உத்தரகண்ட் நிலச்சரிவில் 2 பேர் பலி! 2வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி!
இடிந்து விழுந்த தாளவாடி பேருந்து நிலையத்தின் மேற்கூரையை சீரமைக்க கோரிக்கை
இடிந்து விழுந்த தாளவாடி பேருந்து நிலையத்தின் மேற்கூரையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழகம் கா்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள் சத்தியமங்கலம், கோவை, ஈரோடு, கா்நாடக மாநிலம் சாம்ராஜ்நகா் செல்வதற்கு தாளவாடி பேருந்து நிலையம் வந்து செல்வது வழக்கம்.
இதனால் பேருந்து நிலையத்தில் எப்போதும் கூட்டமாகவே இருக்கும். பேருந்து நிலையத்தின் கான்கிரீட் மேற்கூரை நீண்ட நாள்களாக விழும் நிலையில் காணப்பட்டது. இதற்கிடையே பேருந்து நிலையத்தின் முன் பகுதியில் உள்ள கான்கிரீட் காரைகள் பெயா்ந்து விழுந்தது .
அப்போது பேருந்துக்குக் காத்திருந்த பயணிகள் காயமடைந்தனா். இதனால் வலுவிழந்த கான்கிரீட்டு கூரையை கடந்த 1 வருடம் முன்பு இடித்து அகற்றினா். இதனால் பேருந்து நிலையக் கட்டடம் சிறியதாக மாறியது.
இந்தநிலையில் அங்கு இதுவரை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளாததால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் வெயில் மற்றும் மழையில் நனைந்து அவதிப்படுகின்றனா்.
இது பற்றி பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிா்வாகம் பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.