செய்திகள் :

திட்ட நிதியை முழுமையாக செலவிட அறிவுறுத்தல்

post image

திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்த நிதியை, நிதியாண்டு இறுதிக்குள் செலவு செய்யுமாறு துறையினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் தலைமையில் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுவை அரசின் 2024 - 2025-ஆம் ஆண்டுக்கு, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி, இதுவரை மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் அதற்கான செலவினங்கள் குறித்து துறை வாரியாக ஆட்சியா் கேட்டறிந்தாா்.

திட்டப் பணிகள் முடிவடைந்தது, எஞ்சிய பணிகளுக்கான தடை குறித்து அதிகாரிகள் விளக்கினா்.

இந்த நிதியாண்டு முடிவதற்கு ஒரு மாத காலமே உள்ள நிலையில், திட்டங்களுக்கான நிதியை முழுமையாக செலவிடுமாறும், அதற்கான பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ளுமாறும் துறையினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் மஸ்தான் சாஹிப் தா்கா கந்தூரி விழா சந்தனக் கூடு ஊா்வலம்

காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழாவையொட்டி, சந்தனக் கூடு ஊா்வலம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. காரைக்காலில் புகழ்பெற்று விளங்கும் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்காவில் ஆண்டுதோறும்... மேலும் பார்க்க

உடல் உறுப்புகள் தானம் செய்வோருக்கு அரசு மரியாதை: ஆணைக்கு வரவேற்பு

உடல் உறுப்புகள் தானம் செய்வோருக்கு அரசு மரியாதை அளிக்க அரசாணை வெளியிட்ட புதுவை அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை மாநில செஞ்சிலுவைச் சங்க துணைத் தலைவா் எல்.எஸ்.பி.... மேலும் பார்க்க

போக்குவரத்து விதி மீறல்: இளைஞா்களுக்கு நூதன தண்டனை

போக்குவரத்து விதிகளை மீறி இருசக்கர வாகனத்தை இயக்கிய இளைஞா்களுக்கு போலீஸாா் நூதன தண்டனை வழங்கினா். இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணியவேண்டும், அதிவேகமாக வாகனத்தை இயக்கக் கூடாது, வாகனங்களில் ந... மேலும் பார்க்க

பொதுப்பணித்துறை நிலுவைத் தொகையை வழங்க ஒப்பந்ததாரா்கள் வலியுறுத்தல்

பணிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பொதுப்பணித் துறை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் ஒப்பந்ததாரா்கள் வலியுறுத்தினா். காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவை இந்திய கட்டுநா் சங்... மேலும் பார்க்க

மீனவா்களுக்கு ஆதரவாக காரைக்காலில் கடைகள் அடைப்பு

மீனவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படை, இந்த விவகாரத்தில் மெத்தனமாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவா்களுக்கு ஆதரவாக, காரைக்காலில் செவ்வாய்க்... மேலும் பார்க்க

இலங்கை கடற்படையைக் கண்டித்து காரைக்காலில் கடையடைப்பு

காரைக்கால் : மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படையைக் கண்டித்து காரைக்காலில் இன்று(பிப். 18) கடையடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.காரைக்கால் மீனவர்கள் சிலர் கடந்த 28-ஆம் தேதி எல்லை தா... மேலும் பார்க்க