செய்திகள் :

Elon Musk: அதிபர் மாளிகையில் குதித்து விளையாடும் எலான் மஸ்க்கின் குழந்தைகள்; அரசை அவமதிக்கும் செயலா?

post image
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகிய மூவரும் பேச்சுவார்த்தை நடத்தியதுதான் உலக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது.

உலகப் பணக்காரரும், எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், அமெரிக்க அரசியின் 'DODGE' துறையின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் நேற்று (பிப் 14) பிரதமர் மோடி, எலான் இருவரும் இந்திய மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

எலான் மஸ்க்

அமெரிக்க அதிபர் மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின்போது எலான் மஸ்க்கின் குழந்தைகளும் பிரதமர் மோடி மற்றும் அதிகாரிகளிடம் பரிசைப் பெறுவதும், அரசின் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும் அலுவலகத்தில் எலானின் குழந்தைகள் விளையாடுவதும் போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதைப் பலரும் க்யூட் என்று வரவேற்று சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தாலும், ஒரு சிலர் முக்கியத் தலைவர்கள் பங்குபெறும் சந்திப்பில் அதிபர் அலுவலகத்தில் இப்படி குழந்தைகளை விளையாட விடுவது தவறு என்றும், இது அரசை அவமதிக்கும் செயல் என்றும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். 'உலகப் பணக்காரர்களில் உச்சத்தில் இருக்கும் எலான் மஸ்க்கின், பணக்கார திமிர் இது' என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

எலான் மஸ்க்

மற்றொரு புறம், 'எலான் இந்த அரசின் நிகழ்ச்சிகளில் மட்டுமல்ல, அவரின் அலுவலகங்களில் அடிக்கடி தனது குழந்தைகளை அழைத்து வரும் பழக்கம் கொண்டவர். பல அரசியல் தலைவர்கள் தங்கள் குழந்தைகளை, நாய்களை அரசு அலுவலகத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்க விஷயம்தான்' என்றும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

எலான் மஸ்கின் இந்தச் செயல் குறித்த உங்கள் கருத்தை கமென்ட்டில் தெரிவிக்கவும்.

அணைக்கட்டு: `மகளிர் திட்ட அலுவலகத்திலேயே மகளிருக்கான கழிவறை சரியாக இல்லை...' - குமுறும் பெண்கள்!

வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு வட்டம், கெங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ளது மகளிர் திட்ட அலுவலகம். இந்த அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களுக்கான சுயதொழில் பயிற்சிகள் நடைபெறுகின்றன. இ... மேலும் பார்க்க

Adani: `அது தனிப்பட்ட நிறுவனம் தொடர்பானது' - அதானி குறித்த கேள்விக்கு அமெரிக்காவில் மோடி சொன்னதென்ன?

தனிப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த பங்குச் சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு தமது பங்கு விலைகளை மிக அதிக அளவுக்கு விலை ஏற்றியுள்ளது பற்றியும், அதன் அதிகபட்ச கட... மேலும் பார்க்க

இந்தியர்களுக்கு கை விலங்கு: "ட்ரம்ப் இந்தியாவுக்கு ஒத்துழைப்பை வழங்குவார்" - மௌனம் கலைத்த மோடி

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை கை, கால்களில் விலங்கிடப்பட்ட நிலையில், மிருகங்களைப் போல அவர்களை இந்தியாவுக்கு அனுப்பிய சம்பவம் இந்தியாவில் கொதிப்பை ஏற்படுத்தியிருந்தது.டொனால்டு ட்ரம... மேலும் பார்க்க

பாலியல் புகாரில் IPS அதிகாரி சஸ்பெண்ட்: ``குடும்பத்தை அவமானப்படுத்த நோக்கம்'' - DGP-யிடம் மனைவி மனு

சென்னையில் போக்குவரத்து இணை கமிஷனராகப் பணியாற்றி வரும் ஐ.பி.எஸ் அதிகாரி மகேஷ்குமார் திடீரென இடைநீக்கம் செய்யப்படிருக்கும் சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த நடவடிக்கையானது, சென்னை போலீஸ் கமிஷனர் அல... மேலும் பார்க்க

Corruption: உலகின் டாப் 100 ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியாவின் இடம் என்ன?

உலகின் ஊழல் நிறைந்த 100 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பால் 2024-ம் ஆண்டுக்கான `2024 ஊழல் உணர்வு அட்டவணை' (Corruption Perceptions Index (CPI)) வெளியிடப... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்கள்: ``விழிப்புணர்வை அதிகரித்துள்ளோம், தைரியமாக புகார்‌ கொடுக்கின்றனர்'' -கீதாஜீவன்

முதியோர் தின கொண்டாட்டம்சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உ... மேலும் பார்க்க