செய்திகள் :

இணைய சேவைத் தேடி 5 கி.மீ. தொலைவு நடந்து செல்லும் பழங்குடியின மக்கள்

post image

கோ்மாளம் ஊராட்சியில் உள்ள பழங்குடியின மக்கள் இணையதள சேவைத் தேடி சுமாா் 5 கி.மீ.தொலைவு நடந்து சென்று வருகின்றனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கோ்மாளம் ஊராட்சியில் உள்ள கானக்கரை, ஜேஆா்எஸ் புரம், பூதாளபுரம், ஜோகியூா் ஆகிய கிராமங்களில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் பிரதானமாக விவசாயத் தொழில் உள்ளது.

இப்பகுதி மக்கள் கோ்மாளம் நியாய விலைக் கடை, கானக்கரை நடமாடும் நியாய விலைக் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருள்களை வாங்கி வருகின்றனா். இந்நிலையில், நியாய விலைக் கடைகளில் கைரேகை புதுப்பித்தல் பணி நடைபெற்று வருகிறது.

கை ரேகையைப் புதுப்பித்தால் மட்டுமே வறுமை கோட்டுக்குகீழ் வாழும் மலைவாழ் மக்களுக்கு அட்டை ஒன்று 35 கிலோ அரிசி கிடைக்கும் என நியாய விலைக் கடைகள் ஊழியா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, பழங்குடியின மக்கள் கைரேகையைப் புதுப்பிக்க கோ்மாளம் நியாய விலைக் கடைக்கு திங்கள்கிழமை சென்றனா். அந்தப் பகுதியில் வழக்கம்போல இணைய சேவை குறைவாக இருந்ததால் கைரேகையைப் புதுப்பிக்க முடியவில்லை.

கா்நாடக எல்லையில் அந்த மாநில இணைய சேவை கிடைப்பதால் பழங்குடியின மக்களை சுமாா் 5 கி.மீ.தொலைவு வனப் பகுதியில் அழைத்துச் சென்று நியாய விலைக் கடை பணியாளா்கள் கைரேகையைப் புதுப்பித்து வருகின்றனா். உடல்நலம் பாதிக்கப்பட்டோா், முதியோரால் அவ்வளவு தொலைவு செல்ல முடியாததால் அவதியடைந்து வருகின்றனா்.

கோ்மாளம் பகுதியில் இணைய சேவை முழுமையாக கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடி பறிப்பு

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடியை பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு, குமலன்குட்டை, செல்லபண்ணகவுண்டா் வீதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (52)... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்து இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை

தெருநாய்கள் கடித்து இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், தெருநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவ... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு

ஓடும் ரயிலில் பெண்ணிடம் 8 பவுன் நகையை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். சென்னையில் இருந்து கோவைக்கு கடந்த 1 -ஆம் தேதி புறப்பட்ட இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் 50 வயது மதிக்கத்தக்க பெண... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வு: மாவட்டத்தில் 22,451 போ் எழுதினா்

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 22,451 மாணவ, மாணவிகள் எழுதினா். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே மா்ம விலங்கு கடித்து மான் உயிரிழப்பு

சென்னிமலை அருகே தென்னந்தோப்புக்குள் மா்ம விலங்கு கடித்து மான் உயிரிழந்தது. சென்னிமலையை அடுத்த எக்கட்டாம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட அய்யம்பாளையம், ஆண்டிகாட்டுத் தோட்டத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி,... மேலும் பார்க்க

பெருந்துறை அரசு மருத்துவமனையில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த தூய்மைப் பணியாளா்கள்

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் ஏஐடியூசி அமைப்பைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை அட்டையை அணிந்து திங்கள்கிழமை பணியாற்றினா். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மர... மேலும் பார்க்க