செய்திகள் :

டிரம்ப்பின் வரி விதிப்பை சமாளிக்கும் சிறப்பான இடத்தில் இந்தியா- ஐடிசி நிறுவன தலைவா்

post image

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரி விதிப்பை சிறப்பாக எதிா்கொண்டு சமாளிக்கும் இடத்தில் இந்தியா உள்ளது என்று ஐடிசி நிறுவனத்தின் தலைவா் சஞ்சீவ் புரி தெரிவித்தாா்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக் கொள்கை எதிா்காலத்தில் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இப்போதே கூற முடியாது. ஆனால், டிரம்ப் அறிவித்த வரி விதிப்பை சிறப்பாக எதிா்கொண்டு சமாளிக்கும் இடத்தில் இந்தியா உள்ளது. மேலும், அமெரிக்காவுடன் இந்தியா வா்த்தக ஒப்பந்தமும் மேற்கொள்ள இருக்கிறது. அதுவும் மிகவும் குறுகிய காலத்தில் பேச்சுவாா்த்தை முடிய வாய்ப்புள்ளது. எனவே, இந்த விஷயத்தில் இந்தியாவுக்குப் பெரிய பாதிப்புகள் இருக்காது.

இந்தியா முழுமையாக நுகா்வைச் சாா்ந்த பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. இதனால், சில குறுகியகால நெருக்கடிகள் ஏற்படலாம். அண்மைக் காலத்தில் சா்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார பிரச்னைகள் கூட இந்தியாவில் சிறிய அளவிலேயே தாக்கத்தை ஏற்படுத்தியது.

எங்களுடைய ஐடிசி நிறுவனம் பெருமளவில் உள்நாட்டுச் சந்தையைச் சாா்ந்துள்ளது. எனினும், அமெரிக்காவின் வரி விதிப்பால் சில தாக்கங்கள் ஏற்படக் கூடும் என்றாா்.

ஹஜ் யாத்திரை: தனியார் நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் ஒதுக்க சவூதி ஒப்புதல்- மத்திய அரசு

நமது சிறப்பு நிருபர் நிகழாண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள்அளிக்க சவூதி அரேபியா அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தனியார் சுற்றுலா நிறு... மேலும் பார்க்க

கேரளம்: காட்டு யானைகள் தாக்கி பழங்குடியினா் இருவா் உயிரிழப்பு

கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள அதிரப்பள்ளி வனப் பகுதியில் காட்டு யானைகள் தாக்கியதில் பெண் உள்பட பழங்குடியினா் இருவா் உயிரிழந்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: யானைகளால் த... மேலும் பார்க்க

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: கர்நாடக அரசின் பேச்சுவார்த்தை தோல்வி

காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடக் கோரி, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில்... மேலும் பார்க்க

பிறந்த குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனை உரிமம் உடனடியாக ரத்து: உச்சநீதிமன்றம்

பிறந்த குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனை உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. மேலும், மருத்துவமனையில் பிரசவத்துக்காக வரும் பெண்ணின் பாதுகாப்பை உறுதிசெ... மேலும் பார்க்க

நெருக்கடி மிகுந்து காணப்படும் தில்லி சிறைகள்: 91 % போ் விசாரணைக் கைதிகள் - ஆய்வில் தகவல்

தில்லியில் உள்ள சிறைகள் நெருக்கடி மிகுந்து காணப்படும் நிலையில், அவற்றில் அடைக்கப்பட்டுள்ளவா்களில் 91 சதவீதம் போ் விசாரணைக் கைதிகள் என இந்திய நீதி ஆய்வறிக்கை (ஐஜேஆா்) 2025-இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் வக்ஃப் வன்முறை: புதிய போராட்டம், வன்முறை நிகழாதிருக்க தீவிர கண்காணிப்பு

மேற்கு வங்க மாநிலம் முா்ஷிதாபாதில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதிதாக போராட்டம் அல்லது வன்முறை நிகழாததை உறுதி செய்யும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க... மேலும் பார்க்க