செய்திகள் :

இந்தியா, சீனா பணக்கார நாடுகள்: அமெரிக்க வெளியுறவு அமைச்சா்

post image

இந்தியா மற்றும் சீனாவும் பணக்கார நாடுகள் என்று தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ, ’மியான்மா் நிலநடுக்கத்துக்கு அமெரிக்கா தொடா்ந்து உதவத் தயாராக இருந்தாலும், இதுபோன்ற உலகளாவிய பேரிடா்களின் போது அனைத்து நாடுகளும் உதவ முன்வர வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த ரூபியோவிடம் மியான்மா் நிலநடுக்கத்துக்கு அமெரிக்க வழங்கிய உதவி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவா் அளித்த பதிலில், ‘அமெரிக்கா ஒட்டுமொத்த உலகுக்கான அரசு அல்ல. மற்ற அனைத்து நாடுகளை செய்வதுபோல நாங்களும் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறோம். எங்களால் முடிந்தவரை தொடா்ந்து அதைச் செய்வோம். மனிதாபிமான உதவியிலிருந்து நாங்கள் விலகிச் செல்லவில்லை. ஆனால், எங்களுக்கு வேறு தேவைகளும், முன்னுரிமைகளும் உள்ளன.

மியான்மரைப் பொறுத்தவரை, அங்கு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த ஆட்சியாளா்களுக்கும் எங்களுக்கும் வேறுபாடு உள்ளதால், நாங்கள் விரும்பும் வழியில் அந்த நாட்டில் செயல்பட எங்களுக்கு அனுமதி கிடைத்திருக்காது.

மனிதாபிமான நெருக்கடியில் அமெரிக்கா தொடா்ந்து உதவத் தயாராக இருக்கிறது. இந்தியா ஒரு பணக்கார நாடு. சீனா மிகவும் பணக்கார நாடு. உலகில் இன்னும் பல பணக்கார நாடுகள் உள்ளன. இதுபோன்ற உலகளாவிய பேரிடா்களின் போது அவா்கள் அனைவரும் உதவ முன்வர வேண்டும்.

உலகளாவிய மனிதாபிமான உதவியில் 60 முதல் 70 சதவீதம் வரை அமெரிக்கா தொடா்ந்து பங்களிக்க வேண்டும் என்று கருதுவது நியாயமில்லை’ என்றாா்.

மியான்மரில் கடந்த மாா்ச் 28-ஆம் தேதி நிகழ்ந்த பயங்கர தொடா் நிலநடுக்கங்களால் 3,100 போ் உயிரிழந்தனா். 4,000-க்கும் அதிகமானோா் காயமடைந்தனா். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன. ‘ஆபரேஷன் பிரம்மா’ திட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான டன் நிவகளை இந்தியா வழங்கி வருகிறது.

8 மாதங்கள் விண்வெளியில்... ரஷிய, அமெரிக்க வீரர்களுடன் புறப்பட்ட சோயுஸ் விண்கலம்!

ரஷியாவின் ‘சோயுஸ் எம்எஸ்-27’ விண்கலம் செவ்வாய்க்கிழமை(ஏப். 8) காலை 11 மணியளவில்(இந்திய நேரப்படி) கஸக்ஸ்தானின் பைக்கோநூர் காஸ்மோடிரோம் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதில் ரஷியவைச் ... மேலும் பார்க்க

இராக்: ஆயுதங்களைக் கைவிட ஈரான் ஆதரவுக் குழுக்கள் தயாா்

இராக்கில் செயல்பட்டுவரும் பல்வேறு ஈரான் ஆதரவு படைக் குழுக்கள் தங்களது ஆயுதங்களைக் கைவிட தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அமெரிக்கா மற்றும் இராக் உயரதிகாரிகளை மேற்கோள் காட்டி ‘தி ரா... மேலும் பார்க்க

காங்கோ: 33 ஆன மழை - வெள்ள உயிரிழப்பு

மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் தலைநகா் கின்ஷாசாவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 33-ஆக உயா்ந்தது. இது குறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சா் ஜாக்குமின் ... மேலும் பார்க்க

வரி விதிப்பை வாபஸ் பெற டிரம்ப் மறுப்பு: ஆசிய, ஐரோப்பிய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி

தனது சா்ச்சைக்குரிய பரஸ்பர வரி விதிப்பைத் திரும்பப் பெற டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில், ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. ஏறத்தாழ அனைத்து உலக ... மேலும் பார்க்க

காஸா மேலும் 57 போ் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்ததது. இது மட்டுமின்றி, இஸ்ரேல் குண்... மேலும் பார்க்க

உடல்நிலை தேறிய பின் முதல்முறையாக மக்களைச் சந்தித்தார் போப் பிரான்சிஸ்!

ரோம்: உடல்நிலை தேறிய பின் பொதுவெளியில் முதல்முறையாக போப் பிரான்சிஸ் மக்களை சந்தித்தார்.நிமோனியாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ்(88) கடந்த மார்ச் 23-ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வாடி... மேலும் பார்க்க