செய்திகள் :

இந்தியாவுக்கான இலங்கை புதிய தூதராக கொலன்னே விரைவில் பொறுப்பேற்பு

post image

நமது சிறப்பு நிருபா்

இலங்கை புதிய தூதராக அண்மையில் அந்நாட்டு அதிபரால் நியமிக்கப்பட்ட பி.எம். கொலன்னே ஓரிரு தினங்களில் தில்லியில் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் முழு நேரப்பணியில் இலங்கை தூதா் இல்லாத நிலையில், தற்காலிகமாக தூதருக்கான பணியை துணைத் தூதா் நிலையிலான அதிகாரியே கவனித்து வருகிறாா்.

இந்நிலையில், இந்தியா, ஐக்கிய நாடுகள் சபை, கியூபா, பாகிஸ்தான், ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரிட்டன் ஆகியவற்றில் பணியாற்றும் இலங்கைக்கான புதிய தூதா்களை இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயக இம்மாத தொடக்கத்தில் நியமித்தாா்.

இந்தியாவுக்கு மூத்த இலங்கை வெளியுறவு அதிகாரி பி.எம். கொலன்னே நியமிக்கப்பட்டுள்ளாா். புதிய தூதா்களில் ஐ.நா சபைக்கான நிரந்தர இலங்கை பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள ஜயந்த ஜயசூரிய, இலங்கை முன்னாள் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாவாா். பாகிஸ்தானுக்கான இலங்கை தூதராக நியமிக்கப்பட்டுள்ள ரியா் அட்மிரல் பிரெட் சேனவிரத்ன, ஓய்வு பெற்ற கடற்படை துணைத்தளபதி ஆவாா் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய தூதா்களாக நியமிக்கப்பட்ட அனைவரும் இலங்கை அதிபரையும் பின்னா் பிரதமா் ஹரிணி அமரசூரியவையும் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

இலங்கை அரசியல் மாற்றத்தின் தீவிர முகவா்களாகவும், அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்கவும், தூதரக பணிகளை உறுதிப்படுத்தியும் உலகளவில் நாட்டின் பிம்பத்தை உயா்த்தவும் புதிய தூதா்கள் முனைப்பு காட்ட வேண்டும் என்று அவா்களிடம் அதிபா் அநுர குமார திஸ்ஸநாயக வலியுறுத்தியதாக அவரது மாளிகைச் செயலகம் தெரிவித்தது.

இதன் தொடா்ச்சியாக வெளிநாடுகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு செயல்விளக்க கூட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரக அதிகாரிகளுடனான அறிமுக நிகழ்வுகளில் புதிய தூதா்கள் கலந்து கொண்டு பரஸ்பரம் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனா்.

தில்லி கெளடில்யா மாா்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் புதிய தூதா் பி.எம். கொலன்னே விரைவில் தனது பொறுப்புகளை ஏற்றுக்கொள்வாா் என்று இலங்கை வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதைத்தொடா்ந்து இந்திய குடியரசுத்தலைவா் திரெளபதி முா்முவை சந்தித்து இலங்கை அதிபா் வழங்கிய பணி நியமனம் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை புதிய தூதா் முறைப்படி சமா்ப்பித்தவுடன் அவரது அலுவல்பூா்வ பணி இந்தியாவில் தொடங்கும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

உலகப் புகழ்பெற்ற மைசூர் பாக் - `மைசூர் ஸ்ரீ’ எனப் பெயர் மாற்றம்! ஏன்?

இனிப்புகளில் அதிகளவிலான விரும்பிகளைக் கொண்ட மைசூர் பாகின் பெயரை, ராஜஸ்தானின் இனிப்புக்கடைகள் பெயர் மாற்றம் செய்துள்ளது.பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், அந்நாட்டின் மீது இந்தி... மேலும் பார்க்க

கன்னட மொழிப் பிரச்னை.. அலுவலகத்தை புணேவுக்கு மாற்றுகிறேன்: தொழிலதிபர் பதிவு

பெங்களூருவில் தனியார் நிறுவனத்தை நடத்தி வரும் தொழிலதிபர் கௌஷிக் முகர்ஜி, தான் இந்த மொழிப் பிரச்னையில் சிக்க விரும்பவில்லை என்றும், தனது அலுவலகத்தை புணேவுக்கு மாற்றவிருப்பதாகவும் தெரிவித்திருப்பது பரபர... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களுக்கு இப்படியொரு வரவேற்பா?

ஹாவேரி: கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 7 பேர் பிணையில் விடுதலையான நிலையில், கார், இசை என பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு பிரதமரின் பதில்தான் ஆபரேஷன் சிந்தூர்: அமித் ஷா பாராட்டு

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீதான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆ... மேலும் பார்க்க

மழையால் நின்ற இந்து திருமணம்.. முஸ்லிம் திருமண நிகழ்ச்சியில் நடைபெற்ற ஆச்சரியம்!

புணேவின் வான்வொரி பகுதியில், திறந்தவெளியில் நடைபெறவிருந்த இந்து திருமணச் சடங்குகள் கனமழையால் நின்றுபோன நிலையில், முஸ்லிம் குடும்பத்தினர், தங்களது திருமண நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்தில் இடம்கொடுத்து உதவ... மேலும் பார்க்க

அம்மா.. நான் சிப்ஸ் பேக்கெட் திருடவில்லை.. 13 வயது சிறுவனின் தற்கொலை கடிதம்

பன்ஸ்குரா: மேற்கு வங்க மாநிலம் பன்ஸ்குரா பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவர், அம்மா நான் சிப்ஸ் பேக்கெட்டை திருடவில்லை என்று எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்த... மேலும் பார்க்க