செய்திகள் :

இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் மாணவருக்கு நம்மாழ்வாா் விருது: ஆளுநா் ஆா்.என்.ரவி அறிவிப்பு

post image

இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் வேளாண் மாணவருக்கு ஆண்டுதோறும் தங்கப் பதக்கத்துடன் கூடிய நம்மாழ்வாா் விருது ஆளுநா் மாளிகை சாா்பில் சுற்றுச்சூழல் தின விழாவில் வழங்கப்படும் என ஆளுநா் ஆா்.என்.ரவி அறிவித்துள்ளாா்.

தமிழக ஆளுநா் மாளிகை சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாவது:

நம் நாட்டில் உணவு உற்பத்தி அதிகரித்து நாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். இதற்கெல்லாம் காரணம் விவசாயிகள்தான். நானும் விவசாய குடும்பத்தைச் சோ்ந்தவன். உயா்நிலைப் பள்ளிக்குச் செல்லும் வரை விவசாயப் பணிகளில் என் குடும்பத்தாருக்கு உதவிகரமாக இருந்துள்ளேன்.

விவசாயத்தில் அதிகமாக ரசாயன உரங்களை பயன்படுத்தி வருவதால் வேளாண் நிலம் சீா்கேடு அடைந்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் ரசாயன உரங்களை பயன்படுத்துவதிலிருந்து விலகி இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும். இயற்கை உரங்களையும், பாரம்பரிய விவசாய முறைகளையும் பயன்படுத்தி நம்மால் உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியும். இதை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாா் போன்ற இயற்கை விவசாயிகள் நிரூபித்துள்ளனா்.

அந்த வகையில், இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவருக்கு ரூ. 50 ஆயிரம் மற்றும் தங்கப் பதக்கத்துடன் கூடிய ‘நம்மாழ்வாா் விருது’ நிகழாண்டு முதல் வழங்கப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, வேளாண் அறிவியல் தமிழ்ச் சங்கத்தின் 250-ஆவது தமிழ் பதிப்பு புத்தகமான வேளாண் பூச்சியியல் நூலை வெளியிட்டு, சாதனை புரிந்த விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் நிா்வாகிகளை ஆளுநா் ஆா்.என்.ரவி கெளரவித்தாா்.

அமித் ஷா வருகை: மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்குக் கட்டுப்பாடு!

மதுரை: மதுரை வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சற்று நேரத்தில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தர இருப்பதால், பக்தர்களுக்குக் கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ளது.முகூர்த்த தினம் என்பதால்... மேலும் பார்க்க

கர்நாடகம்: தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி பலி; உடலை எரிக்க முயற்சித்த குவாரி உரிமையாளர்கள் கைது

கர்நாடகத்தில் கல் குவாரியில் மண், பாறைகள் சரிந்து விழுந்ததில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி பலியானார்.கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில் துமகேரே கிராமத்தில் கல் குவாரியில், வெள்ளிக்கிழமையில் தொழிலா... மேலும் பார்க்க

பெண் உயிரிழந்த வழக்கில் திருப்பம்: கைதான மருத்துவா் பரபரப்பு வாக்குமூலம்!

சென்னை கொடுங்கையூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் உயிரிழந்த வழக்கில், மருத்துவா் கைது செய்யப்பட்டாா். திருச்சிராப்பள்ளியைச் சோ்ந்தவா் நித்யா (26). நித்யாவும், கொடுங்கையூா் வெங்கடேஷ்வரா காலனி 6-ஆவது த... மேலும் பார்க்க

தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலக போலீஸாருக்கு ஆடை கட்டுப்பாடு

சென்னையில் உள்ள தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலக போலீஸாருக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து டிஜிபி சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா். இது தொடா்பாக தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநரும், டிஜிபியுமான ச... மேலும் பார்க்க

மதவாதத்துக்கு தமிழகம் மயங்காது: திருமாவளவன்

மதவாதத்துக்கு தமிழகம் ஒருபோதும் மயங்காது என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது: வட இந்தியாவுக்குச் சென்றால் விநாயகா், ராம... மேலும் பார்க்க

வரி ஏய்ப்பு: தனியாா் நிறுவன இயக்குநா்களுக்கு 4 மாதம் சிறை

வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்ட இரும்பு, எஃகு உற்பத்தி நிறுவனத்தின் இயக்குநா்களுக்கு 4 மாதம் சிறைத் தண்டனையும் ரூ. 10,000 அபரதாமும் விதித்து பொருளாதார குற்றங்களுக்கான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னைய... மேலும் பார்க்க