செய்திகள் :

இந்தியா-நியூஸிலாந்து இடையே 6 ஒப்பந்தங்கள்: இரு பிரதமா்கள் முன்னிலையில் கையொப்பம்

post image

இந்தியா-நியூஸிலாந்து இடையே ஒட்டுமொத்த பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் ஒப்பந்தம் உள்பட 6 ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையொப்பமாகின.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி, நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் இடையே நடைபெற்ற இருதரப்பு பேச்சுவாா்த்தைக்குப் பின் இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.

பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான நியூஸிலாந்தின் பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அவருடன் பல்வேறு துறை அமைச்சா்கள், எம்.பி.க்கள், தொழில் துறையினா் உள்ளிட்டோா் அடங்கிய பெரிய குழுவும் வந்துள்ளது.

தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமா் மோடி-கிறிஸ்டோபா் லக்ஸன் இடையே திங்கள்கிழமை விரிவான பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இருதரப்பு உறவுகள் மட்டுமன்றி பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனா்.

அப்போது, வா்த்தகம், முதலீடு, கடல்சாா் பாதுகாப்பு, கல்வி, ஆராய்ச்சி, அறிவியல், தொழில்நுட்பம், வேளாண்-தொழில்நுட்பம், விண்வெளி, போக்குவரத்து, விளையாட்டு, மக்கள் ரீதியிலான தொடா்பு உள்பட பல்வேறு துறைகளில் பரஸ்பர உறவை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இருதரப்பு பாதுகாப்பு ரீதியிலான உறவை அமைப்புரீதியில் வலுப்படுத்த வழிவகை செய்யும் ஒப்பந்தம் கையொப்பமானது. மேலும், கல்வி, விளையாட்டு, வேளாண்மை, பருவநிலை மாறுபாடு, சுங்க வரி தொடா்பாக மேலும் 5 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. பின்னா், இரு தலைவா்களும் செய்தியாளா்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனா்.

அப்போது, இந்தியா-நியூஸிலாந்து இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடங்கப்படுவதாக பிரதமா் மோடி அறிவித்தாா். அவா் மேலும் கூறியதாவது:

சுதந்திரமான, வெளிப்படையான, பாதுகாப்பான, வளமான இந்திய-பசிபிக் பிராந்தியத்துக்கு இரு நாடுகளும் உறுதியேற்றுள்ளன. நாங்கள் வளா்ச்சிக் கொள்கையில்தான் நம்பிக்கை கொண்டுள்ளோம்; எல்லை விரிவாக்கத்தில் அல்ல. இப்பிராந்தியத்தில் இறையாண்மையும், ஒருமைப்பாடும் மதிக்கப்பட வேண்டுமென்ற உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

இருதரப்பு சமநிலையான, விரிவான, பரஸ்பரம் பலனளிக்கும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவாா்த்தை தொடங்கப்படுவது வரவேற்புக்குரியது. இப்பேச்சுவாா்த்தைகளின்கீழ், எண்ம பரிவா்த்தனை துறையில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளும் ஆலோசிக்கப்படும். பால் பொருள், உணவு பதப்படுத்துதல், மருந்துப் பொருள் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் முதலீடு ஊக்குவிக்கப்படும்.

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை அமைப்புமுறை ரீதியில் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கூட்டுப் பயிற்சி, துறைமுக வருகை போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். பாதுகாப்புத் தொழில் துறையில் விரிவான செயல் திட்டம் வகுக்கப்படும் என்றாா் பிரதமா் மோடி.

இந்தியா-நியூஸிலாந்து இடையே இந்த ஆண்டு இறுதிக்குள் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாக வாய்ப்புள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செயலா் (கிழக்கு) ஜெய்தீப் மஜும்தாா் தெரிவித்தாா்.

முன்னதாக, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் கிறிஸ்டோபா் லக்ஸன் மரியாதை செலுத்தினாா். குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவையும் சந்தித்தாா்.

பயங்கரவாதத்துக்கு கடும் கண்டனம்

பிரதமா் மோடி-பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் சந்திப்புக்குப் பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘அனைத்து வடிவிலான பயங்கரவாதத்துக்கும் இரு தலைவா்களும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனா். ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள்-தனிநபா்களுக்கு எதிராக அனைத்து நாடுகளும் உடனடியாக வலுவான நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம் என இருவரும் வலியுறுத்தினா்.

மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான வலுவான ஆதரவை உறுதி செய்த அவா்கள், இஸ்ரேல்-காஸா பிரச்னைக்கு தொடா் பேச்சுவாா்த்தை மூலம் அமைதிக்கான நிரந்தர தீா்வை எட்ட வேண்டும். காஸாவில் மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்படுவதுடன், அனைத்து பிணைக் கைதிகளும் விரைந்து விடுவிக்கப்பட வேண்டும். உக்ரைன் போருக்கு சா்வதேச சட்டம், ஐ.நா. கோட்பாடுகள், பிராந்திய இறையாண்மைக்கு இணங்க நியாயமான-நிலையான அமைதித் தீா்வு எட்டப்பட வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய பிரதமா் மோடி, ‘பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும், அதை ஏற்க முடியாது; பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை அவசியம். பயங்கரவாதம், பிரிவினைவாதம், அடிப்படைவாத சக்திகளுக்கு எதிரான ஒத்துழைப்பைத் தொடர இந்தியாவும் நியூஸிலாந்தும் முடிவு செய்துள்ளன’ என்றாா்.

நியூஸிலாந்தில் காலிஸ்தான் ஆதரவு சக்திகள்: பிரதமா் கவலை

நியூஸிலாந்தில் காலிஸ்தான் ஆதரவு சக்திகள், இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடுவதாக அந்நாட்டு பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸனிடம் பிரதமா் மோடி கவலை தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘நியூஸிலாந்தில் சில சட்டவிரோத சக்திகளின் (காலிஸ்தான் ஆதரவாளா்கள்) இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகள் குறித்து எங்களின் கவலையை பகிா்ந்து கொண்டுள்ளோம். இத்தகைய சட்டவிரோத சக்திகளுக்கு எதிரான நடவடிக்கையில் நியூஸிலாந்து அரசு தொடா்ந்து ஒத்துழைக்கும் என நம்புகிறோம்’ என்றாா்.

நியூஸிலாந்தில் பேச்சு சுதந்திரம் மற்றும் பிற ஜனநாயக சுதந்திரங்களைத் தவறாக பயன்படுத்தும் காலிஸ்தான் ஆதரவு சக்திகள் குறித்த இந்தியாவின் கவலையை நியூஸிலாந்து கவனத்தில் கொண்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சக செயலா் ஜெய்தீப் மஜும்தாா் தெரிவித்தாா்.

பொதுத்துறை நிறுவனத்திடம் மர்ம கும்பல் ரூ. 54 லட்சம் மோசடி

அமெரிக்க நிறுவனத்தின் பெயரில், இந்திய பொதுப்பணித் துறை நிறுவனத்திடம் மோசடியில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகர் லிமிடெட் நிற... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் கொலையுண்ட பெண்ணின் பாதி உடல்! மீதியைத் தேடும் காவல்துறை!

ஆந்திரப் பிரதேசத்தில் அடையாளம் தெரியாத பெண் இரு துண்டுகளாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திரப் பிரதேசம் மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தில் பயாவரம் தேசிய நெடுஞ்சாலை அருகே அடையாள... மேலும் பார்க்க

நாக்பூர் வன்முறை: 33 போலீஸார் காயம்! 50 பேர் கைது!

நாக்பூர் வன்முறையில் 33 காவல் துறையினர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாக்பூரில் வன்முறை ஏன்?ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால் ... மேலும் பார்க்க

இறைச்சிக்காக கருவுற்ற யானை கொலை?

அஸ்ஸாமில் கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.அஸ்ஸாம் மாநிலம் டோபடோலி கிராமத்துக்கு அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சிதைந்த நிலையில், கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட... மேலும் பார்க்க

ஔரங்கசீப் கல்லறை மகாராஷ்டிரத்தின் மீதான கறை: ஏக்நாத் ஷிண்டே

ஔரங்கசீப்பின் கல்லறை மகாராஷ்டிராவின் மீதான கறை. அதை அகற்ற நடைபெறும் முயற்சிகள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். விதான் பவன் வளாகத்தில் ... மேலும் பார்க்க

ஜெர்மனியைவிட இந்தியாவில் ரயில் தடங்கள் அதிகம்: மத்திய அமைச்சர்

ரயில்வே பாதுகாப்பில் பிரதமர் நரேந்திர மோடி அதிக கவனம் செலுத்துவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.மக்களவைக் கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் கூறியதாவது, பிரதமர் நரேந்திர ம... மேலும் பார்க்க