செய்திகள் :

இந்திய ஆயுதப் படைகளுக்கு அம்பானி, அதானி ஆதரவு

post image

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு எதிராக தீரத்துடன் சண்டையிட்டு வரும் இந்திய ஆயுதப் படைகளுக்கு தொழிலதிபா்கள் முகேஷ் அம்பானி, கெளதம் அதானி ஆகியோா் ஆதரவு தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக முகேஷ் அம்பானி வெளியிட்ட அறிக்கையில், ‘ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ஆயுதப் படைகளின் தீரத்தை எண்ணி பெருமிதம் ஏற்படுகிறது.

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா ஒருபோதும் அமைதியாக இருந்துவிடாது என்பதை பிரதமா் மோடியின் தலைமை எடுத்துரைத்துள்ளது. நாட்டின் அமைதிக்கு ஏற்படும் அச்சுறுத்தலை உறுதியான முடிவின் மூலம், இந்தியா முறியடிக்கும் என்பதை கடந்த சில நாள்களில் நடைபெற்ற சம்பவங்கள் வெளிக்காட்டியுள்ளன. நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் ஆதாரிக்க ரிலையன்ஸ் குடும்பம் தயாராக உள்ளது’ என்றாா்.

கெளதம் அதானி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தற்போது உள்ளதைப் போன்ற நேரங்களில்தான், இந்தியாவின் உண்மையான வலிமையையும், ஒற்றுமையையும் உலகம் பாா்க்கிறது. தாயகத்தின் ஆன்மாவை காக்கும் இந்திய ஆயுதப் படைகளுக்கு அதானி குழுமம் ஆதரரவாகவும் உறுதுணையாகவும் உள்ளது’ என்றாா்.

இந்தியா Vs பாகிஸ்தான்: செய்திகள் நேரலை!

முந்தைய செய்திகள்படிக்க : ஆபரேஷன் சிந்தூர்: செய்திகள் - நேரலைசென்னை வந்தடைந்த மாணவர்கள்! பஞ்சாப் மாநில எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதுகாப்பு கருதி, பஞ்சாப... மேலும் பார்க்க

எஸ்-400 சுதர்சன் சக்ராவுக்கு எந்தப் பாதிப்புமும் இல்லை! - இந்திய ராணுவம்

எஸ்-400 வான் பாதுகாப்பு சாதனத்துக்கு எந்தப் பாதிப்புமும் இல்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இ... மேலும் பார்க்க

பஞ்சாப் மாநிலத்திலிருந்து சென்னை வந்தடைந்த மாணவர்கள்!

சென்னை: பஞ்சாப் மாநில எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதுகாப்பு கருதி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரிலிருந்து புறப்பட்ட 5 தமிழக மாணவர்கள் இன்று காலை விமானம் மூலம் செ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் திட்டங்களை முறியடிப்போம்: இந்திய ராணுவம்

புது தில்லி: போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானின் திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம் என்று இந்திய ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நீடி... மேலும் பார்க்க

இந்தியாவின் பாதுகாப்பு அரண்...

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க இந்தியாவின் பாதுகாப்பு அரணாக எஸ்-400 டிரையம்ப் வான் பாதுகாப்பு சாதனம், பராக் -8, ஆகாஸ் ஏவுகணைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக ராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பஹ... மேலும் பார்க்க

பாதுகாப்பு நிலவரம்: முப்படை தளபதிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை

நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். பயங்கரவாதிகளுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இந்திய ராணுவ நிலைகளைக... மேலும் பார்க்க