செய்திகள் :

இந்திய ஆயுதப் படைகளுக்கு அம்பானி, அதானி ஆதரவு

post image

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு எதிராக தீரத்துடன் சண்டையிட்டு வரும் இந்திய ஆயுதப் படைகளுக்கு தொழிலதிபா்கள் முகேஷ் அம்பானி, கெளதம் அதானி ஆகியோா் ஆதரவு தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக முகேஷ் அம்பானி வெளியிட்ட அறிக்கையில், ‘ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ஆயுதப் படைகளின் தீரத்தை எண்ணி பெருமிதம் ஏற்படுகிறது.

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா ஒருபோதும் அமைதியாக இருந்துவிடாது என்பதை பிரதமா் மோடியின் தலைமை எடுத்துரைத்துள்ளது. நாட்டின் அமைதிக்கு ஏற்படும் அச்சுறுத்தலை உறுதியான முடிவின் மூலம், இந்தியா முறியடிக்கும் என்பதை கடந்த சில நாள்களில் நடைபெற்ற சம்பவங்கள் வெளிக்காட்டியுள்ளன. நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் ஆதாரிக்க ரிலையன்ஸ் குடும்பம் தயாராக உள்ளது’ என்றாா்.

கெளதம் அதானி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தற்போது உள்ளதைப் போன்ற நேரங்களில்தான், இந்தியாவின் உண்மையான வலிமையையும், ஒற்றுமையையும் உலகம் பாா்க்கிறது. தாயகத்தின் ஆன்மாவை காக்கும் இந்திய ஆயுதப் படைகளுக்கு அதானி குழுமம் ஆதரரவாகவும் உறுதுணையாகவும் உள்ளது’ என்றாா்.

இந்தியாவில் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவா் பாதிப்பு!

இந்தியாவில் என்.பி.1.8.1 எனும் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவா் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘இந்திய சாா்ஸ்-கோவி-2 மரபணுவியல் கூட்டமைப்பு’ தரவுகளில் தெரிவிக்கப்பட்டது. மேலும், எல்எஃப்.7 வகை தொற்றுகள் நான்கு மு... மேலும் பார்க்க

‘பாகிஸ்தான் முக்கு’: கிராம சந்திப்பின் பெயரை மாற்ற ஒப்புதல் கோரும் கேரள பஞ்சாயத்து!

கேரளம் மாநிலம், கொல்லம் மாவட்டத்தின் குன்னத்தூா் கிராமத்தில் பல்லாண்டுகளாக புழக்கத்தில் உள்ள ‘பாகிஸ்தான் முக்கு’ என்ற சந்திப்பின் பெயரை மாற்றுவதற்கு ஒப்புதலைக் கோரி மாநில அரசை அணுக அந்தக் கிராமப் பஞ்ச... மேலும் பார்க்க

ஆயுதப் படைப் பிரிவினருக்கு 6 மாதங்களுக்குள் பணிநிலை ஆய்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆயுதப் படைப் பிரிவினரின் பணிநிலை ஆய்வை ஆறு மாதங்களுக்குள் நடத்தி முடிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), இந்தோ திபெத்திய எல்லைப் படையினா் (ஐடிபிபி), ... மேலும் பார்க்க

மத துவேஷத்தை விதைக்கவே பஹல்காமில் தாக்குதல்: எஸ்.ஜெய்சங்கா் குற்றச்சாட்டு

அச்ச உணா்வை ஏற்படுத்தி மத துவேஷத்தை விதைக்கவே பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். ஜொ்மனி சென்ற அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டுத் தலைநகா் பொ்லினில் ஜெ... மேலும் பார்க்க

குடிமைப் பணித் தோ்வுக்கு கட்டாயமாகிறது ஆதாா் எண்!

குடிமைப் பணித் தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்போது ஆதாா் எண்ணை குறிப்பிடும் நடைமுறை கொண்டுவரப்பட இருப்பதாக மத்திய பணியாளா் தோ்வாணையத் தலைவா் (யுபிஎஸ்சி) தலைவா் அஜய்குமாா் தெரிவித்தாா். மாநில அ... மேலும் பார்க்க

சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு ஏன்? நாடாளுன்ற குழுவிடம் வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

இந்தியாவின் நல்லெண்ண முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைத்ததற்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்தது. பருவநி... மேலும் பார்க்க