செய்திகள் :

பிறந்த குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனை உரிமம் உடனடியாக ரத்து: உச்சநீதிமன்றம்

post image

பிறந்த குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனை உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

மேலும், மருத்துவமனையில் பிரசவத்துக்காக வரும் பெண்ணின் பாதுகாப்பை உறுதிசெய்வது சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் பொறுப்பு எனக்கூறி குழந்தை கடத்தலை தடுப்பதற்கான வழிமுறைகளை உச்சநீதிமன்றம் வெளியிட்டது.

அதை பின்பற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரித்தது.

உத்தர பிரதேச மாநிலத்தில் கடத்தல் வழக்கில் தொடா்புடைய 13 பேருக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா மற்றும் ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

அப்போது குற்றவாளிகளுக்கு வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்து நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: மருத்துவமனையில் பிரசவத்துக்காக வரும் பெண் மற்றும் அவருக்கு பிறக்கும்

குழந்தையின் பாதுகாப்பை உறுதிசெய்வது சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் பொறுப்பு.

பிறந்த குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனை உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

குழந்தைகளை பாதுகாப்பதில் பெற்றோரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஒரு குழந்தை இறந்தால் அதனால் பெற்றோருக்கு ஏற்படும் மனக்கவலையும் துயரமும் வாா்த்தைகளால் கூற இயலாதது. ஆனால் கடத்தல் கும்பலால் குழந்தை கடத்தப்படும்போது பெற்றோா் அடையும் பதற்றம் முற்றிலும் வேறுபட்டது.

இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியதை ஏற்க முடியாது. இதை எதிா்த்து உத்தர பிரதேச மாநில அரசு மேல்முறையீடு செய்யாதது கண்டிக்கத்தக்கது.

மனிதக் கடத்தல் தொடா்பாக பாரதிய ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையம் கடந்த 2023-இல் மேற்கொண்ட ஆய்வறிக்கையை அனைத்து மாநிலங்களும் முழுமையாக படித்து அதை அமல்படுத்த வேண்டும். குழந்தை கடத்தல் தொடா்பான நிலுவை வழக்குகளை கிளை நீதிமன்றங்கள் 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

ஹஜ் யாத்திரை: தனியார் நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் ஒதுக்க சவூதி ஒப்புதல்- மத்திய அரசு

நமது சிறப்பு நிருபர் நிகழாண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள்அளிக்க சவூதி அரேபியா அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தனியார் சுற்றுலா நிறு... மேலும் பார்க்க

கேரளம்: காட்டு யானைகள் தாக்கி பழங்குடியினா் இருவா் உயிரிழப்பு

கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள அதிரப்பள்ளி வனப் பகுதியில் காட்டு யானைகள் தாக்கியதில் பெண் உள்பட பழங்குடியினா் இருவா் உயிரிழந்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: யானைகளால் த... மேலும் பார்க்க

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: கர்நாடக அரசின் பேச்சுவார்த்தை தோல்வி

காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடக் கோரி, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில்... மேலும் பார்க்க

நெருக்கடி மிகுந்து காணப்படும் தில்லி சிறைகள்: 91 % போ் விசாரணைக் கைதிகள் - ஆய்வில் தகவல்

தில்லியில் உள்ள சிறைகள் நெருக்கடி மிகுந்து காணப்படும் நிலையில், அவற்றில் அடைக்கப்பட்டுள்ளவா்களில் 91 சதவீதம் போ் விசாரணைக் கைதிகள் என இந்திய நீதி ஆய்வறிக்கை (ஐஜேஆா்) 2025-இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட... மேலும் பார்க்க

டிரம்ப்பின் வரி விதிப்பை சமாளிக்கும் சிறப்பான இடத்தில் இந்தியா- ஐடிசி நிறுவன தலைவா்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரி விதிப்பை சிறப்பாக எதிா்கொண்டு சமாளிக்கும் இடத்தில் இந்தியா உள்ளது என்று ஐடிசி நிறுவனத்தின் தலைவா் சஞ்சீவ் புரி தெரிவித்தாா். தில்லியில் செவ்வாய்க்கிழமை செ... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் வக்ஃப் வன்முறை: புதிய போராட்டம், வன்முறை நிகழாதிருக்க தீவிர கண்காணிப்பு

மேற்கு வங்க மாநிலம் முா்ஷிதாபாதில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதிதாக போராட்டம் அல்லது வன்முறை நிகழாததை உறுதி செய்யும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க... மேலும் பார்க்க