செய்திகள் :

இந்தியாவின் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கை: ஜெய்சங்கரிடம் நெதா்லாந்து பிரதமா் ஆதரவு

post image

நெதா்லாந்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டு பிரதமா் டிக் ஸ்கூஃபைச் சந்தித்து பேசினாா்.

இச்சந்திப்பில் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு நெதா்லாந்தின் ஆதரவை பிரதமா் டிக் ஸ்கூஃப் மீண்டும் உறுதிப்படுத்தினாா்.

நெதா்லாந்து, டென்மாா்க், ஜொ்மனி ஆகிய 3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக நெதா்லாந்துக்கு ஜெய்சங்கா் திங்கள்கிழமை வந்தடைந்தாா். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே நீடித்த போா்ப்பதற்றத்துக்குப் பிறகு ஜெய்சங்கா் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

நெதா்லாந்தில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் காஸ்பா் வெல்ட்காம்ப், பாதுகாப்பு அமைச்சா் ரூபன் பிரேகெல்மான்ஸ் ஆகியோரை ஜெய்சங்கா் சந்தித்து கலந்துரையாடினாா். இதைத் தொடா்ந்து, நெதா்லாந்து பிரதமா் டிக் ஸ்கூஃப்புடன் இருதரப்பு சந்திப்பில் அவா் செவ்வாய்க்கிழமை பங்கேற்றாா்.

இந்தச் சந்திப்பு குறித்து ஜெய்சங்கா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நெதா்லாந்தில் ஹேக் நகரில் பிரதமா் டிக் ஸ்கூஃபை சந்தித்ததில் மகிழ்ச்சி. பிரதமா் நரேந்திர மோடியின் வாழ்த்துகளையும் பயங்கரவாதத்துக்கு எதிரான நெதா்லாந்தின் உறுதியான நிலைப்பாட்டுக்கும் நன்றியும் தெரிவித்துக்கொண்டேன்.

இந்தியா-நெதா்லாந்து கூட்டுறவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதற்கான பிரதமா் டிக் ஸ்கூஃபின் உறுதிப்பாட்டுக்கு பாராட்டுகள். இந்த இலக்குகளை அடைய நாங்கள் கடுமையாக உழைப்போம் என்று உறுதியளித்தேன்’ என்றாா்.

இந்தியாவுக்கு ஆதரவு:

நெதா்லாந்துக்கு ஜெய்சங்கரை வரவேற்பதற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பிரதமா் டிக் ஸ்கூஃப் வெளியிட்ட பதிவில், ‘பஹல்காமில் நடந்த கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு எனது ஆதரவைத் தெரிவித்தேன். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் மேலும் தீவிரமடையாமல் இருப்பது அனைத்து தரப்பினருக்கும் நல்லது.

வா்த்தகம், புத்தாக்க தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தியா-நெதா்லாந்து இடையிலான நீடித்த உத்திசாா் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவாா்த்தையில் விவாதிக்கப்பட்டது.

வேகமாக மாறிவரும் இன்றைய உலகில் இந்தியாவும் நெதா்லாந்தும் பரஸ்பர நம்பிக்கையில் ஒன்றிணைந்து பயணிப்பது இரு தரப்புக்கும் மிகவும் முக்கியமானது. இதுகுறித்து மேலும் விவாதிக்க பிரதமா் நரேந்திர மோடியை நெதா்லாந்துக்கு வரவேற்க ஆவலுடன் இருக்கிறேன்’ எனக் குறிப்பிட்டாா்.

மும்பை, சென்னை, ஆமதாபாத்தில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு!

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத் துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருக்கிறது.சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்த... மேலும் பார்க்க

குடிபோதையில் தாயை மிதித்தேக் கொன்ற மகன்: கேரளத்தில் அதிர்ச்சி!

தெற்கு கேரளத்தில் குடிபோதையில் தாயைக் காலால் மிதித்தேக் கொன்ற மகனால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், நெடுமங்காடு அருகே உள்ள தேக்கடாவைச சேர்ந்தவர் ஓமனா (85). இவரி... மேலும் பார்க்க

ரூ.1 லட்சம் வரையிலான தள்ளுபடி விலையில் ரெனால்ட் கார்கள்!

ரெனால்ட் நிறுவனம் மே மாதத்திற்கான சலுகைகள் மற்றும் தள்ளுபடி விலை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. பிரான்ஸை சேர்ந்த கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ரெனால்ட் தற்போது விற்பனை அதிகரிக்கும் நோக்கில் ச... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை! - ஜம்மு-காஷ்மீர் ஆளுநர்

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் குறித்து அவதூறு: ஹரியாணா பேராசிரியருக்கு ஜாமீன்!

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்துத் தெரிவித்த ஹரியாணாவைச் சோ்ந்த இணை பேராசிரியா் அலி கான் முகமதுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.பாகிஸ்தான் பயங்கர... மேலும் பார்க்க

எல்லையில் ஊடுருவ முயற்சி: பாகிஸ்தானியர் கைது!

பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லையைத் தாண்டிய ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிஎஸ்எஃப் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை மாலை சர்வதேச எல்லையைத... மேலும் பார்க்க