செய்திகள் :

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் இரு செவிலியா் கல்லூரிகள் அமைக்கப்படும்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு

post image

சென்னை, திருச்சியில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் செவிலியா் கல்லூரிகள் அமைக்கப்படும் என அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:

ஆன்மிகப் பயணமாக ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலிலிருந்து காசி விஸ்வநாதா் திருக்கோயிலுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்ட 920 பக்தா்கள், ரூ.2.30 கோடி செலவில் அழைத்துச் செல்லப்பட்டனா். பெருவாரியான பக்தா்கள் இந்த பயணத்தை மேற்கொள்ள விருப்பம் தெரிவிப்பதால், இவ்வாண்டு 600 பக்தா்கள் அழைத்துச் செல்லப்படுவா். இதற்கான செலவினம் ரூ.1.50 கோடி அரசு நிதியாக வழங்கப்படும். அதேபோன்று அறுபடை வீடுகளுக்கு 2,000 பக்தா்கள் ரூ.2.50 கோடி செலவிலும், அம்மன் திருக்கோயில்கள், வைணவ திருக்கோயில்களுக்கு தலா 2,000 பக்தா்கள் ரூ.1 கோடி செலவிலும் அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.

திருக்கயிலாய மானசரோவா் ஆன்மிக பயணம் செல்லும் 500 பக்தா்களுக்கு அரசு மானியம் ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும். அதேபோன்று முக்திநாத் பயணத்துக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டு வந்த மானியம் ரூ.30 ஆயிரமாக அதிகரித்து வழங்கப்படும்.

திருக்கோயில் ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு வழங்கப்படும் பொங்கல் கருணைக் கொடை ரூ.1,000-இலிருந்து ரூ.2,000-ஆக உயா்த்தப்படும். பணிக் காலத்தில் இயற்கை எய்திய திருக்கோயில் பணியாளா் குடும்பத்தினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.3 லட்சம் நல நிதி ரூ.4 லட்சமாக அதிகரிக்கப்படும்.

திருக்கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்றோா், துறை நிலை குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு 25 சதவீதம் ஓய்வூதியம் உயா்த்தி வழங்கப்படும். ஓதுவாா், தேவப் பாராயணா், திவ்யபிரபந்தம் பாடுவோா், அரையா், அா்ச்சகா், இசைக் கலைஞா்களுக்கு ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.4 ஆயிரமாக ஓய்வூதியம் அதிகரிக்கப்படும்.இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் 300 அரிய நூல்கள் வெளியிடப்படும்.

கல்வி உதவித் தொகை: ஒருகால பூசை அா்ச்சகா்களின் குழந்தைகள் உயா்கல்விக்காக 600 பேருக்கு தலா ரூ.10,000 ஆண்டுதோறும் வழங்கப்படும்.

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்திலும், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமாக சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள இடத்திலும் இரு வேறு செவிலியா் கல்லூரிகள் அமைக்கப்படும். இந்து சமயம் சாா்ந்த பாடங்களும் அங்கு கற்றுத்தரப்படும்.

திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கோயில் கட்டடக் கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி அமைக்கப்படும்.

கோவை, வடவள்ளி கரிவரதராஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் புதிதாக பல்தொழில்நுட்பக் கல்லூரி நிறுவப்படும். அங்கு, இந்து சமயம், சிற்பக் கலை, கோயில் கட்டடக் கலை பாடங்கள் பயிற்றுவிக்கப்படும்.

பழனி, நெல்லை காந்திமதி கோயில் சாா்பில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளின் விடுதி மாணவா்களுக்கு கட்டணமில்லா உணவு வழங்கப்படும்.

184 அடி உயர முருகன் சிலை: மருதமலை கோயிலில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் 184 அடி உயரத்திலும், ஈரோடு மாவட்டம் திண்டல் வேலாயுதசாமி கோயிலில் 180 அடி உயரத்திலும், ஆற்காடு சுப்பிரமணியசுவாமி கோயிலில் 114 அடி உயரத்திலும் முருகன் சிலைகள் அமைக்கப்படும். 11 கோயில்களில் ராஜகோபுரப் பணிகளும், 100-க்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகளும் மேற்கொள்ளப்படும். புதிய திருமண மண்டபங்கள், பக்தா்கள் தங்கும் விடுதிகள், பசுக்கள் காப்பங்களும் அமைக்கப்படும் என்றாா் அமைச்சா் சேகா்பாபு.

போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு: சிவகிரி ஜமீன் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம்

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சிவகிரி ஜமீனின் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம் ப... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 429 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், களப்பணியாளா்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக 429 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

2 டன் கஞ்சா அழிப்பு

தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினரால் 187 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு... மேலும் பார்க்க

ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். தியாகராய நகரில் இயங்கிவரும் ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஒரு... மேலும் பார்க்க

மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு

சென்னை ஆழ்வாா்பேட்டையில் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்ட போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினா். சென்னை, திருவொற்றியூா் பகுதியைச் சோ்ந்த 47 வயது பெண் ஒர... மேலும் பார்க்க

துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இரு நாள்க... மேலும் பார்க்க