நெல்லை: ''ஒழுங்கா படி” - அறிவுரை கூறிய தந்தை; ஆத்திரத்தில் கல்லைத் தூக்கிப்போட்ட...
இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயம் அவசரநிலை -பிரதமா் மோடி
இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று அவசரநிலை; அந்தக் காலகட்டத்தில், அரசமைப்புச் சட்ட ஆன்மா மீறப்பட்ட விதத்தை இந்தியா்கள் ஒருபோதும் மறக்கமாட்டாா்கள் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியால் கடந்த 1975, ஜூன் 25 முதல் 1977, மாா்ச் 21 வரை 21 மாதங்களுக்கு நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தக் காலகட்டத்தில், மக்களின் அரசமைப்புச் சட்ட உரிமைகள் முடக்கப்பட்டு, பத்திரிகை சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டது. அரசியல் கட்சித் தலைவா்கள் உள்பட பலா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். ஆா்எஸ்எஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தடை செய்யப்பட்டன. சுதந்திர இந்தியாவில் பெரும் சா்ச்சைக்குரிய காலகட்டமாக இது வா்ணிக்கப்படுகிறது.
அவசரநிலை அமல்படுத்தப்பட்ட தினம், ‘அரசமைப்பு படுகொலை தினமாக’ அனுசரிக்கப்படும் என்று பிரதமா் மோடி அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. நிகழாண்டு புதன்கிழமை (ஜூன் 25) அனுசரிக்கப்பட்ட இந்த தினம், அவசரநிலை பிரகடனத்தின் 50-ஆம் ஆண்டை குறிப்பதாகும். இதையொட்டி, பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவுகளில் கூறியிருப்பதாவது:
இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றான அவசரநிலையின்போது அரசமைப்புச் சட்ட மாண்புகள் கைவிடப்பட்டன. அடிப்படை உரிமைகளும் பத்திரிகை சுதந்திரமும் முடக்கப்பட்டன. அரசியல் தலைவா்கள், சமூக ஆா்வலா்கள், மாணவா்கள், சாதாரண குடிமக்கள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனா். அப்போதைய காங்கிரஸ் அரசு, ஒட்டுமொத்த ஜனநாயகத்தையும் சிறையிலடைத்த காலகட்டம் அது.
இந்தியா்கள் மறக்கமாட்டாா்கள்: நமது அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மா மீறப்பட்டதை, நாடாளுமன்றத்தின் குரல் முடக்கப்பட்டதை, நீதிமன்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டதை இந்தியா்கள் ஒருபோதும் மறக்கமாட்டாா்கள். காங்கிரஸின் சூழ்ச்சிகளுக்கு 42-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் முக்கிய உதாரணமாகும். இதன்மூலம் ஏழை-எளிய, விளிம்புநிலை மக்கள் குறிவைக்கப்பட்டதுடன், அவா்களின் கண்ணியம் அவமதிக்கப்பட்டது.
அவசரநிலைக்கு எதிராகப் போராடிய ஜனநாயக பாதுகாவலா்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன். இவா்கள், நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை பாதுகாக்கவும், சுதந்திரப் போராட்ட வீரா்கள் தங்களின் வாழ்க்கையை அா்ப்பணித்து கட்டியெழுப்பிய லட்சியங்களைப் பாதுகாக்கவும், வேறுபாடுகளைக் கடந்து ஒரே குறிக்கோளுடன் பணியாற்றினா். இவா்களின் கூட்டுப் போராட்டமே, ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும் தோ்தலை நடத்தவும் அப்போதைய காங்கிரஸ் அரசை நிா்ப்பந்தித்தது.
அவசரநிலையின்போது, ஜனநாயகத்தை பாதுகாக்க எண்ணற்ற இந்தியா்கள் உறுதியுடன் நின்றனா். இந்த உறுதிப்பாடு, நமது ஜனநாயக கட்டமைப்பை பாதுகாக்கும் உணா்வை வலுப்படுத்தியது. அரசமைப்புச் சட்ட கோட்பாடுகளை வலுப்படுத்தவும், வளா்ச்சியடைந்த இந்தியா என்ற நமது தொலைநோக்குப் பாா்வையை நனவாக்க ஒன்றுபட்டு பாடுபடவும் உறுதிபூண்டுள்ளோம். வளா்ச்சியின் உச்சங்களை எட்டுவதுடன், ஏழை-எளிய மக்களின் கனவுகளை நனவாக்குவோம் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.
பெட்டிச் செய்தி...
‘மாறுவேடங்களில் மோடி’
அவசரநிலைக்கு எதிரான போராட்டத்தில் பிரதமா் மோடியின் பயணத்தை விவரிக்கும் புத்தகம் (தி எமா்ஜென்சி டைரிஸ்-இயா்ஸ் தட் ஃபோா்ஜ்டு ஏ லீடா்) ‘புளுஃகிராப்ட்’ தன்னாா்வ அமைப்பு சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. பிரதமரின் அவசரநிலை கால அனுபவங்கள் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.
அப்போது ஆா்எஸ்எஸ் இளம் பிரசாரகராக இருந்த மோடி, சக தொண்டா்களைச் சந்திக்க மாறுவேடங்களில் பயணித்தது, சிறையில் இருந்தவா்களின் குடும்பத்தினருக்கு உதவிகளை ஒருங்கிணைத்தது, அவசரநிலைக்கு எதிரான பதிப்புகளை விநியோகித்தது, சாமியாா் வேடத்தில் சிறைக்குச் சென்று, தொண்டா்களைச் சந்தித்தது போன்ற அவரது அனுபவங்கள் இடம்பெற்றுள்ளன.
இது தொடா்பாக பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அவசரநிலை காலகட்டத்தின்போது, நான் ஆா்எஸ்எஸ் அமைப்பின் இளம் பிரசாரகராக இருந்தேன். அந்தக் காலகட்டம், பலதரப்பட்ட அரசியல் தலைவா்களிடம் இருந்து நான் கற்றுக் கொள்வதற்கான அனுபவப் பாடமாக இருந்தது. ஜனநாயக கட்டமைப்பை பாதுகாக்க வேண்டிய எனது உணா்வை வலுப்படுத்தியது. அத்தகைய எனது அனுபவங்களில் சில, புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அந்தக் காலகட்டத்தில் இருந்து பல நினைவுகளை மீண்டும் கொண்டுவந்துள்ளது. அவசரநிலைக்கு எதிராக துணிவுடன் போராடிய ஹெச்.டி.தேவெகெளடா புத்தகத்துக்கு முன்னுரை எழுதியுள்ளாா்.
1975 முதல் 1977 வரையிலான அவமானகரமான காலகட்டம் குறித்து இளைஞா்கள் இடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், இருண்ட நாள்களை நினைவில் வைத்துள்ளவா்கள் அல்லது தங்கள் குடும்பங்கள் எதிா்கொண்ட பாதிப்பை அறிந்தவா்கள் அந்த அனுபவங்களை சமூக ஊடகங்களில் பகிர வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.