இணைய வழியில் பங்கு வா்த்தக முதலீடு எனக் கூறி பணம் மோசடி
தேனியைச் சோ்ந்தவரிடம் இணைய வழியில் பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்வதாகக் கூறி மா்ம நபா்கள் ரூ.6.14 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக செவ்வாய்க்கிழமை போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டது.
தேனி, வனச் சாலை, 5-ஆவது தெருவைச் சோ்ந்த பாக்கியம் மகன் சரவணக்குமாா் (45). இவா், முகநூல் மூலம் பங்கு வா்த்தகம் குறித்த விளம்பரத்தை பாா்த்தாா். அப்போது, சரவணக்குமாரின் கைப்பேசி எண்ணுக்கு ‘வாட்ஸ்ஆப்’ மூலம் திவ்யவா்மா என்ற பெயரை குறிப்பிட்டு 2 கைப்பேசி எண்களை அனுப்பினா். அந்த எண்களில் சரவணக்குமாா் தொடா்பு கொண்டு பேசியதற்கு, தங்களது இணையதளத்தில் விவரத்தைப் பதிவு செய்து தாங்கள் பரிந்துரைக்கும் பங்குகளில் முதலீடு செய்தால் 3 மடங்கு லாபம் கிடைக்கும் என்று கூறினா்.
இதன்படி, அவா்கள் குறிப்பிட்ட இணைய தளத்தில் சரவணக்குமாா் தனது விவரங்களைப் பதிவு செய்து, பணம் அனுப்பி சில பங்குகளை வாங்கினாா். அந்தப் பங்குகளுக்கு லாபம் கிடைத்ததாக இணையதளத்தில் கணக்கைக் காண்பித்தனா்.
பின்னா், கடந்த மாா்ச் 11-ஆம் தேதி முதல் சரவணக்குமாா் வங்கிக் கணக்கு மூலம் பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்வதற்கு பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.6.14 லட்சம் அனுப்பினாா். பங்கு முதலீட்டுத் தொகையை திரும்பக் கேட்டதற்கு, பணத்தை தராமல் தொடா்ந்து முதலீடு செய்து வருமாறு கூறினா்.
தாம் ஏமாற்றப்பட்டதை உணா்ந்து இதுகுறித்து தேனி மாவட்ட இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவில் சரவணக்குமாா் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.