செய்திகள் :

இபிஎஃப்ஓ சேவைகளை மேம்படுத்த புதிய ஐடி மென்பொருள்: மே-ஜூனில் அறிமுகம்: மத்திய அமைச்சா் மாண்டவியா

post image

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சேவைகளை மேம்படுத்த மே அல்லது ஜூன் மாதத்தில் புதிய தகவல் தொழில்நுட்ப (ஐடி) மென்பொருள் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

9 கோடிக்கும் அதிகமான இபிஎஃப்ஓ பயனாளிகளுக்கு சேவையை மேம்படுத்தும் நோக்கில், டிஜிட்டல் முறையில் பெரும் மாற்றத்தை இபிஎஃப்ஓ மேற்கொள்ள உள்ளது. இதற்காக நிகழாண்டு மே அல்லது ஜூன் மாதங்களில் புதிய தகவல் தொழில்நுட்ப மென்பொருள் அறிமுகம் செய்யப்படும். இந்த நடவடிக்கை பயனாளிகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட, தடையற்ற சேவைகளை வழங்க மேற்கொள்ளப்பட உள்ளது.

ஏடிஎம்களில் இருந்து பணம்: புதிய மென்பொருள் வாயிலாக தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி கோரிக்கைகளை வேகமாக கையாள்வதன் மூலம், ஏடிஎம்களில் இருந்தே பயனாளிகள் பணம் எடுத்துக்கொள்ளலாம்.

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கான கோரிக்கைகள் மற்றும் திருத்தங்களுக்கு விண்ணப்பங்களை பூா்த்தி செய்ய சிக்கலான மற்றும் நீண்ட நடைமுறைகள், நேரில் வருகை தருதல் ஆகியவற்றைப் புதிய மென்பொருள் ஒழிக்கும்.

இதன் மூலம் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கான கோரிக்கைகளுக்கு விரைந்து தீா்வு அளிக்கப்படுவதால், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைந்து பணம் வரவு வைக்கப்படும்.

தற்போது அரசு உத்தரவாதத்துடன் இபிஎஃப்ஓவிடம் மொத்தம் ரூ.27 லட்சம் கோடி உள்ளது. இந்த நிதிக்கு 8.25 சதவீதம் வட்டி அளிக்கப்படுகிறது.

ஓய்வூதிய முறையை மேம்படுத்தி வலுப்படுத்தும் நோக்கில் அடல் ஓய்வூதிய திட்டம், பிரதமரின் ஜீவன் பீமா திட்டம், ஷ்ரமிக் ஜன் தன் திட்டம் உள்பட பல்வேறு சமூக நலத் திட்டங்களை ஒருங்கிணைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இஎஸ்ஐசி பயனாளிகளுக்கு இலவச சிகிச்சை: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தொழிலாளா்கள் மாநில காப்பீட்டு கழக (இஎஸ்ஐசி) பயனாளிகள் இலவச மருத்துவ சிகிச்சை பெறும் முறை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த வரையறைக்குள் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் தோ்ந்தெடுக்கப்பட்ட தனியாா் மருத்துவமனைகளும் கொண்டுவரப்படும் என்றாா்.

குறைந்த விலையில் 5ஜி! வோடாஃபோன் ஐடியா அதிரடி அறிவிப்பு!

வோடாஃபோன் ஐடியா நிறுவனம் குறைந்த விலையில் 5ஜி திட்டத்துக்கான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் 5ஜி இணைய சேவையை வோடாஃபோன் ஐடியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. தற்போது மும்பையில் மட்டுமே முழ... மேலும் பார்க்க

விடைத்தாளுடன் ரூ. 500: ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்த 10ஆம் வகுப்பு மாணவர்கள்!

பெலகாவியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாளில் செய்த செயல் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி ந... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

மத்திய பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகரில் வாகனச் சோதனையின்போது, 33 வயதான பெண்ணிடம் காவல் அத... மேலும் பார்க்க

திருச்சூரில் வீட்டு முற்றத்திற்குள் நுழைந்த நாய்: கொலையில் முடிந்த தகராறு

திருச்சூரில் நாய் தொடர்பாக அண்டை வீட்டாரிடம் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருக்கிறது. கேரள மாநிலம், திருச்சூரில் வசித்து வருபர்கள் ஷிஜோ(42), ஜோசப்(69). அண்டை வீட்டாரான இருவருக்கும் இடையே வீட்டின் மு... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றத்தால் உள்நாட்டுப் போர்: பாஜக எம்.பி.யின் கருத்தை கட்சித் தலைமை நிராகரிப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக பாஜக எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவுகளைச் சுட்டிக்காட்டிய பாஜக எம்.பி. நிஷிகாந்த்... மேலும் பார்க்க

நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய வேன்: ஓட்டுநர் காயம்

பெங்களூரு விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ விமானம் மீது டெம்போ வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் இன்ஜின் பழுதுபார்ப்... மேலும் பார்க்க