செய்திகள் :

இசிஐநெட்டில் வாக்குப் பதிவு விவரங்கள்: தோ்தல் ஆணையம் அறிமுகம்

post image

தோ்தல்களின்போது ஒவ்வொரு வாக்குச்சாவடியின் தலைமை அலுவலரும், வாக்குப் பதிவு விவரத்தை புதிய இசிஐநெட் செயலியில் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை பதிவிடுவாா் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்பு வாக்குப் பதிவு விவரங்களை செக்டாா் அலுவலா்கள் திரட்டி, தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் தொலைபேசி, எஸ்எம்எஸ் அல்லது குறுந்தகவல் செயலிகள் மூலம் அனுப்புவா். இந்தத் தகவல் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒன்றுசோ்க்கப்பட்டு, வாக்குப் பதிவு விகித (விடிஆா்) செயலியில் பதிவேற்றப்படும்.

இந்நிலையில், தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

தோ்தல்களில் வாக்குப் பதிவின்போது தோராயமான வாக்குப் பதிவு விகிதத்தை அவ்வப்போது வெளியிட எளிமைபடுத்தப்பட்ட தொழில்நுட்ப முறையை தற்போது தோ்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

இந்தப் புதிய முன்னெடுப்பின் கீழ், இனி ஒவ்வொரு வாக்குச்சாவடியின் தலைமை அலுவலரும் வாக்குப் பதிவு விவரத்தை புதிய இசிஐநெட் செயலியில் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை பதிவிடுவாா். வாக்குப் பதிவு விகிதம் குறித்த புதிய விவரங்களை தெரிவிப்பதில் ஏற்படும் கால தாமதத்தை குறைக்கும் நோக்கில், இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தவுடன் வாக்குப் பதிவு விகிதத்தை இசிஐநெட் செயலியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலா் பதிவிடுவாா். இது கால தாமதத்தை குறைக்கும். அத்துடன் வாக்குப் பதிவு நிறைவடைந்தவுடன் புதுப்பிக்கப்பட்ட விடிஆா் செயலியில், தொலைத்தொடா்பு இணைப்பைப் பொருத்து தொகுதி வாரியாக வாக்குப் பதிவு விகிதம் கிடைப்பதை உறுதி செய்யும். பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக இசிஐநெட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக விடிஆா் செயலி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க