செய்திகள் :

Modi in US: `இந்திய குடியேறிகள்; தீவிரவாதம், அணுசக்தி' - மோடி, ட்ரம்ப் பேசியது என்ன?!

post image

அமெரிக்காவில் சட்டத்துக்குப் புறம்பாக வசிக்கும் யாவரையும் இந்தியா திரும்பப் பெற்றுக்கொள்ளும் என்றும், ஆள்கடத்தலுக்கு முடிவு கட்டப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

அமெரிக்காவில் குடியேறிகள் திருப்பி அனுப்பப்படுவது பற்றி பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, எந்த நாட்டிலும் யாரும் சட்டத்துக்குப் புறம்பாக நுழைந்தால், அங்கு வசிக்க உரிமை கிடையாது எனக் கூறியுள்ளார் மோடி.

முன்னதாக அமெரிக்காவிலிருந்து 104 இந்தியர்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக, பெரும் விவாதங்கள் எழுந்தன. இந்த விவகாரம் குறித்து பேசிய மோடி, "இந்தியாவின் இளம் அப்பாவி ஏழை மக்கள் இடம்பெயர்வுக்கு இழுக்கப்படுகின்றனர். இவர்கள் மிகவும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள். இவர்களை பெரிய கனவுகளையும் சத்தியங்களையும் செய்து கவருகின்றனர். பலர் ஆள்கடத்தல் அமைப்புகள் மூலம் கொண்டுவரப்பட்டனர்." எனக் கூறியுள்ளார்.

மேலும், ``இந்த மொத்த ஆள் கடத்தல் அமைப்புடனும் மிகப் பெரிய சண்டையிட வேண்டியிருக்கிறது. அதிபர் ட்ரம்ப் இந்த அமைப்புகளை முறியடிக்க இந்தியாவுக்கு ஒத்துழைப்பார் என முழுமையாக நம்புகிறோம்." என்றும் தெரிவித்துள்ளார்.

Modi

'உலகிலேயே தீய மனிதன்'

மறுபுறம் ட்ரம்ப் 2008 மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதியை இந்தியாவுக்கு நாடுகடத்துவதாக அறிவித்தார். தஹாவ்வூர் ராணா என்ற அந்த நபரை 'உலகிலேயே தீய நபர்' என்று அழைத்தார்.

இது குறித்து மோடி, "இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடி வருகின்றன. எல்லைகளுக்கு அப்பால் உருவாகும் தீவிரவாதத்தை அழிக்க வலிமையான நடவடிக்கைகள் வேண்டும். 2008ம் ஆண்டு இனப்படுகொலை நடத்திய குற்றவாளியை அமெரிக்கா இந்தியாவிற்கு அனுப்பவதற்காக நான் அதிபருக்கு நன்றி கூறுகிறேன். இந்திய நீதிமன்றங்கள் முறையான நடவடிக்கை மேற்கொள்ளும்." எனத் தெரிவித்துள்ளார்.

அணுசக்தி சட்டங்களில் மாற்றம்?

ட்ரம்ப் பேசியபோது, "நானும் பிரதமரும் (மோடி) முக்கியமான ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறோம். இந்தியாவுக்கு அமெரிக்காதான் முன்னணி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வழங்கும் நாடாக இருக்கும்.

Modi, Trump

அமெரிக்க அணுசக்தி துறையின் மிகப் பெரிய வளர்ச்சியாக, இந்தியா அமெரிக்காவின் அணுசக்தி தொழில்நுட்பத்தை வரவேற்கும் விதமாக சட்டங்களைத் திருத்துகிறது." எனக் கூறியுள்ளார்.

மேலும், "நமது ஒட்டுமொத்த வரலாற்றிலும் உள்ளதை விட மிகச்சிறந்த வணிக சாலையை அமைக்க ஒப்புக்கொண்டுள்ளோம். இது இந்தியாவிலிருந்து இஸ்ரேல், இத்தாலியை அடையும். அமெரிக்காவின் கூட்டாளிகளை சாலை, ரயில் மற்றும் கடலுக்கு அடியில் உள்ள கேபிள்களுடன் இணைக்கும். இது மிகப் பெரிய வளர்ச்சி" என்று கூறியுள்ளார்.

Manipur: ``குடியரசு தலைவர் ஆட்சியைத் திரும்பப் பெறுங்கள்" - மணிப்பூரில் போராட்டத்தில் இறங்கிய மக்கள்

மணிப்பூரில் 2024 மே மாதத்தில் குக்கி, மெய்தி சமூகத்தினருக்கு இடையே வெடித்த மோதல், இன்னும் ஓயாமல் இருக்கிறது. பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களைப் பிரதமர் மோடி ஒருமுறை கூட நேரில் சென்று பார்க்கவில்... மேலும் பார்க்க

NEP: ``தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லையென்றால் நிதி கிடைக்காது" - மத்திய அமைச்சர் ஓப்பன் டாக்

மத்திய அரசின் மும்மொழி கொள்கை உள்ளிட்ட காரணங்களால் தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு இன்னும் ஏற்காமல் இருக்கிறது. மேலும், தேசிய கல்விக்கொள்கையை ஏற்காததால், கல்விக்கு மத்திய அரசு தரப்பில் ஒதுக்க வேண்... மேலும் பார்க்க

'கள்ளச்சாராய வியாபாரத்தை மூடி மறைக்கும் காவல்துறையே...' - கடுமையாக சாடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

மயிலாடுதுறையில் கள்ளச்சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்ட விவகாரத்தில் ஹரிஸ் மற்றும் ஹரிசக்தி ஆகிய இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், 'கள்ளச்சாராயத்தை ஒழிக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்ல... மேலும் பார்க்க

இரட்டைப் படுகொலை: `விசாரணைக்கு முன்பே தீர்ப்பெழுதுவதுதான் ஸ்டாலின் மாடலா?'- சாடும் எதிர்க்கட்சிகள்

மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் இளைஞர்கள் இரண்டு பேர் நேற்றிரவு அதே பகுதியைச் சேர்ந்த மூவரால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தைப் பொறுத்த... மேலும் பார்க்க

'பிரசாந்த் கிஷோர் தான் வர வேண்டுமா... உங்களுக்கு மூளை இல்லையா?' - சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,"எனக்கு யாரிடம் இருந்து பாதுகாப்பு தேவை இருக்கிறது. இந்த மக்களுக்காக களத்துக்... மேலும் பார்க்க

'கோபாலபுரம் தாண்டி வெளியில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' - அண்ணாமலை

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அமெரிக்காவில் தற்போது 29 லட்சம் இந்தியர்கள் இருக்கிறார்கள். அமெரிக்க அரசு 7,50,000 பேர் விதிகளை மீறி அங்கு த... மேலும் பார்க்க