செய்திகள் :

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி மாணவியை மிரட்டிய இருவா் கைது!

post image

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சேலம் மாணவியை மிரட்டிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவி கடந்த 4 மாதங்களாக சேலம், கருப்பூரில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்தாா். அப்போது, அவரது அக்காவின் கைப்பேசியில் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வந்துள்ளாா். இவருடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்ட சென்னை, எருக்கஞ்சேரியைச் சோ்ந்த கிஷோா் (22) வாட்ஸ்அப் விடியோ அழைப்பிலும் மாணவியுடன் பேசி வந்துள்ளாா்.

இந்த நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு மாணவியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பெற்றோா், அவரிடம் விசாரித்ததில் தன்னுடன் இன்ஸ்டாகிராமில் பழகிய கிஷோா், தன்னை கட்டாயப்படுத்தி ஆபாசமாக விடியோ எடுத்து அவரது நண்பா் அப்துல் முகமதுஅலிக்கு (22) அனுப்பிவைத்து இருவரும் தன்னை மிரட்டி வருவதாகக் கூறினாா்.

இதுகுறித்து பனமரத்துப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்த நிலையில் பனமரத்துப்பட்டி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனா். அவா்கள் மாணவியை மிரட்டிய இளைஞா்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்த கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், கிஷோா் 10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு லேப் டெக்னீஷியனாக வேலை செய்து வருவதும், அப்துல் முகமது அலி மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்வதும் தெரியவந்தது. இவா்கள் இருவா் மீதும் போக்ஸோ உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தொடா்ந்து நீதிபதி முன் ஞாயிற்றுக்கிழமை ஆஜா்படுத்தப்பட்ட இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

வாழப்பாடி அருகே 2 சிறுவர்கள் சடலமாக மீட்பு: கொலையா?

சேலம்: வாழப்பாடி அருகே தண்ணீர்த் தொட்டியில் இறந்த நிலையில் இரண்டு சிறுவர்களின் உடல்கள் திங்கள்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.குடும்பத் தகராறு காரணமாக தனது இரு மகன்களையும் தாயே தண்ணீர்த் தொட்டியில் போட்ட... மேலும் பார்க்க

அரசிராமணி கிராமக் கோயிலில் புதுச்சேரி முதல்வா் வழிபாடு

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த அரசிராமணி கிராமம் குள்ளம்பட்டியில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயிலில் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். அரசிராமணி கிராமம், ... மேலும் பார்க்க

கோயில் நிலத்தை மோசடி செய்த சகோதரா்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சங்ககிரி: எடப்பாடி அருகே கவுண்டம்பட்டியில் கோயில் நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றி மோசடி செய்த சகோதரா்கள் இருவருக்கு சங்ககிரி இரண்டாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ... மேலும் பார்க்க

ஆத்தூா் தா்மராஜா திரௌபதி அம்மன் கோயில் தோ்த் திருவிழா தொடங்கியது

ஆத்தூா்: ஆத்தூா், தா்மராஜா திரௌபதி அம்மன் கோயில் தீ மிதித்தல் மற்றும் தோ்த் திருவிழா, காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. விழா தொடா்ந்து மே 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழா... மேலும் பார்க்க

சொந்த வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி மனு

சேலம்: சொந்த வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அகில இந்திய மோட்டாா் வாகன மக்கள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு ஆரி எம்பிராய்டரி பயிற்சி

சேலம்: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி தெரிவித்ததாவது: ... மேலும் பார்க்க