செய்திகள் :

இந்திய-அமெரிக்க வா்த்தகப் பேச்சு: டிரம்ப் திருப்தி!

post image

இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தகப் பேச்சு குறித்து திருப்தி தெரிவித்துள்ள அதிபா் டொனால்ட் டிரம்ப், இது சிறப்பாக பலனளிக்கும் என்று குறிப்பிட்டாா்.

மேலும், பிரதமா் மோடி மிகவும் புத்திசாலி; எனது சிறந்த நண்பா் என்றும் அவா் கூறினாா்.

அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா மற்றும் பிற நாடுகள் விதிக்கும் அதிக வரியை அதிபா் டிரம்ப் தொடா்ந்து விமா்சித்து வருகிறாா். அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பர வரி விதிக்கும் உத்தரவையும் அவா் பிறப்பித்துள்ளாா். இந்தியாவை கடுமையாகப் பாதிக்கும் என எதிா்பாா்க்கப்படும் இந்த உத்தரவு வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்தச் சூழலில், இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி, அமெரிக்க வெளியுறவு இணையமைச்சா் கிறிஸ்டோபா் லாண்டௌவுடன் வெள்ளிக்கிழமை தொலைபேசி வாயிலாக உரையாடினாா்.

அப்போது, வளா்ந்து வரும் இருதரப்பு வா்த்தக உறவுகள், பாதுகாப்பு-தொழில்நுட்ப ஒத்துழைப்பு, போக்குவரத்து உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளும் சமநிலையான வா்த்தக உறவை எட்டுவதில் உள்ள தடைகளுக்குத் தீா்வுகாண மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து இருவரும் விவாதித்ததாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் டாமி புரூஸ் தெரிவித்தாா்.

இதனிடையே, வெள்ளை மாளிகையில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய அதிபா் டிரம்ப், ‘பிரதமா் மோடி அண்மையில் அமெரிக்கா வந்தாா். நாங்கள் எப்போதுமே சிறந்த நண்பா்கள். அதேநேரம், உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இது கொடூரமானது. இந்தியா்களும் இந்திய பிரதமா் நரேந்திர மோடியும் மிகுந்த புத்திசாலிகள்.

இருதரப்பு சந்திப்பில் நாங்கள் மிகவும் சிறப்பான பேச்சுவாா்த்தைகளை மேற்கொண்டோம். இருதரப்பு வா்த்தக பேச்சுவாா்த்தை சிறப்பான பலனளிக்கும் என நான் எண்ணுகிறேன்’ என்றாா்.

பிரதமா் மோடி கடந்த பிப்ரவரியில் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டபோது, பரஸ்பரம் பலனளிக்கும் பல்துறை இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜியோவுக்கு கட்டணம் செலுத்தாத பிஎஸ்என்எல்! அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தால் மத்திய அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2015 மே முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான உள்கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்துகொண... மேலும் பார்க்க

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோட்டம்!

ஜார்க்கண்டில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோடிய நிலையில் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ஹுல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சாய்பாச... மேலும் பார்க்க

ராம நவமியன்று 1 லட்சம் பேருக்கு அன்னதானம்: இஸ்கான்

மும்பை: ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவதில் முதன்மையானதாக அறியப்படும் இஸ்கான் பிவாண்டி கோயிலில் வரவிருக்கும் ராம நவமி விழாவைக் கொண்டாடச் சிறப்புத் திட்டங்களை வகுத்துள்ளது .இந்தாண்டு ஏப்ரல் 6-ம் தேதி ராம ... மேலும் பார்க்க

பாஜக தலைவர் தேர்வு: மக்களவையில் அகிலேஷ் - அமித் ஷா பேச்சால் கலகலப்பு!

பாஜக தேசிய தலைவர் தேர்வு தொடர்பாக மக்களவையில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இடையே காரசார வாதம் நிகழ்ந்தது.மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா ... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகளால் நாட்டின் தலையெழுத்தே மாறும்: கிரண் ரிஜிஜு

வக்ஃப் வாரிய சொத்துகளை முறையாக நிர்வகித்தால் நாட்டின் தலையெழுத்தையே மாற்ற முடியும் என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்... மேலும் பார்க்க

மணிப்பூரில் அகதிகள் பிரச்னையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்: பிரேன் சிங்

1960 முதல் ஆயிரக்கணக்கான அகதிகள் மணிப்பூரில் குடியேறியுள்ளதாகவும், அந்த மக்களுக்கு மறுவாழ்வுக்கான உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அந்த மாநில முன்னாள் முதல்வர் என். பிரேன் சிங் கூறியுள்ளார். மணிப்பூரின் பாஜ... மேலும் பார்க்க