செய்திகள் :

"இந்தியா கூட்டணி பீகாரில் பெறும் வெற்றிதான், அடுத்தடுத்த வெற்றிக்கான அடித்தளம்" - மு.க. ஸ்டாலின்

post image

பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்றார். 

தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தி.மு.க. எம்.பி. கனிமொழி, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் பேரணி சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இதையடுத்து பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கும் ஸ்டாலின், "ராகுலின் கண்களில் ஒருபோதும் அச்சம் இருந்தது இல்லை. இந்தியா கூட்டணிக்கான அடித்தளம் பாட்னாவில் தான் இடப்பட்டது. பா.ஜ.க.வின் அதிகாரத்தை மக்கள் ஒருநாள் பறிப்பார்கள். தேர்தலுக்கு முன்னதாகவே பீகாரில் உங்களின் வெற்றி உறுதியாகி உள்ளதால் பேரணியை தடுக்கப் பார்க்கின்றனர்.

ராகுல் காந்தி இந்தியாவின் வழக்கறிஞராக இருக்கிறார். மக்கள் சக்தியே உயர்ந்தது என காட்டியிருக்கிறார் தேஜஸ்வி யாதவ். ராகுல், தேஜஸ்வியை வெல்ல முடியாததால் கொல்லைப்புறமாக நுழைய பார்க்கிறது பா.ஜ.க. மக்களவை தேர்தலில் 400 இடங்கள் என கனவு கண்டவர்களை 240-ல் அடக்கியது. இந்தியா கூட்டணி பீகாரில் பெறும் வெற்றி தான் இந்தியா கூட்டணி அடுத்தடுத்து பெறப்போகும் வெற்றிக்கு அடித்தளமாக அமையப்போகிறது.

மக்கள் சக்திக்கு முன் எந்த ஒரு சர்வாதிகாரியும் மண்டியிட்டுதான் ஆக வேண்டும் என்பதை மீண்டும் ஒரு முறை பீகார் மக்கள் நிரூபிக்க வேண்டும். அரசியலுக்காக பேசுபவர் அல்ல ராகுல், உண்மையின் குரலாக இருப்பவர், அவர் கண்களில் உண்மையும் தைரியமும் உள்ளது. பீகாரில் பா.ஜ.க.வின் துரோக அரசியல் தோற்கடிக்கப்பட வேண்டும்." என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

"இந்து பையனுக்கும், இஸ்லாமிய பெண்ணுக்கும் காதல் திருமணம் செய்து வைப்பார்களா?" - சீமான் கேள்வி

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற தமிழக அரசை வலியுறுத்தி நடந்த கருத்தரங்கில் பேசிய மார்கிஸ்ட் கம்பூனிஸ்ட் கட்சியின் தலைவர் பெ.சண்முகம், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்தி வை... மேலும் பார்க்க

"ஓணம் பண்டிகைக்கான சிறப்பு விடுமுறை ரத்தா?" - கேரள அமைச்சர் சிவன்குட்டி விளக்கம்!

கேரளாவில் ஓணம் (Onam) மிகப்பெரிய பாரம்பரிய திருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. மகாபலி மன்னரை (மாவேலி) நினைவுகூர்ந்து கேரளாவின் அனைத்து மதத்தினரும் 10 நாள் கொண்டாட்டமாகச் சிறப்பிக்கும் திர... மேலும் பார்க்க

Transgender’s hostel: கேரளாவில் முதன்முறையாக தொடங்கப்பட்ட திருநங்கை மாணவர்கள் விடுதி!

கேரளாவில் திருநங்கை மாணவர்களுக்காக முதல்முறையாக தனிச்சிறப்பு விடுதி இன்று ஆகஸ்ட் 26ம் தேதி தொடங்கப்பட்டிருக்கிறது. கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட இந்த விடுதிக்கு ... மேலும் பார்க்க

"விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே நம்மிடம் புஷ்பக விமானம் இருந்தது" - பாஜக அமைச்சர் பேச்சு

சமீபத்தில்பாஜக எம்.பி அனுராக் தாகூர், தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இமாசல பிரதேசத்தில் உள்ள பி.எம் ஶ்ரீ பள்ளி ஒன்றில்மாணவர்களிடம் உரையாடும் போது, "விண்வெளிக்கு முதன் முதலில் சென்றது அனுமன் ஜி தான்... மேலும் பார்க்க

ஆ.ராசா திறந்துவைத்த பஸ் ஸ்டாப்; `கட்டுமான செலவை விட விளம்பர செலவு அதிகம்போல...'- எழுந்த விமர்சனம்!

நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான அரசு மருத்துவக் கல்லூரி கனவு தற்போது சாத்தியப்பட்டிருக்கிறது. ஊட்டியில் உள்ள இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாள... மேலும் பார்க்க

பஞ்சாப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்; முதல்வர் நெகிழ்ச்சிப் பதிவு; பஞ்சாப் முதல்வர் சொன்னது என்ன?

முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று பள்ளிகளில் காலை உணவுத் திட்டம். இந்தத் திட்டத்தை 15.9.2022 அன்று மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு கா... மேலும் பார்க்க