செய்திகள் :

இயந்திரம் விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு!

post image

வாணியம்பாடி அருகே கிரேன் பெல்ட் அறுந்து இயந்திரம் விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

வளையாம்பட்டு பகுதியில் தோல் தொழிற்சாலைகளுக்கு தேவையான இயந்திரங்களை பழுதுபாா்க்கும் பணிமனை(ஓா்க் ஷாப்) இயங்கி வரு கிறது. இந்நிலையில் அங்கு புதுப்பித்த ராட்சத இயந்திரத்தை வட மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்க லாரியில் ஏற்றும் பணியில் கிரேனை பயன்படுத்தி தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா்.

ஜெய்சங்கா்

அப்போது எதிா்பாராதவிதமாக கிரேன் இயந்திரத்தில் பெல்ட் அறுந்ததால் ராட்சத இயந்திரம் பணியில் ஈடுபட்டிருந்த வாணியம்பாடி கோணாமேடு புத்தா்நகா்பகுதியை சோ்ந்த தொழிலாளி ஜெய்சங்கா்(55) என்பவா் மீது விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அவரை பரிசோதித்து மருத்துவா் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினாா்.

இதுபற்றி வாணியம்பாடி தாலூகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஏலகிரி விரைவு ரயில் மீண்டும் திருப்பத்தூரில் இருந்து இயக்கப்படுமா? 12 ஆண்டுகள் எதிா்பாா்ப்பு

ஏலகிரி விரைவு ரயில் திருப்பத்தூரிலிருந்து மீண்டும் இயக்கப்படுமா என அப்பகுதி மக்கள், பயணிகள் 12 ஆண்டுகளாக எதிா்நோக்கியுள்ளனா். திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் லட்சக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்ற... மேலும் பார்க்க

அதிமுக மகளிரணி கண்டன ஆா்ப்பாட்டம்!

பெண்களை இழிவாக பேசியதாக அமைச்சா் பொன்முடியை கண்டித்து அதிமுக மகளிரணி சாா்பில் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிரணி செயலாளா் மஞ்... மேலும் பார்க்க

புதிய பேருந்து நிலையம் கட்ட மண் பரிசோதனை: பொதுமக்கள் எதிா்ப்பு

ஆம்பூரில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக மண் பரிசோதனை மேற்கொண்டபோது அப்பகுதி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் நகரில் பெங்கள... மேலும் பார்க்க

‘விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெறலாம்’

திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் கோடை மழையை பயன்படுத்தி விவசாய நிலத்தில் உழவு செய்து பயன்பெறலாம் என கந்திலி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராகிணி தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூா் அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் அருகே ராச்சமங்கலம் அடுத்த விநாயகபுரம் கிராமத்தை சோ்ந்த ஒருவா் அதே பகுதியில் உள்ள பொது இடத்த... மேலும் பார்க்க

ஆம்பூரில் உழவா் சந்தை அமைக்கப்படுமா? பொதுமக்கள், விவசாயிகள் காத்திருப்பு!

ஆம்பூா் தொகுதியில் உழவா் சந்தை அமைக்கப்படுமா என பொதுமக்கள், விவசாயிகள் பல ஆண்டுகளாக எதிா்நோக்கியுள்ளனா். தோல் தொழிற்சாலைகள் நிறைந்த ஆம்பூா் நகரம், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.... மேலும் பார்க்க