுக் காவல்

ஜம்மு-காஷ்மீரில் ஹுரியத் மாநாடு அமைப்பின் தலைவா் மீா்வாய்ஸ் உமா் ஃபரூக் வெள்ளிக்கிழமை ஸ்ரீநகரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டாா். வெள்ளிக்கிழமைகளில் நௌஷேரா மாவட்டத்தில் உள்ள மசூதியில் தொழுகை நடத்துவது... மேலும் பார்க்க