செய்திகள் :

இந்தியத் திரைகளுக்கு வரும் ‘தி ப்ரூடலிஸ்ட்’!

post image

சர்வதேச அளவில் விருதுகளை குவித்து வரும் ‘தி ப்ரூடலிஸ்ட்’ திரைப்படம் இந்தியத் திரையரங்குகளில் வரும் பிப்.28 முதல் வெளியாகவுள்ளது என யூனிவர்ஸல் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று (பிப்.14) தெரிவித்துள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘தி பியானிஸ்ட்’ திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்ற அட்ரியன் ப்ரூடி கதாநாயகனாக நடித்து கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவில் வெளியான ‘தி ப்ரூடலிஸ்ட்’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து, இந்த திரைப்படம் பல்வேறு திரைப்பட விழாக்கலில் திரையிடப்பட்டு கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்து நாட்டு திரையரங்குகளில் வெளியாகி பேக் டூ பேக் வெற்றியடைந்தது.

நார்வே நாட்டு எழுத்தாளர் மோனா ஃபாச்ட்வோல்டு உடன் இணைந்து இப்படத்திற்கு திரைக்கதை எழுதிய ப்ராடி கோர்பெட் இந்த திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.

இதையும் படிக்க:இயக்குநராக 3, நடிகராக 50..! பாசில் ஜோசப் பேட்டி!

திரைப்படத்தின் போஸ்டர்

இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு தப்பிய யூத கட்டிடக் கலைஞர் மற்றும் அவரது மனைவியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் பற்றிய கதையாக உருவாகியுள்ள இந்த திரைப்படம், கோல்டன் குளோப் விருதுகளில் 7 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த டிராமா திரைப்படத்திற்கான விருதுகளை வென்றுள்ளது.

மேலும், வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அங்கு சில்வர் லயன் விருது உள்பட 5 விருதுகளை வாங்கி குவித்தது.

தி ப்ரூடலிஸ்ட் திரைப்படத்தில் வரும் ஓர் காட்சி

முன்னதாக, ஃபெசிஸிடி ஜோன்ஸ் மற்றும் கய் பியர்ஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க; ஜோ ஆல்வய்ன், ரஃபே கஸிடி, ஸ்டேசி மார்டின், எம்மா லையர்ட், இஸாச் டி பான்கோல் ஆகியோரின் நடிப்பில் ஓர் வரலாற்றுத் திரைப்படம் உருவாகியுள்ளது.

ஆஸ்கார் விருதுகளில் 10 பிரிவின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள ‘தி ப்ரூடலிஸ்ட்’ திரைப்படம் ஏற்கனவே ஒடிடியின் மூலமாகவும் திரைப்பட விழாக்களின் மூலமாகவும் பார்த்த இந்திய ரசிகர்களினால் சமூக வலைதளங்களில் பெருமளவில் பேசப்பட்டு வந்த நிலையில் வரும் பிப்.28 ஆம் தேதி இந்தியத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நகைக்காக தலையணை வைத்து பெண் கொலை!

பென்னாகரம்: பெண்ணைத் தலையணை வைத்து கொலை செய்து, மர்ம நபர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.பென்னாகரம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணைத் தலையணை வைத்து அழுத்தி கொலை செய்து கழுத்தில் அணிந்திருந்த தாலி... மேலும் பார்க்க

திமுக ஆட்சி இருண்ட காலத்தைவிட மோசம்: அண்ணாமலை

தமிழகம் தற்போது, 2006 - 2011 திமுகவின் இருண்ட ஆட்சிக் காலத்தைவிட, மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.மயிலாடுதுறை கொலைச் சம்பவம் தொடர்பாக தன்... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி குறைவு! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(பிப். 15) ரூ. 800 குறைந்துள்ளது.சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ. 80 உயா்ந்து ரூ. 8060-க்கும், பவுனுக... மேலும் பார்க்க

நாடுகடத்தப்படும் இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டுள்ளதா? ப. சிதம்பரம் கேள்வி

அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டுள்ளதா? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவா்கள... மேலும் பார்க்க

சத்தீஸ்கரிலிருந்து கும்பமேளா சென்றவர்கள் கார் விபத்து: 10 பேர் பலி!

மகா கும்பமேளாவுக்கு சத்தீஸ்கரில் இருந்து பக்தர்கள் சென்ற கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகினர். மேலும் பார்க்க

இபிஎஸ்ஸின் குரலே, பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல்தான்: முதல்வர் ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமியின் குரலே,பா.ஜ.க.விற்கான டப்பிங்குரல்தான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க