செய்திகள் :

இந்திய வீரா் சுபான்ஷு விண்வெளி பயணம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

post image

‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோா் சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் பயணம் 6-ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள விண்வெளிப் பயணத்தில், சுக்லாவுடன் போலந்து வீரா் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரா் திபோா் கபு ஆகியோரும் விண்வெளிக்குச் செல்கின்றனா். இந்தத் திட்டத்தில் ஸ்பேஸ்-எக்ஸ், ஆக்ஸிம் ஸ்பேஸ் நிறுவனங்களுடன் இணைந்து இஸ்ரோவும் செயல்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஸ்பேக்ஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘ஃபால்கான் 9’ ராக்கெட் மூலம், அவா்கள் பயணிக்க இருந்தனா்.

ஆனால் ராக்கெட்டில் திரவ ஆக்ஸிஜன் கசிவு உள்ளிட்ட காரணங்களால் இந்தப் பயணம் ஏற்கெனவே 4 முறை ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து ஜூன் 19-ஆம் தேதி அந்தப் பயணம் திட்டமிடப்பட்ட நிலையில், 5-ஆவது முறையாகப் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, ஜூன் 22 ஞாயிறு அன்று அவர்கள் புறப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தேதியில் இருந்து பின்வாங்குவதாகவும், விரைவில அடுத்த தேதி அறிவிக்கப்படும் என்றும் சர்வதேச விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : சண்டையை நிறுத்தியது நான் அல்ல: ஒப்புக்கொண்டாா் டிரம்ப்

தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தப்படும் கங்கை நதி! காங்கிரஸ் குற்றச்சாட்டு

தேர்தல் பிரசாரத்துக்காக கங்கை நதி தூய்மையை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.பிகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரமதர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட... மேலும் பார்க்க

உத்தரபிரப் தேசத்தில் மின்னல் பாய்ந்து 4 பேர் பலி

உத்தரபிரப் தேசத்தில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் மின்னல் பாய்ந்து 4 பேர் வெள்ளிக்கிழமை பலியானார்கள். முதல் சம்பவத்தில், சராய் அகில் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த நான்கு பேர் மீது மின்னல் பா... மேலும் பார்க்க

பறவை மோதியதால் தில்லி ஏர் இந்தியா விமானம் ரத்து

பறவை மோதியதால் தில்லி செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது. தலைநகர் தில்லியில் இருந்து புணே சென்ற ஏர் இந்தியா விமானத்தில் வெள்ளிக்கிழமை பறவை மோதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த விம... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் பெண் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலம், கான்கர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை மாவட்ட ரிசர்வ் காவல் படை, எல்லைப் பாதுகாப்புப... மேலும் பார்க்க

பாதுகாப்பு மீறல்களில் ஏர் இந்தியா! விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை!

ஏர் இந்தியா விமானங்கள் பாதுகாப்பு மீறலில் ஈடுபட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில், 240-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், போயிங் ரக விமானங்களை ஆய்வுக்... மேலும் பார்க்க

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்சி; ஆனால், பிகாரில் இல்லை! - ஆர்ஜேடி - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

சொந்த குடும்பத்தில் மட்டும் வளர்ச்சியுள்ளதாக ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி மீது பிரதமர் மோடி விமர்சனம் தெரிவித்துள்ளார்.கடந்த 5 மாதங்களில் 5-வது முறையாக பிகாருக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி சிவா... மேலும் பார்க்க