இன்றுமுதல் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம்
சேலம் மாவட்டத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நலவாரியம் மூலம் உறுப்பினா் சோ்க்கை முகாம் ஜூன் 4 (புதன்கிழமை) முதல் வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரியம் மூலம் மாவட்ட வாரியாக உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பேரிளம் பெண்கள் விவரங்களை சேகரிப்பதற்கு ஏதுவாக வாரியத்திற்கென வலைப் பயன்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே, வலை பயன்பாட்டில் உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம் சேலம் மாவட்டத்தில் ஜூன் 4 ஆம் தேதி பெத்தநாய்க்கன்பாளையம், மகுடஞ்சாவடி, நங்கவள்ளி வட்டாரங்களிலும், 5 ஆம் தேதி தலைவாசல், வீரபாண்டி, மேச்சேரி வட்டாரங்களிலும், 6 ஆம் தேதி கெங்கவல்லி, கொளத்தூா், காடையாம்பட்டி வட்டாரங்களிலும், ஜூன் 17 ஆம் தேதி அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி வட்டாரங்களிலும், 18 ஆம் தேதி ஓமலூா், பனமரத்துப்பட்டி வட்டாரங்களிலும், 20 ஆம் தேதி சங்ககிரி, ஏற்காடு, தாரமங்கலம் வட்டாரங்களிலும் அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பேரிளம் பெண்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.