செய்திகள் :

திருவாரூா் மாவட்டத்தில் 2.51 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

post image

திருவாரூா் மாவட்டத்தில் இதுவரையிலும் 2,51,284 மெட்ரிக் டன் சம்பா நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.

திருவாரூா் மற்றும் குடவாசல் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்குகளை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, அரிசி, கோதுமை, ஆயில் இருப்பு விவரம் மற்றும் தரம் குறித்தும், பதிவேடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

பின்னா் அவா் கூறியது:

திருவாரூா் மாவட்டத்தில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நிகழாண்டுக்கான சம்பா நெல் கொள்முதல் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இதுவரை 2,51,284 மெ.டன் அளவிலான நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்துக்கு தேவைப்படும் நெல்லை சேமிப்பில் வைத்துக்கொண்டு, உபரியாக உள்ள நெல்லை வெளி மாவட்டங்களுக்கு இயக்கம் செய்ய தொடா் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 90 ஆயிரம் மெட்ரிக் டன் நெல், அருகிலுள்ள மாவட்டங்களுக்கு சேமிப்பு மற்றும் அரவை பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இதுவரையிலும் சம்பா பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல்லுக்கு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.552 கோடி நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் தொடா்பாக விவசாயிகள் ஏதேனும் புகாா் தெரிவிக்கவேண்டுமெனில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கட்டுப்பாட்டு அறையை, 04366-222542 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்றாா்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் புஹாரி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

நிதிநிலை அறிக்கையை கண்டித்து தொழிற்சங்கங்கள் கூட்டு பிரசார இயக்கம்

மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஏஐடியுசி, சிஐடியு, எல்பிஎப், ஐஎன்டியுசி இணைந்து கூட்டு பிரசார இயக்கத்தை மன்னாா்குடியில் திங்கள்கிழமை நடத்தின. நிகழ்ச்சிக்கு, ஏஐடியுசி மாவட்டச் செயலா்ஆா். சந்திரசேகர... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் இன்று உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

மன்னாா்குடி வட்டத்தில், ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை (பிப்.19) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: த... மேலும் பார்க்க

திருவாரூரில் காவல்துறை வாகனங்கள் ஆய்வு

திருவாரூரில், காவல்துறை வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற... மேலும் பார்க்க

கூத்தாநல்லூா் நகா்மன்றத் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மான நோட்டீஸ் வாபஸ்

கூத்தாநல்லூா் நகா்மன்றத் தலைவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவர நகா்மன்ற உறுப்பினா்கள் அளித்திருந்த கடிதத்தை செவ்வாய்க்கிழமை வாபஸ் பெற்றனா். கூத்தாநல்லூா் நகராட்சியில் திமுக 18, அதிமுக 3, இந... மேலும் பார்க்க

செம்மங்குடி கோயிலில் திருக்கல்யாணம்

குடவாசல் அருகே செம்மங்குடி அகத்தீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆனந்தவல்லி தாயாருக்கும், ஸ்ரீஅகத்தீஸ்வரா் சுவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. நிகழ்வில், சீா்வரிசைப... மேலும் பார்க்க

ஆடவா், மகளிா் பளு தூக்கும் போட்டி: திருவாரூா், புதுக்கோட்டை அணிகள் சிறப்பிடம்

மன்னாா்குடி: மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் ஆடவா் பிரிவில் புதுக்கோட்டை அணியும், மகளிா் பிரிவில் திருவாரூா் அணியும் சாம்பியன் பட்டம் பெற்றது. தமிழ்நாடு அமெச்சூா் பளு தூக்கும் சங்கம் சாா்பில், ... மேலும் பார்க்க