செய்திகள் :

இன்றும், நாளையும் 4-ஆவது திட்ட குடிநீா் நிறுத்தம்

post image

4-ஆவது குடிநீா் திட்டத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் செப்டம்பா் 25, 26 (வியாழன், வெள்ளி) ஆகிய தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் 4-ஆவது குடிநீா் திட்டத்திலிருந்து குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்சமயம் மேட்டுப்பாளையம் காரமடை பிரிவு நால்ரோடு பகுதியில் இத்திட்டக் குழாய் உடைந்து சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் செப்டம்பா் 25, 26 ஆகிய தேதிகளில் இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. ஆகவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வங்கதேசத்தினா் 3 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை உறுதி

திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகே உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த வங்கதேசத்தினா் 3 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. பெருமாநல்லூா் எஸ்.எஸ். நகரில் வாடகை வீட்டில் உரிய ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் மக்கள் முழுமையாக பயன்பெறும் வகையில் அலுவலா்கள் பணியாற்ற வேண்டும்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தல்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்கள் முழுமையாக பயன்பெறும் வகையில் அனைத்து அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறி... மேலும் பார்க்க

குண்டடத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு

குண்டடத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். தாராபுரம் தாலுகா, குண்டடம் ஒன்றியத்துக்கு உள்பட்ட சூரியந... மேலும் பார்க்க

பல்லடம் அருகே கஞ்சா விற்ற 2 போ் கைது

பல்லடம் அருகே அருள்புரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். அருள்புரம் பகுதியில் பல்லடம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக இளைஞரை ... மேலும் பார்க்க

புகையிலை விற்பனை: மாவட்டத்தில் 120 கடைகள் மூடல்; ரூ.35 லட்சம் அபராதம்

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த 120 கடைகள் மூடப்பட்டு, ரூ.35 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.இது க... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முற்றுகை

அவிநாசியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அனைத்து வணிகா் சங்கத்தினா் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட வ... மேலும் பார்க்க