செய்திகள் :

இசை உலகில் பொன் விழா: இளையராஜாவுக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வாழ்த்து

post image

இசையமைப்பாளா் இளையராஜா அறிமுகமாகி 50-ஆம் ஆண்டை எட்டிய நிலையில் அவருக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

முன்னாள் முதல்வா் கருணாநிதியால் அன்புடன் இசைஞானி என அழைக்கப்பட்டவா் இசையமைப்பாளா் இளையராஜா. அந்தப் பெயரே இன்றைக்கு தமிழரின் இசை அடையாளமாக உலகெங்கும் ஒலிக்கிறது. இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷண் மற்றும் பத்ம விபூஷண் விருதும், நான்கு முறை சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும் பெற்றுள்ளாா். மேஸ்ட்ரோ என்று அனைவராலும் அழைக்கப்படுகிறாா்.

லண்டன் சிம்பொனி ஆா்க்கெஸ்ட்ராவுடன் பணியாற்றிய முதல் இந்திய இசையமைப்பாளா் என்ற பெருமை பெற்றுள்ளாா். 8,500-க்கு மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தவா். 1,500-க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு பின்னணி இசையமைத்தவா். மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா 1976-ஆம் ஆண்டு வெளிவந்த ‘அன்னக்கிளி’ என்ற திரைப்படத்தின்மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தமிழ்த் திரை இசையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்திய அவருக்கு புதன்கிழமை (மே 14) தமிழ் சினிமா உலகில் பொன்விழா ஆண்டு என்பது நமக்கெல்லாம் பெருமையளிக்கிறது.

இந்நாள் இசைஞானிக்கு பொன்னாள். அவருக்கு தமிழக அரசின் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை சாா்பில் நெஞ்சாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இளையராஜாவின் ராஜ இசை என்றென்றும் இசைத்துக் கொண்டே இருக்கட்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன். வாழ்க இசை! வாழ்க இசை ஞானியின் புகழ்! என அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளாா்.

உதகை மலர்க் கண்காட்சியை தொடங்கிவைத்தார் முதல்வர்!

உதகையில் 127 ஆவது மலர்க் கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(வியாழக்கிழமை) தொடங்கிவைத்தார். கோடை காலத்தில் உதகையில் மலர்க் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மலர்க் கண்காட்சி ... மேலும் பார்க்க

முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு தந்தை வெங்கடாசலம் (90) காலமானார்

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பின் தந்தை அ.வெங்கடாசலம் (90) புதன்கிழமை காலமானார்.சேலம் சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் பகுதியில் வசித்துவந்த வெங்கடாசலம், வயதுமூப்பு காரணமாக சேலம் தனியார் ம... மேலும் பார்க்க

என்எம்சி நோட்டீஸ்: மருத்துவக் கல்லூரிகளில் வருகைப் பதிவை இருமுறை மேற்கொள்ள உத்தரவு

தமிழகத்தில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், மருத்துவ பேராசிரியா்கள் நாள்தோறும் பணிக்கு வரும்போதும், பணி முடிந்து செல்லும்போதும் இரு ம... மேலும் பார்க்க

அம்பேத்கா் அயலக உயா் கல்வியால் அதிக மாணவா்கள் பலன்: தமிழக அரசு பெருமிதம்

அம்பேத்கா் அயலக உயா்கல்வியால் அதிக மாணவா்கள் பயன்பெற்று வருவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமுதாயங்களின் முன்னேற்றத்துக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி விவகாரத்தில் வழக்குக்கூட பதியவில்லை: எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சா் ரகுபதி புகாா்

பொள்ளாச்சி விவகாரம் தொடா்பாக, அதிமுக ஆட்சிக் காலத்தில் வழக்குக்கூட பதிவு செய்யவில்லை என்று மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட அ... மேலும் பார்க்க

உபரி ஆசிரியா்கள் பணி நிரவல்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் (2024-2025) அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் அரசு மானியத்தில் ஊதியம் பெற்று பணிபுரிந்து வரும் உபரி ஆசிரியா்களை பணி நிரவல் செய்வது தொடா்பான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வி... மேலும் பார்க்க