சாலை விபத்துகளை தடுக்க தீவிர நடவடிக்கை அவசியம்: வெ.வைத்திலிங்கம் எம்.பி.
இந்தியா: மொபைல் போன் ஏற்றுமதி 40% அதிகரிக்க வாய்ப்பு
இந்தியாவில் மொபைல் போன்களின் ஏற்றுமதி அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலகளவில் அதிக மக்கள்தொகையில் முதலிடம் கொண்டுள்ள இந்தியாவில் மொபைல் போன்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
அதுமட்டுமின்றி, மொபைல் போன்களுக்கான மிகப்பெரிய சந்தையாகத் திகழும் இந்தியாவில் மொபைல் போன் ஏற்றுமதியும், கடந்த நிதியாண்டைவிட நடப்பாண்டில் (FY 25) 40 சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மொபைல் போன் ஏற்றுமதி, ஏப்., 2024 - ஜன., 2025 நிதியாண்டில் ரூ. 1,50,000 கோடியை எட்டியுள்ளது. இது, 2025 - 26 நிதியாண்டில் ரூ. 1,80,000 கோடியை (40%) எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகளாவிய உற்பத்தி சக்தியாக இந்தியாவின் எழுச்சியை வெளிக்காட்டுகிகிறது.
இந்திய வரலாற்றில் முதன்முறையாக சிறந்த ஏற்றுமதி பொருளாக ஸ்மார்ட் போன்கள் மாறியுள்ளன.
இதையும் படிக்க:போதைப் பழக்கத்திற்கு அடிமையான பெண்! முகத்தில் உருவான ஓட்டை!