செய்திகள் :

"இந்து அல்லாதோர் வீட்டுக்குச் சென்றால் பெண்களின் காலை உடையுங்கள்" - பாஜக Ex. MP பேச்சால் சர்ச்சை

post image

மத்திய பிரதேசம் மாநிலத்தின், முன்னாள் போபால் நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. அவர் பெற்றோர்கள், தங்கள் மகள்கள் இந்து அல்லாதோர் வீடுகளுக்குச் செல்வதைத் தடுக்க வேண்டும் என்றும் மீறினால் அவர்களின் காலை உடைக்க வேண்டுமென்றும் பேசியிருக்கிறார்.

இந்த மாத தொடக்கத்தில் போபாலில் ஆன்மிக நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பிரக்யா, பெற்றோர்களின் விருப்பத்துக்கு மாறாக நடக்கும் பிள்ளைகளுக்கு 'உடல்ரீதியான' தண்டனைகளை வழங்க வேண்டும் எனக் கூறினார்.

Pragya singh Thakur

"உங்கள் மனதை வலிமைப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் மகள் உங்களுக்கு கீழ்படியவில்லை என்றால், இந்து அல்லாதவரின் வீட்டுக்குச் சென்றால், மறுசிந்தனைக்கு இடமின்றி அவள் காலை உடையுங்கள். பெற்றோர் சொல்வதைக் கேட்காத, சொற்களுக்குக் கீழ்படியாதவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.

உங்கள் குழந்தைகளின் நன்மைக்காக அவர்களை அடிக்க வேண்டியிருந்தால் அதிலிருந்து பின்வாங்காதீர்கள். பெற்றோர்கள் அப்படிச் செய்வது குழந்தைகளின் நன்மைக்காகத்தான். அவர்கள் துண்டுதுண்டாக வெட்டப்பட்டு கொல்லப்படுவதிலிருந்து காப்பதற்காக" எனப் பேசியுள்ளார் அவர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டுள்ளது.

மேலும் அதில், "மதிப்புகளைப் பின்பற்றாத, பெற்றோரின் பேச்சைக் கேட்காத, பெரியவர்களை மதிக்காத பெண்கள் வீட்டை விட்டு ஓடிப்போகத் தயாராக இருப்பவர்கள்... அவர்களைக் கண்காணியுங்கள்" என்றும் கூறியுள்ளார்.

Bhupendra Gupta
Bhupendra Gupta

பிரக்யா சிங் தாக்கூரின் கருத்துகளுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்வினையாற்றியுள்ளனர்.

விமர்சனம்

குறிப்பாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பூபேந்திர குப்தா, "மத்தியப் பிரதேசத்தில் ஏழு வழக்குகளில் (மத மாற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள்) மட்டுமே தண்டனை வழங்கப்பட்டிருக்கும்போது, ​​ஏன் இவ்வளவு சத்தமும் வெறுப்பும் பரப்பப்படுகிறது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பட்டாசு குப்பைகளை அகற்றிய எம்.பி. சச்சிதானந்தம்; உடன் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

தீபாவளி என்றாலே குதூகலம் தான் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் பட்டாசுகளை ஆர்வத்தோடு வெடித்து மகிழ்கின்றனர். ஒவ்வொரு வருடமும் பட்டாசுகள் எவ்வளவு அதிகமாக வெடிக்கபடுகிறதோ அதே அளவிற்கு காற்று... மேலும் பார்க்க

``குடிமக்களாகிய நமது முதன்மையான பொறுப்பு" - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

பிரதமர் மோடி குடிமக்களுக்கு சிறப்பு தீபாவளி செய்தியாக கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் ``தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன... மேலும் பார்க்க

Lokpal: '7 BMW கார்கள்':`ஊழல் பற்றி கவலைப்படாமல் ஆடம்பரங்களில் திளைக்கும் லோக்பால்'- பிரசாந்த் பூஷண்

பிரதமர், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் போன்ற நாட்டின் அதிமுக்கியத் தலைவர்கள் மீது ஊழல் புகார் எழுந்தால் அதை சுதந்திரமாக விசாரிக்க உருவாக்கப்பட்... மேலும் பார்க்க

"உங்கள் திருமண ஆர்டருக்கு காத்திருக்கிறோம்" - ராகுல் காந்தியிடம் திருமணம் செய்யச் சொன்ன கடைக்காரர்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் மிகவும் பழமையான சந்தாவாலா மிட்டாய் கடைக்கு மிட்டாய் வாங்க சென்றார்.அவரை கடை உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் அன்புடன் வரவேற்றார். ராஜீவ் ... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டில் மழை அதிகமாகும் வாய்ப்பு; போர்கால நடவடிக்கை தேவை" - திமுகவை வலியுறுத்தும் பழனிசாமி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யலாம் என்று சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியிருக்கிறது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மாலை 4 மணி வர... மேலும் பார்க்க

புதின் போன் காலுக்குப் பின், ஜெலன்ஸ்கியை நெருக்கும் ட்ரம்ப் - என்ன நடந்தது?

ரஷ்யா - உக்ரைன் போர் பொறுத்தவரையில், ஆரம்பதில் இருந்தே அமெரிக்கா உக்ரைனின் பக்கம் நின்று வருகிறது.சுமுக உறவு ஆனால், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதும், அவர் பெரிதும் ஆதரவு தந்துவருவது அவரின் நண்பர... மேலும் பார்க்க