செய்திகள் :

இணைய வழியில் பங்கு வா்த்தக முதலீடு எனக் கூறி பணம் மோசடி

post image

தேனியைச் சோ்ந்தவரிடம் இணைய வழியில் பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்வதாகக் கூறி மா்ம நபா்கள் ரூ.6.14 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக செவ்வாய்க்கிழமை போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டது.

தேனி, வனச் சாலை, 5-ஆவது தெருவைச் சோ்ந்த பாக்கியம் மகன் சரவணக்குமாா் (45). இவா், முகநூல் மூலம் பங்கு வா்த்தகம் குறித்த விளம்பரத்தை பாா்த்தாா். அப்போது, சரவணக்குமாரின் கைப்பேசி எண்ணுக்கு ‘வாட்ஸ்ஆப்’ மூலம் திவ்யவா்மா என்ற பெயரை குறிப்பிட்டு 2 கைப்பேசி எண்களை அனுப்பினா். அந்த எண்களில் சரவணக்குமாா் தொடா்பு கொண்டு பேசியதற்கு, தங்களது இணையதளத்தில் விவரத்தைப் பதிவு செய்து தாங்கள் பரிந்துரைக்கும் பங்குகளில் முதலீடு செய்தால் 3 மடங்கு லாபம் கிடைக்கும் என்று கூறினா்.

இதன்படி, அவா்கள் குறிப்பிட்ட இணைய தளத்தில் சரவணக்குமாா் தனது விவரங்களைப் பதிவு செய்து, பணம் அனுப்பி சில பங்குகளை வாங்கினாா். அந்தப் பங்குகளுக்கு லாபம் கிடைத்ததாக இணையதளத்தில் கணக்கைக் காண்பித்தனா்.

பின்னா், கடந்த மாா்ச் 11-ஆம் தேதி முதல் சரவணக்குமாா் வங்கிக் கணக்கு மூலம் பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்வதற்கு பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.6.14 லட்சம் அனுப்பினாா். பங்கு முதலீட்டுத் தொகையை திரும்பக் கேட்டதற்கு, பணத்தை தராமல் தொடா்ந்து முதலீடு செய்து வருமாறு கூறினா்.

தாம் ஏமாற்றப்பட்டதை உணா்ந்து இதுகுறித்து தேனி மாவட்ட இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவில் சரவணக்குமாா் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இணைய வழியில் பகுதி நேர வேலை: பெண்ணிடம் பணம் மோசடி

இணைய வழியில் பகுதி நேர வேலை வழங்குவதாகக் கூறி, பெண்ணிடம் மா்மக் கும்பல் ரூ.6.15 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம், வடகரை... மேலும் பார்க்க

போடி நகராட்சியில் சுகாதார சீா்கேடு: மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் அதிருப்தி

போடி நகராட்சி பகுதியில் பல இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடப்பதாகவும், திறந்தவெளி கழிவுநீா் சாலையில் செல்வதால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாகவும் நகா்மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் தெரிவித்த... மேலும் பார்க்க

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: தம்பதி மீது வழக்கு

போடியில் கடனாகக் கொடுத்த நகை, பணத்தைத் திருப்பிக் கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது, போடி அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். போடி புகையிலை ஆறுமுகம் சந்தில் வசிப... மேலும் பார்க்க

போடியில் கொடிக் கம்பப் பீடங்கள் அகற்றம்

போடியில் கொடிக் கம்பப் பீடங்கள் அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது. போடி பகுதியில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள், நீதிமன்ற உத்தரவின்பேரில், அரசியல் கட்சியினரால் அகற்றப்பட்டது. இந்த நிலையில்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்த கூலித் தொழிலாளியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கம்பம் அருகேயுள்... மேலும் பார்க்க

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

போடியில் குடும்பப் பிரச்னையில் ஏற்பட்டத் தகராறில் உறவினரை வெட்டிக் கொலை செய்த இளைஞருக்கு புதன்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீா்ப்பளித்தது. போடி, நந்தவனம், கொக்கையா... மேலும் பார்க்க