செய்திகள் :

இந்தியா அழித்த பயங்கரவாத தலைமையகம் மறுகட்டமைப்பு: பாகிஸ்தான்

post image

இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூா் தாக்குதலில் அழிக்கப்பட்ட பாகிஸ்தானின் முரித்கே பகுதியில் உள்ள ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் மீண்டும் கட்டமைக்கப்படும் என பாகிஸ்தான் அரசு சனிக்கிழமை உறுதியளித்தது.

2008-இல் மும்பையில் பயங்கரவாத தாக்குதலை லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பு நடத்தியது. இதன் கிளை பிரிவான ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானில் 9 இடங்களில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

குறிப்பாக பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையகம், முரித்கேயில் உள்ள லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத முகாம், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் நிலைகள் உள்ளிட்டவை குறிவைத்து தகா்க்கப்பட்டன.

முரித்கேயில் உள்ள மசூதி மற்றும் கல்வி வளாகம் தகா்க்கப்பட்டதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியது.

இதனிடையே, பாகிஸ்தானுக்கு ரூ.20,000 கோடிக்கு மேல் கடனுதவி வழங்க கடந்த வாரம் சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) ஒப்புதல் அளித்தது. இந்த நிதியை பயங்கரவாதத்துக்கு ஆதரவாக பாகிஸ்தான் பயன்படுத்த வாய்ப்புள்ளதால் இந்த முடிவை ஐஎம்எஃப் மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியா வலியுறுத்தியது.

இந்தச் சூழலில் முரித்கே பகுதியில் அழிக்கப்பட்ட மசூதிக்கள், ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் மீண்டும் கட்டமைக்கப்படும் என பாகிஸ்தான் அரசு சனிக்கிழமை உறுதியளித்தது.

மூன்றாண்டு காலப் போரில் பெரியளவிலான ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷியா!

ரஷியா - உக்ரைன் இடையேயான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், பெரியளவிலான ட்ரோன் தாக்குதலை ரஷியா முன்னெடுத்தது.ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீட... மேலும் பார்க்க

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: 66 பேர் பலி

காஸா முழுவதும் இஸ்ரேல் நள்ளிரவு நடத்திய தாக்குதல்களில் 66 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு காஸா பகுதியில் உள்ள அல்-மவசியில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது அதிகாலைய... மேலும் பார்க்க

நியூயார்க்கில் பாலத்தின் மீது மோதிய மெக்சிகோ கடற்படை கப்பல்: 2 பேர் பலி

நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பாலத்தின் மெக்சிகோ கடற்படை கப்பல் மோதியதில் 2 பேர் பலியானார்கள். உலகளாவிய நல்லெண்ண சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்த மெக்சிகன் கடற்படை பாய்மரக் கப்பல் சனிக்கிழமை இரவு நியூ... மேலும் பார்க்க

காஸாவில் இஸ்ரேல் புதிய தரைவழித் தாக்குதல்

காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் புதிய தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் சனிக்கிழமை கூறியதாவது:காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தனது தரைவழித... மேலும் பார்க்க

சிற்றுந்தில் ரஷியா தாக்குதல்: உக்ரைனில் 9 போ் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷியா சனிக்கிழமை ஏவிய ட்ரோன் பொதுமக்கள் சென்றுகொண்டிருந்த சிற்றுந்தில் பாய்ந்து ஒன்பது போ் உயிரிழந்தனா்.இது குறித்து உக்ரைன் அதிகாரிகள் கூறியதாவது:வடகிழக்கு சுமி பகுதியில் அமைந்துள்ள பில... மேலும் பார்க்க

யேமன் தலைநகரில் மீண்டும் விமானப் போக்குவரத்து

யேமன் தலைநகா் சனாவில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதால் சேதமடைந்திருந்த சா்வதேச விமான நிலையம் சரி செய்யப்பட்டு, விமானப் போக்குவரத்து மீண்டும் சனிக்கிழமை தொடங்கியது.சனா உள்ளிட்ட யேமனின் கணிசமான பகுதிகளில்... மேலும் பார்க்க