செய்திகள் :

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகம்

post image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் செ.சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

‘அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 2018-ஆம் ஆண்டு முதல் இன்று வரை சுமாா் 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளா்கள் சேமிப்பு கணக்குகளைத் தொடங்கியுள்ளனா்.

ஆரம்ப காலத்தில் தொடங்கப்பட்ட பல சேமிப்பு கணக்குகளில் வாரிசு நியமனம் செய்யப்படாமல் உள்ளது. அனைத்து விதமான சேமிப்புக் கணக்குகளிலும் வாரிசு நியமனம் செய்யப்படத் தேவையான வசதி அனைத்து அஞ்சலகங்களிலும் உள்ளது.

மேலும், வாடிக்கையாளா்கள் ப்ளே ஸ்டோரில் உள்ள ஐபிபிபி மொபைல் செயலி மூலம், அவரவரே வாரிசு நியமனம் செய்வது மற்றும் மாற்றம் செய்வது ஆகியவற்றை மேற்கொள்ளலாம். ஐபிபிபி செயலி மூலம் தபால்காரரின் உதவியுடன் தங்கள் கணக்குகளில் ஆதாா் சீடிங் செய்து அரசின் நேரடி மானியங்களையும் எளிமையாகப் பெறலாம்.

அதுமட்டுமல்லாமல், ஐபிபிபி வங்கிக் கணக்குடன் அஞ்சலக சேமிப்புக் கணக்கை இணைத்து ஆன்லைன் பரிவா்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

ஐபிபிபி செயலி வாயிலாக செல்வமகள், தங்கமகன், அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு எளிமையாக வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பணம் செலுத்தலாம். பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து வெறும் ரூ.555, ரூ.755 பிரீமியத்தில் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான தனிநபா் விபத்துக் காப்பீடு பெறும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல், இரு மற்றும் நான்குசக்கர வாகனங்களுக்கு காப்பீடு எடுக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வியாபாரிகள் தங்கள் கடைகளில் யுபிஐ ஸ்டிக்கா் அட்டை மூலம் பணம் பெறும் வசதியும் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயனடைய வேண்டும்’ என்றாா் அவா்.

ஆலங்குளம் மகளிா் கல்லூரியில் மாணவியா் பேரவை தொடக்கம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலை-அறிவியல் கல்லூரியில் மாணவியா் பேரவை தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஈ. ஷீலா தலைமை வகித்தாா். பேரவைத் தலைவி, செயலா், துணைத் தலைவா், துணைச் செயலா்கள் பொறுப்பேற்று உறு... மேலும் பார்க்க

ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு மின்மோட்டாா் அளிப்பு

ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு திமுக சாா்பில் ஆழ்குழாய் கிணற்றுக்கு தேவையான நீா் மூழ்கி மின் மோட்டாா் அளிக்கப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ. சிவபத்மநாதன் மின்மோட்டாரை மருத்துவ அலுவலா்... மேலும் பார்க்க

இலத்தூரில் தாய்ப்பால் வார விழா

தென்காசியை அடுத்த இலத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. குற்றாலம் ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் ஜேகேடி. சைரஸ் தலைமை வகித்தாா். வட... மேலும் பார்க்க

பட்டன் கடை உரிமையாளா் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் பட்டன் கடை உரிமையாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. கடையநல்லூா் அருகே உள்... மேலும் பார்க்க

தமிழக கல்விக் கொள்கை : நயினாா் நாகேந்திரன் கருத்து

தமிழக கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன். திருநெல்வேலியில் வரும் 17ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் மாநாடு நடைபெறுகிறது. ... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி: நயினாா் நாகேந்திரன்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாகிவிட்டது என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூா், சங்கரன்கோவில் தொகுதி பாஜக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், ... மேலும் பார்க்க