செய்திகள் :

இந்தியாவில் மோசடியில் ஈடுபட்ட 23,000 முகநூல் பக்கங்கள் முடக்கம்!

post image

இந்தியா மற்றும் பிரேஸிலில் முதலீடு மோசடி தொடர்பான முகநூல் கணக்குகளை மெட்டா நிறுவனம் நீக்கியது.

இந்தியா மற்றும் பிரேஸில் நாடுகளில், மார்ச் மாதத்தில் மட்டும் முதலீடு மோசடி தொடர்பான முகநூலின் 23,000-க்கும் மேற்பட்ட பக்கங்கள் மற்றும் கணக்குகளை மெட்டா நிறுவனம் நீக்கியது.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது, செயல் நுண்ணறிவு உள்பட மற்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பொருளாதார ஆலோசகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோரின் சமூக ஊடகக் கணக்குகளைப் போன்று பொய்யாக உருவாக்கி, அதன் மூலம் மக்களிடம் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிரிப்டோகரன்சிகள், பங்குகள், விலையுயர்ந்த பொருள்களில் முதலீடு செய்வதன் மூலம் அதிகப்படியான வருவாயை எளிதில் ஈர்க்க முடியும் என்று மக்களை மோசடி வலையில் சிக்க வைக்கின்றனர்.

அவர்களை நம்பி, முதலீடு செய்தவுடன், தங்கள் முகநூல் கணக்குகளையோ தொடர்புகொள்ள பயன்படுத்திய சமூக ஊடகக் கணக்குகளையோ முடக்கி விடுகின்றனர்.

ஆகையால், இவ்வாறான மோசடிக்காரர்களிடம் சிக்காமல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மெட்டா நிறுவனம் அறிவுறுத்தியது.

இதையும் படிக்க:ஆபரேஷன் சிந்தூர்! பாகிஸ்தானில் எக்ஸ் தளத்தின் மீதான தடை நீக்கம்!

எதிரிகளை எங்கு அடித்தால் வலிக்குமோ அங்கு அடித்தோம்: ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி

புதுதில்லி: நவீன உத்திகள் மூலம் எதிரிகளை எங்கு அடித்தால் வலிக்குமோ, அதனை ஆராய்ந்து தேர்வு செய்து, அங்கு திட்டமிட்டு அதிதுல்லிய தாக்குதலை நடத்தினோம் என விமானப்படை தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் ஏ. கே. ப... மேலும் பார்க்க

மூன்றே நாள்களில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு பேரிழப்பு! - முப்படை அதிகாரிகள்

புது தில்லி: பாகிஸ்தான் ராணுவத்துக்கு 3 நாள் தாக்குதல்களில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று முப்படை அதிகாரிகள் இன்று(மே 11) தெரிவித்தனர்.ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை குறித்து தலைமை இயக்குநர் லெஃப்டி... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் இன்றிரவும் மின் விநியோகம் நிறுத்தம்: உஷார் நிலையில் பாதுகாப்புப்படை!

புது தில்லி: ராஜஸ்தானில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றிரவும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இரவில் ட்ரோன், ஆளில்லா சிறிய ரக விமானங்கள் மூலம் எதிரிகள் தாக்குதல்களைத் தொடுத்தால் எதிர... மேலும் பார்க்க

புல்வாமா தாக்குதல் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்: முப்படை அதிகாரிகள்

புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் இந்திய படைகளின் துல்லியமான தாக்குதலில் 3 முக்கிய பயங்கரவாதிகள் - யூசுஃப் அஸார், அப்துல் மாலிக் ராஃப், முடாசிர் அஹ்மது ஆகியோர் கொல்லப்பட்டனர் என்று ராண... மேலும் பார்க்க

பாகிஸ்தானிலிருந்து அலை அலையாய் ஏவப்பட்ட ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: விமானப்படை தளபதி

புது தில்லி: பாகிஸ்தானிலிருந்து அலை அலையாய் ஏவப்பட்ட பெரும்பாலான ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் ஏ. கே. பாரதி தெரிவித்தார்.ஆபரேஷன் சிந்தூர் குறி... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூரில் என்ன நடந்தது? 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி! - முப்படை அதிகாரிகள்

புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் லெஃப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் கயி இன்று(மே 11) மாலை செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தார்.அவர் தெரிவித்திருப்பதாவது: “ஆபரேஷன்... மேலும் பார்க்க