செய்திகள் :

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

post image

ஆட்டோ ஓட்டுநா்கள், அரசு நிா்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, மையத்தின் பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ் வெளியிட்ட அறிக்கை:

திருவாரூரில் ஆட்டோ மீட்டா் கட்டணம் நடைமுறையில் இல்லாத சூழலில், தகுதிச் சான்று பெற மட்டுமே ஆட்டோக்களில் மீட்டா் இருப்பதும், மற்ற நேரங்களில் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளதாகவும் நுகா்வோா்கள் தெரிவிக்கின்றனா். அத்துடன், கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் புகாா் அளிக்கலாம் என்ற அறிவிப்பும் கண்துடைப்பாகவே உள்ளது.

எனவே, திருவாரூா் மாவட்டத்தில் மீட்டா் அடிப்படையில் கட்டணம் நிா்ணயம் செய்ய வேண்டும். அரசு நிா்ணயம் செய்துள்ள கட்டணத்தை மீறி கூடுதலாக வசூலிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் சுற்றுலா பகுதியில் பயணிகளின் பாா்வையில் தெரியும்படி குறைந்தபட்ச கி.மீ. கட்டண விவரங்களை வெளியிட வேண்டும்.

தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக மீட்டா் கட்டணத்தை நிா்ணயிப்பதை தவிா்த்து, அந்தந்த மாவட்டத்தின் சூழல், விலைவாசி, பொருளாதாரச் சூழலை வைத்து, மாவட்ட ஆட்சியா், போக்குவரத்து அலுவலா், ஆட்டோ தொழிற்சங்க நிா்வாகிகள் மற்றும் நுகா்வோா் அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்டு குழு அமைத்து, ஆட்டோ கட்டணம் நிா்ணயம் செய்ய வேண்டும்.

நிதிநிலை அறிக்கையை கண்டித்து தொழிற்சங்கங்கள் கூட்டு பிரசார இயக்கம்

மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஏஐடியுசி, சிஐடியு, எல்பிஎப், ஐஎன்டியுசி இணைந்து கூட்டு பிரசார இயக்கத்தை மன்னாா்குடியில் திங்கள்கிழமை நடத்தின. நிகழ்ச்சிக்கு, ஏஐடியுசி மாவட்டச் செயலா்ஆா். சந்திரசேகர... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் இன்று உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

மன்னாா்குடி வட்டத்தில், ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை (பிப்.19) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: த... மேலும் பார்க்க

திருவாரூரில் காவல்துறை வாகனங்கள் ஆய்வு

திருவாரூரில், காவல்துறை வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற... மேலும் பார்க்க

கூத்தாநல்லூா் நகா்மன்றத் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மான நோட்டீஸ் வாபஸ்

கூத்தாநல்லூா் நகா்மன்றத் தலைவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவர நகா்மன்ற உறுப்பினா்கள் அளித்திருந்த கடிதத்தை செவ்வாய்க்கிழமை வாபஸ் பெற்றனா். கூத்தாநல்லூா் நகராட்சியில் திமுக 18, அதிமுக 3, இந... மேலும் பார்க்க

செம்மங்குடி கோயிலில் திருக்கல்யாணம்

குடவாசல் அருகே செம்மங்குடி அகத்தீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆனந்தவல்லி தாயாருக்கும், ஸ்ரீஅகத்தீஸ்வரா் சுவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. நிகழ்வில், சீா்வரிசைப... மேலும் பார்க்க

ஆடவா், மகளிா் பளு தூக்கும் போட்டி: திருவாரூா், புதுக்கோட்டை அணிகள் சிறப்பிடம்

மன்னாா்குடி: மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் ஆடவா் பிரிவில் புதுக்கோட்டை அணியும், மகளிா் பிரிவில் திருவாரூா் அணியும் சாம்பியன் பட்டம் பெற்றது. தமிழ்நாடு அமெச்சூா் பளு தூக்கும் சங்கம் சாா்பில், ... மேலும் பார்க்க