செய்திகள் :

பாலியல் குற்றங்கள்: ``விழிப்புணர்வை அதிகரித்துள்ளோம், தைரியமாக புகார்‌ கொடுக்கின்றனர்'' -கீதாஜீவன்

post image

முதியோர் தின கொண்டாட்டம்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு, துறைசார்ந்த திட்டங்கள், செயல்பாடுகள், பயனாளிகள் விவரம், குறைகள், தேவைகள் மற்றும் செயல்முறையில் இருக்கும் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். தொடர்ந்து பேராலி சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச முதியோர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கீதாஜீவன் முதியோர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் கிரீடம் சூட்டியும் கௌரவித்தார்.

பேச்சு

நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் பேசும்போது, "தமிழக அரசு, குழந்தைகள், முதியோர்கள், பெண்கள், திருநங்கைகளுக்கான திட்டங்களையும், அவர்களுக்கான பாதுகாப்பு சட்டங்களையும் சமூக நலத்துறை மூலம் சிறப்பாக நடைமுறைப்படுத்துகிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் ஆதரவற்ற குழந்தைகளுக்கென சுமார் 36 அரசு குழந்தைகள் இல்லம், 147 தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அவர்களுக்கும் விளையாட்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி அனைத்து கலைகளையும் கற்றுக் கொடுக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டதன்படி, கடந்த ஆண்டு முதல் தொழிற்பயிற்சி, ஆற்றுப்படுத்துதல், விளையாட்டு, பயிற்சி, ஓவியம், இசை போன்ற கலைகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது" என பேசினார்.

அமைச்சர் கீதா ஜீவன்

பாலியல் குற்றங்கள்...

தொடர்ந்து செய்தியாளர்களின்‌ கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், 'பாலியல் குற்றங்கள் மற்றும் பாலியல் சீண்டல்கள் தொடர்பான விழிப்புணர்வை பள்ளி மாணவர்களுக்கு அதிகரித்துள்ளோம். இதன் காரணமாக பள்ளிகளிலோ, வெளி இடங்களிலோ தங்களுக்கு ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்பட்டால் அதை தைரியமாக மாணவிகள் புகார்‌ கொடுக்க முன்வந்துள்ளனர். பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின்‌ மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது." என்றார்.

மேலும் பேசுகையில், "பாஜக தலைவர் அண்ணாமலை, அரசியல் தெரியாமல் பல விஷயங்களையும் பேசி வருகிறார். அவர் பேசுவதையெல்லாம் திமுக பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை" என்றார்.

Elon Musk: அதிபர் மாளிகையில் குதித்து விளையாடும் எலான் மஸ்க்கின் குழந்தைகள்; அரசை அவமதிக்கும் செயலா?

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகிய மூவரும் பேச்சுவார்த்தை நடத்தியதுதான் உலக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது.உலகப் பணக்காரரும், எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தி... மேலும் பார்க்க

அணைக்கட்டு: `மகளிர் திட்ட அலுவலகத்திலேயே மகளிருக்கான கழிவறை சரியாக இல்லை...' - குமுறும் பெண்கள்!

வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு வட்டம், கெங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ளது மகளிர் திட்ட அலுவலகம். இந்த அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களுக்கான சுயதொழில் பயிற்சிகள் நடைபெறுகின்றன. இ... மேலும் பார்க்க

Adani: `அது தனிப்பட்ட நிறுவனம் தொடர்பானது' - அதானி குறித்த கேள்விக்கு அமெரிக்காவில் மோடி சொன்னதென்ன?

தனிப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த பங்குச் சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு தமது பங்கு விலைகளை மிக அதிக அளவுக்கு விலை ஏற்றியுள்ளது பற்றியும், அதன் அதிகபட்ச கட... மேலும் பார்க்க

இந்தியர்களுக்கு கை விலங்கு: "ட்ரம்ப் இந்தியாவுக்கு ஒத்துழைப்பை வழங்குவார்" - மௌனம் கலைத்த மோடி

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை கை, கால்களில் விலங்கிடப்பட்ட நிலையில், மிருகங்களைப் போல அவர்களை இந்தியாவுக்கு அனுப்பிய சம்பவம் இந்தியாவில் கொதிப்பை ஏற்படுத்தியிருந்தது.டொனால்டு ட்ரம... மேலும் பார்க்க

பாலியல் புகாரில் IPS அதிகாரி சஸ்பெண்ட்: ``குடும்பத்தை அவமானப்படுத்த நோக்கம்'' - DGP-யிடம் மனைவி மனு

சென்னையில் போக்குவரத்து இணை கமிஷனராகப் பணியாற்றி வரும் ஐ.பி.எஸ் அதிகாரி மகேஷ்குமார் திடீரென இடைநீக்கம் செய்யப்படிருக்கும் சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த நடவடிக்கையானது, சென்னை போலீஸ் கமிஷனர் அல... மேலும் பார்க்க

Corruption: உலகின் டாப் 100 ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியாவின் இடம் என்ன?

உலகின் ஊழல் நிறைந்த 100 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பால் 2024-ம் ஆண்டுக்கான `2024 ஊழல் உணர்வு அட்டவணை' (Corruption Perceptions Index (CPI)) வெளியிடப... மேலும் பார்க்க