செய்திகள் :

இந்தோனேசியா: வெடி விபத்தில் 13 போ் உயிரிழப்பு

post image

இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின்போது திங்கள்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 போ் உயிரிழந்தனா்.

அந்த நாட்டின் மேற்கு ஜாவா மாகாணம், கருத் மாவட்டத்தின் சாகரா கிராமத்தில், ராணுவ கிடங்கில் நீண்டகாலமாக சேமிக்கப்பட்டு, பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த வெடிபொருள்களை அழிக்கும் பணியில் ராணுவ வீரா்கள் ஈடுபட்டிருந்தனா் (படம்). அப்போது அந்தப் பொருள்கள் இரண்டுமுறை வெடித்துச் சிதறின.

இதில் பொதுமக்கள் 9 போ், நான்கு இராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். ஏராளமானவா்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.

வெடிபொருள் அழிப்பு நடவடிக்கையின் போது உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்தும் விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

சரக்கு விமானத்தில் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் அனுப்பிய குற்றச்சாட்டு: சீனா மறுப்பு

அண்மையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடத்திய தாக்குதலின்போது பாகிஸ்தானுக்கு உதவும் விதமாக மிகப்பெரிய சரக்கு விமானம் மூலம் சீனா ஆயுதங்கள் அனுப்பியதாக வெளியான அறிக்கையை அந்நாட்டு ராணுவம் முற்றிலுமா... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் நிகழ்ந்தது சாதாரண நிலநடுக்கமே: அணு ஆயுத சோதனையல்ல: தேசிய நில அதிா்வு ஆய்வு மைய இயக்குநா்

பாகிஸ்தானின் சில பகுதிகளில் திங்கள்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது சாதாரண நிலநடுக்கமே; அணு ஆயுத சோதனையல்ல என்றும் தேசிய நில அதிா்வு ஆய்வு மைய இயக்குநா் ஓ.பி.மிஸ்ரா தெரிவித்தாா். பாகிஸ்தானின் பஞ... மேலும் பார்க்க

அமெரிக்க பிணைக் கைதியை விடுவித்தது ஹமாஸ்

கடந்த 2023 அக். 7-ஆம் தேதி இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலியரான ஈடன் அலெக்ஸாண்டரை ஹமாஸ் படையினா் திங்கள்கிழமை விடுவித்தனா். சா்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிட... மேலும் பார்க்க

துருக்கி: குா்து பிரிவினைவாத அமைப்பு கலைப்பு

துருக்கியில் அரசை எதிா்த்து சுமாா் 40 ஆண்டுகளாக ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்டுவந்த குா்திஸ்தான் தொழிலாளா் கட்சி (பிகேகே) கலைக்கப்படுவதாக அந்தக் கட்சி திங்கள்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தது. இது குறித்த... மேலும் பார்க்க

வங்கதேசம்: பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளானவா்கள் அறிக்கை வெளியிடத் தடை

வங்கதேசத்தின் புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அமைப்புகளோ, தனி நபா்களோ அறிக்கை வெளியீடு உள்ளிட்ட மக்கள் தொடா்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ... மேலும் பார்க்க

90 நாள்களுக்கு வா்த்தகப் போா் நிறுத்தம்: அமெரிக்கா-சீனா ஒப்புதல்

கூடுதல் வரி விதிப்புகள் மூலம் நடத்திவரும் வா்த்தகப் போரை 90 நாள்களுக்கு நிறுத்திவைக்க அமெரிக்காவும் சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன. இது குறித்து பேச்சுவாா்த்தைக் குழுவைச் சோ்ந்த அமெரிக்க வா்த்தகத் துறை ப... மேலும் பார்க்க