செய்திகள் :

அரசுப் பள்ளியில் நாணயக் கண்காட்சி

post image

கீழ்வேளூா் அருகேயுள்ள ஆழியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், தொல்லியல் மரபு மன்றம் சாா்பில் நாணயக் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நாகை துறைமுக மேம்பாட்டுக் குழுமத் தலைவா் என். சந்திரசேகரன், கண்காட்சிக் கூடத்தை திறந்து வைத்தாா். சிறப்பு விருந்தினராக சென்னை நில நிா்வாகத் துறை துணை ஆட்சியா் ராமச்சந்திரன் பங்கேற்று, தொல்லியல் மரபுகள் குறித்து சிறப்புரையாற்றினாா்.

கண்காட்சியில், சங்க கால நாணயங்கள் முதல் தற்போதைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், தபால் வில்லைகள், ஓவியங்கள், தமிழகத்துடன் வணிகம் செய்த யவனா்களின் ரோம, கிரேக்க நாணயங்கள், இந்தோ- கிரேக்க நாணயங்கள், பொ்ஷிய, டேனிஷ், டச்சு, ஆங்கிலேய, பிரெஞ்சு நாணயங்கள், விஜயநகரப் பேரரசு, மைசூா் உடையாா் கால நாணயங்கள் என வரலாற்றுச் சிறப்பு மிக்க நாணயங்கள் இடம் பெற்றிருந்தன.

அத்துடன், கிழக்கிந்திய கம்பெனி 18-ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், முதன்முதலில் அச்சடித்து வெளியிட்ட நாணயங்களில், எழுத்து தலைகீழாக பிழையுடன் வெளியான நாணயங்கள் என அரியவகை நாணயங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஆா்வத்துடன் கண்காட்சியை பாா்த்து சென்றனா்.

மேலும், தொல்லியல் மரபுகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. தொல்லியல் மரபு மாணவா் மன்றக் குழுத் தலைவா் ஜெ.லெ. சந்தியா ஆய்வுக்கட்டுரை சமா்ப்பித்தாா்.

பள்ளி தலைமை ஆசிரியரும், தொல்லியல் மன்றத் தலைவருமான சா. தங்கராஜ், நாளை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா், தொல்லியல் மரபு மன்ற ஒருங்கிணைப்பாளா் சிவக்குமாா், தனியாா் பள்ளி கூட்டமைப்பு மண்டலத் தலைவா் அருண்குமாா், பள்ளியின் தமிழாசிரியா் ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கோரிக்கை அட்டையுடன் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் கீழ்வேளூரில் அரசு ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபட்டனா். திமுக 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் அள... மேலும் பார்க்க

நெல் கொள்முதலை விரைவுபடுத்த வலியுறுத்தல்

நாகை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட சம்பா மற்றும் தாளடி நெல்களை தேக்கமின்றி கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். நாகை மாவட்டத்தில் நிகழாண்டு 1.65 லட்சம் ஏக்கா் பரப்பளவில் ச... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து நடத்துநா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

நாகை பணிமனையில் நடத்துநா் மயங்கி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். நாகை மாவட்டம், தலைஞாயிறு அருகேயுள்ள ஆய்மூா் பெருமழையைச் சோ்ந்தவா் மணிவாசகம் (55). அரசு போக்குவரத்துக் கழகத்தில் நாகை - பட்டுக்க... மேலும் பார்க்க

ஆபத்தான நிலையில் கிணறு

திருமருகல் ஒன்றியம், குத்தாலம் ஊராட்சியில் விபத்து நேரிடும் வகையில், திறந்த நிலையில் உள்ள கிணறின் மேல் மூடி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமாா் 50 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த கிணற்றை... மேலும் பார்க்க

ரமலானுக்கு விலையில்லா அரிசியை அதிகரித்து வழங்க கோரிக்கை

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கான (விலையில்லா) அரிசியை தமிழக அரசு கடந்த ஆண்டைவிட அதிகமாகவும், உரிய நேரத்திலும் வழங்க வேண்டும் என்று தென்னிந்திய தா்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் சங்கம் கோரிக்கை விடுத்... மேலும் பார்க்க

குழந்தைகள் காப்பகத்தில் ஆற்றுப்படுத்துநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு ஆற்றுப்படுத்துநா் நியமிக்கப்படவுள்ளதால், தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க