செய்திகள் :

பாலியல் புகாரில் IPS அதிகாரி சஸ்பெண்ட்: ``குடும்பத்தை அவமானப்படுத்த நோக்கம்'' - DGP-யிடம் மனைவி மனு

post image

சென்னையில் போக்குவரத்து இணை கமிஷனராகப் பணியாற்றி வரும் ஐ.பி.எஸ் அதிகாரி மகேஷ்குமார் திடீரென இடைநீக்கம் செய்யப்படிருக்கும் சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த நடவடிக்கையானது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவர், டி.ஜி.பி அலுவலகத்தில் மகேஷ்குமார் மீது அளித்த புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கிறது.

போக்குவரத்து இணை கமிஷனர் மகேஷ்குமார்

இந்த நிலையில், தங்களின் குடும்பத்தை அவமானப்படுத்தும் நோக்கில் தன் கணவர் மீது இத்தகைய புகார் அளிக்கப்பட்டிருப்பதாக மகேஷ்குமாரின் மனைவி குற்றம்சாட்டியிருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகேஷ்குமாரின் மனைவி மற்றும் அவர் தரப்பு, ``பொய்யான புகாரை அளித்திருக்கிறார்கள். நேற்று நள்ளிரவு சம்மன் வந்த சிறிது நேரத்தில் சஸ்பெண்ட் என்று ஊடகங்கள் மூலம் தெரியவந்தது. எங்களின் நியாயம் கேட்கப்படவில்லையோ என்று ஆதங்கமாக இருந்தது.

மகேஷ்குமார் ஐபிஎஸ்

அதனால், விசாகா கமிட்டி யாருக்கும் சாதகமாகவும், பாதகமாகவும் இல்லாமல், எது நியாயமோ அந்த நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் ஒரே வேண்டுகோள். அதனால், நியாயமாக விசாரிக்க வேண்டும் என்று டிஜிபி சாரிடம் மனு கொடுத்திருக்கிறோம். விசாகா கமிட்டியில் கேட்கும்போது ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படும். எங்கள் குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த நபர் புகாரளித்திருக்கிறார். நியாயமான தீர்ப்பு எங்களுக்கு கிடைக்கும்." என்று தெரிவித்தனர்.

Elon Musk: அதிபர் மாளிகையில் குதித்து விளையாடும் எலான் மஸ்க்கின் குழந்தைகள்; அரசை அவமதிக்கும் செயலா?

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகிய மூவரும் பேச்சுவார்த்தை நடத்தியதுதான் உலக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது.உலகப் பணக்காரரும், எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தி... மேலும் பார்க்க

அணைக்கட்டு: `மகளிர் திட்ட அலுவலகத்திலேயே மகளிருக்கான கழிவறை சரியாக இல்லை...' - குமுறும் பெண்கள்!

வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு வட்டம், கெங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ளது மகளிர் திட்ட அலுவலகம். இந்த அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களுக்கான சுயதொழில் பயிற்சிகள் நடைபெறுகின்றன. இ... மேலும் பார்க்க

Adani: `அது தனிப்பட்ட நிறுவனம் தொடர்பானது' - அதானி குறித்த கேள்விக்கு அமெரிக்காவில் மோடி சொன்னதென்ன?

தனிப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த பங்குச் சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு தமது பங்கு விலைகளை மிக அதிக அளவுக்கு விலை ஏற்றியுள்ளது பற்றியும், அதன் அதிகபட்ச கட... மேலும் பார்க்க

இந்தியர்களுக்கு கை விலங்கு: "ட்ரம்ப் இந்தியாவுக்கு ஒத்துழைப்பை வழங்குவார்" - மௌனம் கலைத்த மோடி

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை கை, கால்களில் விலங்கிடப்பட்ட நிலையில், மிருகங்களைப் போல அவர்களை இந்தியாவுக்கு அனுப்பிய சம்பவம் இந்தியாவில் கொதிப்பை ஏற்படுத்தியிருந்தது.டொனால்டு ட்ரம... மேலும் பார்க்க

Corruption: உலகின் டாப் 100 ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியாவின் இடம் என்ன?

உலகின் ஊழல் நிறைந்த 100 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பால் 2024-ம் ஆண்டுக்கான `2024 ஊழல் உணர்வு அட்டவணை' (Corruption Perceptions Index (CPI)) வெளியிடப... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்கள்: ``விழிப்புணர்வை அதிகரித்துள்ளோம், தைரியமாக புகார்‌ கொடுக்கின்றனர்'' -கீதாஜீவன்

முதியோர் தின கொண்டாட்டம்சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உ... மேலும் பார்க்க