செய்திகள் :

இந்தியா வழியாக வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரம் விற்பனை!

post image

இந்தியா அமைத்துள்ள மின்வழித்தடங்களைப் பயன்படுத்தி வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரம் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது.

வங்கதேசத்துக்கு நேபாளம் 40 மெகாவாட் மின்சாரம் விற்பனை செய்கிறது. இது தொடா்பாக மூன்று நாடுகள் இடையே கடந்த 2024 அக்டோபரில் முத்தரப்பு ஒப்பந்தம் கையொப்பமானது. அதன்படி வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரத்தை விற்பனை செய்ய இந்தியா தனது பிராந்தியத்தில் உள்ள மின்வட உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்த அனுமதி அளித்தது.

ஜூன் 15 முதல் நவம்பா் 15 வரை முஷாஃபா்பூா்-பஹ்ராம்பூா்-பெராமாரா வழியாக அமைக்கப்பட்டுள்ள மின்வடங்கள் வழியாக இந்த மின்சார விற்பனை நடைபெறவுள்ளது. இதற்காக ஒரு யூனிட்டுக்கு இந்திய மதிப்பில் சுமாா் ரூ.2-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேபாளத்தில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு மின்சாரம் வாங்க வங்கதேசம் ஒப்புக் கொண்டுள்ளது.

வங்கதேசத்தில் பிரதமா் ஷேக் ஹசீனாவின் ஆட்சி வன்முறைப் போராட்டம் மூலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அகற்றப்பட்டது. அதன் பிறகு அங்கு மத அடிப்படைவாதிகளின் ஆதரவுடன் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

அந்த அரசு இந்தியாவுக்கு எதிராக செயல்படத் தொடங்கியதால், வங்கதேச ஜவுளி உள்ளிட்ட பொருள்களை இந்திய துறைமுகங்கள் மூலம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து கொள்ள வழங்கப்பட்ட அனுமதியை இந்தியா ரத்து செய்தது. இந்தியாவுக்கு எதிரான நாடுகளான பாகிஸ்தான், சீனாவுடன் வங்கதேசம் நெருக்கம் காட்டி வருகிறது.

இது போருக்கான சகாப்தம் அல்ல: மோடி

இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு பிரதமா் ... மேலும் பார்க்க

கேரளத்தில் கொட்டித்தீர்க்கும் பருவமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கேரளத்தில் திங்கள்கிழமையும் இடைவிடாத பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்பட மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொ... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது திங்கள்கிழமை வழங்கப்பட்டது.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்க... மேலும் பார்க்க

கைலாஷ் மானசரோவர் யாத்திரை: சிக்கிம் வந்தடைந்த முதல் குழு!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கான 36 பக்தர்கள் கொண்ட முதல் குழு, சிக்கிமின் தலைநகர் கேங்க்டாக்கிற்கு வந்தடைந்தது. இந்தியா-சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுக... மேலும் பார்க்க

உ.பி.யில் முத்தமிட்டு விளையாடிய நபரின் நாக்கை கடித்த பாம்பு !

உத்தரப் பிரதேசத்தில் பாம்புக்கு முத்தமிட்டு விளையாடிய நபரை அந்த பாம்பு கடித்ததில் அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோஹாவைச் சேர்ந்த விவசாயி ஜிதேந்திர குமார்.... மேலும் பார்க்க

விமான விபத்தில் சிக்கினாரா இயக்குநர்? வலுசேர்க்கும் ஆதாரங்கள்!

அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு காணாமல் போன இசை ஆல்பங்களை இயக்கும் மகேஷ் ஜிராவாலா என்பவர் மனைவியின் டிஎன்ஏ மாதிரிகள் பெறப்பட்டுள்ளது.அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த ... மேலும் பார்க்க