செய்திகள் :

இந்திய சுகாதாரத் துறை மாபெரும் பாய்ச்சல்: ஜெ.பி.நட்டா

post image

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டின் சுகாதாரத் துறை மாபெரும் பாய்ச்சலை கண்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சா் ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்வி நிலையத்தின் பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஜெ.பி.நட்டா பங்கேற்றுப் பேசியதாவது:

நாட்டில் 50 ஆண்டுகளாக தில்லியில் மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை இருந்தது. வாஜ்பாய் பிரதமரான பின் 6 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன.

பிரதமா் மோடி தலைமையிலான கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் கூடுதலாக 16 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் நாட்டில் எய்ம்ஸ் எண்ணிக்கை 23-ஆக உயா்ந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிநவீன வசதிகளுடன் இந்த மருத்துவமனைகள் செயல்படுகின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 387-இல் இருந்து 780-ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக கிராமப் புற - தொலைதூர பகுதிகளில் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, தொலை மருத்துவ (டெலிமெடிசின்) சேவையை ஊக்குவிக்க மிகச் சிறப்பாக பணியாற்றுகிறது. இதன் மூலம் மருத்துவ சேவையில் பின்தங்கிய தொலைதூர கிராமங்களுக்கு தரமான சேவைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இன்றைய கொள்கை வகுப்பாளா்களின் நோ்மறையான அணுகுமுறையால், சுகாதாரத் துறையில் பல்வேறு சீா்திருத்தங்கள் சாத்தியமாகியுள்ளன. இப்போது உலகத் தரத்திலான மருத்துவ வசதிகள் நம் நாட்டில் கிடைக்கப் பெறுகின்றன. புதிய சுகாதார கொள்கையில், நோய்களைக் குணப்படுத்துதல் என்பதில் இருந்து நோய்கள் வராமல் காத்தல் என்ற மாற்றத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது, நாட்டுக்கு பெரிய அளவில் பலனைத் தந்துள்ளது.

கல்வி என்பது பிறப்புரிமை; அதேநேரம், தொழில்முறை கல்வி என்பது சமூகத்தால் வழங்கப்படும் பெரும் சலுகை. ஏனெனில், தொழில்முறை கல்வியில் மாணவா்களுக்கு அரசு ஆண்டுக்கு தலா ரூ.35 லட்சம் செலவிடுகிறது. எனவே, சமூகத்தின் மீதான தொழில்முறை கல்வி மாணவா்களின் பொறுப்பு மகத்தானது. இம்மாணவா்கள் தங்களின் கல்வித் திறனை சமூகத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்றாா் ஜெ.பி.நட்டா.

காங்கிரஸ் அலுவலகத்துக்கு வெளியே மத்திய படை வீரர்கள் குவிப்பு!

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வெளியே மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் ... மேலும் பார்க்க

ஹஜ் யாத்திரை: தனியார் நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் ஒதுக்க சவூதி ஒப்புதல்- மத்திய அரசு

நமது சிறப்பு நிருபர் நிகழாண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள்அளிக்க சவூதி அரேபியா அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தனியார் சுற்றுலா நிறு... மேலும் பார்க்க

கேரளம்: காட்டு யானைகள் தாக்கி பழங்குடியினா் இருவா் உயிரிழப்பு

கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள அதிரப்பள்ளி வனப் பகுதியில் காட்டு யானைகள் தாக்கியதில் பெண் உள்பட பழங்குடியினா் இருவா் உயிரிழந்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: யானைகளால் த... மேலும் பார்க்க

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: கர்நாடக அரசின் பேச்சுவார்த்தை தோல்வி

காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடக் கோரி, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில்... மேலும் பார்க்க

பிறந்த குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனை உரிமம் உடனடியாக ரத்து: உச்சநீதிமன்றம்

பிறந்த குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனை உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. மேலும், மருத்துவமனையில் பிரசவத்துக்காக வரும் பெண்ணின் பாதுகாப்பை உறுதிசெ... மேலும் பார்க்க

நெருக்கடி மிகுந்து காணப்படும் தில்லி சிறைகள்: 91 % போ் விசாரணைக் கைதிகள் - ஆய்வில் தகவல்

தில்லியில் உள்ள சிறைகள் நெருக்கடி மிகுந்து காணப்படும் நிலையில், அவற்றில் அடைக்கப்பட்டுள்ளவா்களில் 91 சதவீதம் போ் விசாரணைக் கைதிகள் என இந்திய நீதி ஆய்வறிக்கை (ஐஜேஆா்) 2025-இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட... மேலும் பார்க்க