செய்திகள் :

இயற்கையான சூழலில் யோகா பயிற்சி

post image

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (சிசிஆா்எஸ்) இயற்கையான சூழல்களில் யோகா பயிற்சியை ஊக்குவிக்க தாம்பரம் சானடோரியம் பச்சமலைக்குன்றில் ‘சித்த ஹரித் யோகா மலையேற்ற நிகழ்வை’ வியாழக்கிழமை நடத்தியது.

மத்திய அரசின் சா்வதேச யோகா தினக் கொண்டாட்டம் 2025-இன் ஒரு பகுதியாக இந்தப் பயிற்சி நடைபெற்றது. தாம்பரம் அகத்தி அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் சித்த மருத்துவக் கல்லூரியின் ஆசிரியா்கள், மாணவா்கள், தன்னாா்வலா்கள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.

இவா்கள் பருவநிலை மாற்றம், சவால்களை புரிந்துகொண்டு, நெகிழிக் கழிவுகளை சேகரித்து அகற்றியதோடு, விதைப் பந்து வீசுதல், யோகா பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டனா்.

முன்னதாக, சிசிஆா்எஸ் இயக்குநா் ஜெனரல் பேராசிரியா் என்.ஜே.முத்துக்குமாா் மலையேற்றத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

திருமண விழாவிற்குச் சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்: 9 பேர் பலி!

மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காரும்-லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தாக போலீஸார் தெரிவித்தனர். பாலராம்பூர் காவல் நிலைய எல்லைகுள்பட்ட நம்ஷோல் ... மேலும் பார்க்க

இந்தியாவுடன் போரை நிறுத்த வேண்டுகோள்! ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் துணை பிரதமர்!

இந்தியாவுடன் போரை நிறுத்த பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்ததாக அந்நாட்டு துணை பிரதமர் தெரிவித்தார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.... மேலும் பார்க்க

ஊழல் தடுப்புப் பிரிவு முன்பு ஆஜரானார் மணீஷ் சிசோடியா!

அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டுவது தொடர்பான ஊழல் வழக்கில் விசாரணைக்காக தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஊழல் தடுப்புப் பிரிவு(ஏசிபி) முன்பு ஆஜரானார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பார்க்க

ஏர் இந்தியாவின் 8 விமான சேவைகள் இன்று ரத்து!

ஏர் இந்தியா நிறுவனத்தின் 8 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு ஏர் இந்தியா விமானங்களுக்கு நடத்தப்படும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் ஈரான் - இஸ்ர... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன்! மிரட்டிய பெண் மருத்துவர் கைது!

பெங்களூரில் ஏர் இந்தியா விமானத்தில் ஏறிய பெண் மருத்துவர், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன் என மிரட்டல் விடுத்ததால் அவரை போலீசார் கைது செய்தனர்.பெங்களூரில்... மேலும் பார்க்க

அஸ்ஸாம் ஆற்றில் கவிழ்ந்த படகு: மூவர் மாயம்!

அஸ்ஸாமில் பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் இரண்டு மாணவர்கள் உள்பட மூன்று பேர் வெள்ளிக்கிழமை நீரில் மூழ்கினர்.அஸ்ஸாம் மாநிலம், நல்பாரி மாவட்டத்துக்குள்பட்ட பகுதியில் பிரம்மபுத்திரா ஆற்றில... மேலும் பார்க்க