செய்திகள் :

அணைக்கட்டு: `மகளிர் திட்ட அலுவலகத்திலேயே மகளிருக்கான கழிவறை சரியாக இல்லை...' - குமுறும் பெண்கள்!

post image

வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு வட்டம், கெங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ளது மகளிர் திட்ட அலுவலகம். இந்த அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களுக்கான சுயதொழில் பயிற்சிகள் நடைபெறுகின்றன. இதில் அணைக்கட்டு வட்டாரத்தில் உள்ள ஏராளமான பெண்கள் கலந்து கொள்கின்றனர். இந்த அலுவலகத்தில் கழிவறை இருந்தும் பயன்பாட்டில் இல்லாமல், தண்ணீர் வசதி இல்லாமல் இருப்பதாக அலுவலகத்திற்கு பயிற்சிக்கு வரும் பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு அருகிலேயே கெங்கநல்லூர் பகுதியில் மகளிர் திட்ட அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பெண்களுக்கான சுயதொழில் பயிற்சிகள் தினம்தோறும் நடைபெறுகின்றன.

இந்த பயிற்சியில் தினமும் அணைக்கட்டு வட்டாரத்தை சுற்றியுள்ள 35 பெண்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் இந்த அலுவலகத்தில் சமீபத்தில் காலை உணவு திட்டம் குறித்தான பயிற்சியும் பெண்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாதந்தோறும் நடத்தப்படும் கூட்டமும் இந்த அலுவலகத்தில் உள்ள பயிற்சி அறையில் வைத்து தான் நடத்துகின்றனர். இப்படி இந்த அலுவலகத்திற்கு அதிகமாக பெண்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு கழிவறை கட்டடம் இந்த அலுவலகத்தின் பின்புறம் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் இந்த கழிவறை பயன்பாட்டில் இல்லாமலும், தண்ணீர் வசதி இல்லாமல் இருப்பதாக அலுவலகத்திற்கு வந்து செல்லும் பெண்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு கூட போதிய கழிவறை வசதி இல்லை. பெண்கள் கழிவறை இந்த நிலையில் இருக்க ஆண்கள் கழிவறை பயன்படுத்த முடியாதபடி புதர் மண்டி கிடக்கிறது.

இது குறித்து இந்த அலுவலகத்திற்கு பயிற்சிக்கு வந்து செல்லும் பெண்கள் கூறியதாவது, “மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் சுயதொழில் பயிற்சி என்பது ஒரு நாள் முழுவதும் நடக்கும். அப்படி ஒரு நாள் முழுவதும் பயிற்சி நடக்கும் போது நாங்கள் இயற்கை உபாதையை கழிக்க போதிய கழிவறை வசதி இந்த அலுவலகத்தில் இல்லை. பெண்கள் கழிவறையில் தண்ணீர் வசதி எதுவும் இல்லை. தண்ணீர் வருவதற்கான எந்த பைப் லைனும் இல்லை. ஒரு சில நேரத்தில் இந்த கழிவறை பயன்படுத்த முடியாதபடி பூட்டி வைத்து விடுகின்றனர்.

இப்படி இருந்தால் நாங்கள் எப்படி இயற்கை உபாதையை கழிக்க முடியும். அணைக்கட்டு பகுதியில் இருந்து 3 கி.மீ தொலைவில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது. இயற்கை உபாதை கழிக்க நாங்கள் அணைக்கட்டு பகுதிக்கு சென்று பொது கழிவறையை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். பெண்களுக்கான அலுவலகம் ஆனால் பெண்களுக்கு சரியான கழிவறை வசதி இல்லை” என்று நம்மிடம் பேசினர்.

இது குறித்து அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டோம். இது குறித்து அவர் கூறியதாவது, “மகளிர் திட்ட அலுவலகத்தில் பெண்களுக்கான கழிவறை சரியாக இல்லை என்பது நீங்கள் சொல்லி தான் தெரியவருகிறது. அந்த அலுவலகத்தை தொடர்புகொண்டு பெண்களுக்கான கழிவறையை முறையாக சரி செய்து தண்ணீர் வசதி ஏற்படுத்தி தருகிறோம். ஆண்கள் கழிவறையினையும் சீரமைப்பு செய்து பயன்பாட்டில் கொண்டு வர முயற்சிகள் எடுக்கிறோம்” என்று கூறினார்.

அணைக்கட்டு வட்ட அளவில் இயங்கிக் கொண்டிருக்கும் மகளிருக்கான மகளிர் திட்ட அலுவலகத்திலேயே பெண்களுக்கான கழிவறை சரியான முறையில் இல்லாமல் இருப்பது, தண்ணீர் வசதி இல்லாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதனை உடனடியாக சீரமைப்பு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அந்த பயிற்சிக்கு வரும் பெண்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Elon Musk: அதிபர் மாளிகையில் குதித்து விளையாடும் எலான் மஸ்க்கின் குழந்தைகள்; அரசை அவமதிக்கும் செயலா?

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகிய மூவரும் பேச்சுவார்த்தை நடத்தியதுதான் உலக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது.உலகப் பணக்காரரும், எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தி... மேலும் பார்க்க

Adani: `அது தனிப்பட்ட நிறுவனம் தொடர்பானது' - அதானி குறித்த கேள்விக்கு அமெரிக்காவில் மோடி சொன்னதென்ன?

தனிப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த பங்குச் சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு தமது பங்கு விலைகளை மிக அதிக அளவுக்கு விலை ஏற்றியுள்ளது பற்றியும், அதன் அதிகபட்ச கட... மேலும் பார்க்க

இந்தியர்களுக்கு கை விலங்கு: "ட்ரம்ப் இந்தியாவுக்கு ஒத்துழைப்பை வழங்குவார்" - மௌனம் கலைத்த மோடி

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை கை, கால்களில் விலங்கிடப்பட்ட நிலையில், மிருகங்களைப் போல அவர்களை இந்தியாவுக்கு அனுப்பிய சம்பவம் இந்தியாவில் கொதிப்பை ஏற்படுத்தியிருந்தது.டொனால்டு ட்ரம... மேலும் பார்க்க

பாலியல் புகாரில் IPS அதிகாரி சஸ்பெண்ட்: ``குடும்பத்தை அவமானப்படுத்த நோக்கம்'' - DGP-யிடம் மனைவி மனு

சென்னையில் போக்குவரத்து இணை கமிஷனராகப் பணியாற்றி வரும் ஐ.பி.எஸ் அதிகாரி மகேஷ்குமார் திடீரென இடைநீக்கம் செய்யப்படிருக்கும் சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த நடவடிக்கையானது, சென்னை போலீஸ் கமிஷனர் அல... மேலும் பார்க்க

Corruption: உலகின் டாப் 100 ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியாவின் இடம் என்ன?

உலகின் ஊழல் நிறைந்த 100 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பால் 2024-ம் ஆண்டுக்கான `2024 ஊழல் உணர்வு அட்டவணை' (Corruption Perceptions Index (CPI)) வெளியிடப... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்கள்: ``விழிப்புணர்வை அதிகரித்துள்ளோம், தைரியமாக புகார்‌ கொடுக்கின்றனர்'' -கீதாஜீவன்

முதியோர் தின கொண்டாட்டம்சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உ... மேலும் பார்க்க