செய்திகள் :

இந்தியர்களுக்கு கை விலங்கு: "ட்ரம்ப் இந்தியாவுக்கு ஒத்துழைப்பை வழங்குவார்" - மௌனம் கலைத்த மோடி

post image
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை கை, கால்களில் விலங்கிடப்பட்ட நிலையில், மிருகங்களைப் போல அவர்களை இந்தியாவுக்கு அனுப்பிய சம்பவம் இந்தியாவில் கொதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

டொனால்டு ட்ரம்ப் கடந்த மாதம் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு அந்நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேறிய அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டார். முறையான ஆவணங்கள் இல்லாத 15 லட்சம் பேர் அடங்கிய பட்டியல் முதல் கட்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் 205 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் அண்மையில் ராணுவ விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் நடத்தப்பட்ட விதம் இந்தியர்களைக் கொதிப்படையச் செய்தது.

எந்தவித முறையான இருக்கை வசதியும் இல்லாத சி-17 ரக ராணுவ விமானத்தில் கை, கால்களில் விலங்கிடப்பட்ட நிலையில், மிருகங்களைப் போல அவர்கள் உட்காரவைக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மோடி - ட்ரம்ப்

அமெரிக்காவில் டொனால்டு ட்ரம்ப் உடனான சந்திப்பில் இது குறித்துப் பேசியிருக்கும் பிரதமர் மோடி, "இந்தியாவின் இளைஞர்கள், ஏழை, எளிய மக்கள் குடியேற்றத்தில் ஏமாற்றப்படுகிறார்கள். பெரிய கனவுகளையும், வாக்குறுதிகளையும் நம்பி சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். பலர் ஏன் கொண்டு வரப்படுகிறார்கள் என்று தெரியாமல் கொண்டு வரப்படுகிறார்கள். பலர் மனித கடத்தல் முறை மூலம் கொண்டு வரப்படுகிறார்கள்.

இந்த மனிதக் கடத்தலை எதிர்த்துத்தான் எங்களின் பெரிய போராட்டம் இருக்கிறது. இந்த மனிதக் கடத்தல் அமைப்புகளுக்கு முடிவு கட்டுவதில் அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு முழுமையாக ஒத்துழைப்பை வழங்குவார் என்று நாங்கள் நம்புகிறோம்.

மோடி - ட்ரம்ப்

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றாக இருந்து வருகின்றன. எல்லையின் மறுபக்கத்தில் உருவாகும் பயங்கரவாதத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்" என்று பேசியிருக்கிறார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Elon Musk: அதிபர் மாளிகையில் குதித்து விளையாடும் எலான் மஸ்க்கின் குழந்தைகள்; அரசை அவமதிக்கும் செயலா?

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகிய மூவரும் பேச்சுவார்த்தை நடத்தியதுதான் உலக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது.உலகப் பணக்காரரும், எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தி... மேலும் பார்க்க

அணைக்கட்டு: `மகளிர் திட்ட அலுவலகத்திலேயே மகளிருக்கான கழிவறை சரியாக இல்லை...' - குமுறும் பெண்கள்!

வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு வட்டம், கெங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ளது மகளிர் திட்ட அலுவலகம். இந்த அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களுக்கான சுயதொழில் பயிற்சிகள் நடைபெறுகின்றன. இ... மேலும் பார்க்க

Adani: `அது தனிப்பட்ட நிறுவனம் தொடர்பானது' - அதானி குறித்த கேள்விக்கு அமெரிக்காவில் மோடி சொன்னதென்ன?

தனிப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த பங்குச் சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு தமது பங்கு விலைகளை மிக அதிக அளவுக்கு விலை ஏற்றியுள்ளது பற்றியும், அதன் அதிகபட்ச கட... மேலும் பார்க்க

பாலியல் புகாரில் IPS அதிகாரி சஸ்பெண்ட்: ``குடும்பத்தை அவமானப்படுத்த நோக்கம்'' - DGP-யிடம் மனைவி மனு

சென்னையில் போக்குவரத்து இணை கமிஷனராகப் பணியாற்றி வரும் ஐ.பி.எஸ் அதிகாரி மகேஷ்குமார் திடீரென இடைநீக்கம் செய்யப்படிருக்கும் சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த நடவடிக்கையானது, சென்னை போலீஸ் கமிஷனர் அல... மேலும் பார்க்க

Corruption: உலகின் டாப் 100 ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியாவின் இடம் என்ன?

உலகின் ஊழல் நிறைந்த 100 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பால் 2024-ம் ஆண்டுக்கான `2024 ஊழல் உணர்வு அட்டவணை' (Corruption Perceptions Index (CPI)) வெளியிடப... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்கள்: ``விழிப்புணர்வை அதிகரித்துள்ளோம், தைரியமாக புகார்‌ கொடுக்கின்றனர்'' -கீதாஜீவன்

முதியோர் தின கொண்டாட்டம்சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உ... மேலும் பார்க்க