கடந்த 27 நாள்களில் 63 மீனவர்கள் கைது! மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை
`இதைக் குடியுங்கள்... உங்களை மருத்துவமனையில் சந்திக்கிறேன்'- கெஜ்ரிவாலை சாடிய ராகுல் காந்தி
டெல்லியில் வரும் புதன் கிழமை (பிப்ரவரி 5) தேர்தல் நடைபெற இருக்கிறது.
இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைகிறது. இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில் பேசியிருக்கும் ராகுல் காந்தி, " யமுனை ஆற்றை சுத்தம் செய்வதாக டெல்லியின் முன்னாள் முதல்வர் வாக்குறுதி கொடுத்திருந்தார்.
ஆனால் அவர் அதனை செய்யவில்லை” என்று அரவிந்த் கெஜ்ரிவாலை சுட்டிக்காட்டியவர் அவரை ஆற்றில் குளிக்கும்படி சவால் விடுத்தார். மேலும் அழுக்கு நிறத்தில் இருந்த யமுனை ஆற்றின் நீரை ஒரு சின்ன பாட்டிலில் அடைத்து கையில் வைத்துக்கொண்டிருந்த ராகுல் காந்தி யமுனை ஆற்றின் ஒரு சொட்டு நீரைப் பருகுங்கள் அரவிந்த் கெஜ்ரிவால்.
உங்களை மருத்துவமனையில் வந்து சந்திக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், “ நான் புதிய அரசியலைக்கொண்டு வருவேன். ஊழலை ஒழிப்பேன். யமுனை நதியை 5 ஆண்டுகளில் சுத்தம் செய்வேன்” என்று வாக்குறுதி அளித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs